Friday, December 24, 2004

ரோசாவசந்த்,
ரொம்ப ஆறப்போட்ட பண்டம் சகிக்காது தான். என்ன பன்றது? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டச்சொன்னவர் பிறந்த நாளுக்கு முத நாள் இதைச் செய்ய வேண்டியிருக்கு. இந்த பதில் என்னைத் தனிப்பட்ட வகைகளில் தாக்கிய விடயங்களுக்கு மட்டும் முடிந்தவரையில். எனக்கு கிடைக்கும் குறைந்த விடுப்பு நேரங்களையும் இந்த வகை வெட்டி மயிறு பிடுங்களுக்கு செலவிடுவது ஜெயேந்தரர் வேஸ்ட்டாகிற வருத்தமிருந்தாலும் நாயைச் சுமந்தால் பீயை அள்ளித்தானே ஆகனும். வெறும் வெங்காயத்தை அதுவும் கஷ்டப்பட்டு கன்னெரிச்சலுடன் உரித்துப் பார்க்க இருபது பத்தி உங்களுக்கு தேவைப்பட்டிருக்கு. பரவாயில்லை சந்தோசம் தான் ஒருகாலத்தில் என் தோளில் கைவைத்து தடவித் தேடின ஆசிரியப் பெருந்தகைகளின் உளவியல் புரியாத நிலை. இப்பொழுது என்னிடம் பீஃ கறி தின்னத் தெரியுமா எனக் கேட்கும் உங்களுடைய உளவியல் புரிந்து கொள்ள தேவையில்லாத நிலை. மரியாதைக்கு இதைச் சொல்லிதான் ஆகவேண்டும் பீஃப் கறி சாப்பிடக்கூடாது ஆனால் ரெட்வைன் சாப்பிடலாம் என என் வைத்தியர் சொல்லியிருக்கார்.


1. முதலில் என் அயோக்கியத்தனத்தைப் பற்றி...
இதோ நீங்கள் கேட்ட உங்க்ளை பாசிசத்தின் லிட்மஸ் டெஸ்ட் என அறிமுகப்படுத்திய இழை இந்த தேதியில் Wednesday, April 28, 2004 அந்தப் பொன் வாசகம் இருக்கின்றது. இந்த இழையிலும் இந்தற்கு சற்று பின்னாலும் நடந்த பதிவுகளையும் படித்து விட்டு, இப்பொழுது இங்கே திருகிப் போன உலகம் என்ற தலைப்பிலும் அதற்கு பிந்தய எனது பதிவுகளையும் படிப்போர் என்னிடம் *எந்தவித மாற்றத்தையும் உணரமுடியாது*. நடந்த விவாதங்களும் ஏறக்குறைய ஒரே விசயம் தான். என்னைப் பொறுத்த வரை அப்பொழுது எழுதிய கள் தான் திரும்ப இந்த மொந்தையில் வந்தது.ஸ்டாடிஸ்டிக்ஸ் கள் கூட. ஆனால் அந்தப் பதிவுகளுக்கான உங்களது "பின்பாட்டு"க்களும் , இப்பொழுதைய பதிவுகளுக்கான உங்களின் "எதிர்பாட்டு"களையும் நீங்களே படிக்கலாம். "அனாதை" என்ற உருவத்தின் மீதான பார்வை எவ்வளவு தூரம் திரிந்து , "தேவைக்கேற்ற" வகைகளில் உளறலாகவும், மொட்டையாகவும், தட்டையாகவும் உருமாறியிருக்கின்றது என நினைக்கும் பொழுது சிரிப்பாகத்தான் இருக்கின்றது. இந்த வகை உருமாற்றங்களை கணக்கில் கூசாமல் கொள்ளாமல் மறைத்து பாசிசத்தின் லிட்மஸ் டெஸ்ட்டையும் "பஸ் மண்டை விவகார்மெல்லாம் நமக்கு தேவையா" என்பதையும் எந்த வித லாஜிக்கும் இல்லாமல் அல்லது பாப்பார லாஜிக் ஒன்றைமட்டும் துணைக் கொண்டு இணைத்துத் தானே நான் அயோக்கியனாக ஆக முடிகிறது? அதீத உளப்பூர்வமற்ற தன்னிறக்கங்கள் இந்த வகை வெற்று சொல்லாடல்களில் அடங்கமாட்டாமல் படக்கென்று வெளி வரத்தான் செய்யும். அதற்கான உளவியல் நோக்கங்கள் எனக்கு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில் "எவனும்" எனக்கு ஒரு பொருட்டல்லா நானும் எவனுக்கும் ஒரு பொருட்டாக இருக்க நினத்ததுமில்லை, நினைக்கப்போவதுமில்லை. அனாதை என்ற முகத்துடன் உலா வந்ததும் அதை உரத்திச் சொல்லவே.நீங்களாக என்னிடம் விசாரிப்புவகையில் வந்தீர்கள் , பதில் போட்டேன். பின் திண்ணைக்காக உழைத்து நேரம் செலவழித்து எழுதிய கட்டுரையை அவர்கள் பீச்சாங்கையில் விலக்குவது போல விலக்கித் தள்ள , அதனால் ஏற்ப்பட்ட காயத்துடன் என்னை ஏதோ ஒரு ஆள் என பொருட்படுத்து கடிதம் எழுதி அதன் காப்பிகளை எகப்பட்ட தலைகளுக்கும் அனுப்பிய நிலையில் உங்கள் மீது எனக்கு கரிசனம் வந்தது ஒரு உண்மை. அதன் பொருட்டே உங்களிடம் தனியாக ஒரு பதிவு ஆரம்பித்து எழுதச் சொல்லி கட்டாயப்படுத்தி அது நடக்காத நிலையில் பின் இதில் எழுத அழைத்திருந்தேன். அப்படிப்பட்ட அழைப்பும் உங்களுக்கு உங்கள் பொருட்டான நிலையை அதாவது உங்களது "சாரு நிவேதித்தனத்தைக்" காட்ட உதவியாக இருக்கின்றது இப்பொழுது. ஏதோ உங்களது அறிவுஜீவித்தனத்தில் குளிர்காய்ந்து எங்களது அறிவிலித்தன்மையை மேம்படுத்திக்கொள்ள போட்ட திட்டம் போல் உங்களுக்குப் பட்டது என் நேரம் தான் சார்.


2. போல்போட் மற்றும் ஸ்டாலினிஸ்டான நான் ..
அய்யா வணக்கம். ஆதிக்க வகையினரை முற்றாக அறிவியல்/இசை/இலக்கிய ஆற்றல்/கணித மேதைத்தனம் போன்ற எந்த வித விடயங்களுக்கும் சமரசமில்லாமல் துறக்க முடிந்தாலே ஒழிய கரையேற முடியாது அதுவும் ஆதிக்கப்படுத்தப்போட்டோர் சிறுபான்மையினராக இருக்கையிலே என்பது என் புரிதல். அதுவும் இந்த இந்திய திருநாட்டு ஆதிக்கச்சக்திகளை, அவர்களின் தொடர்பை, அவர்களது திந்தனைச் செல்வங்களைஅவர்களது அறிவியல் பங்களிப்பை அவர்களது அறவியல் பங்களிப்பை அவர்களின் மரபை தேவையென்றால் அவர்களின் மொழியைக் கூட இலகுவாக தூக்கியெறியலாம் . நன்றாகப் பார்த்தால் "ஒரு நாள் வாழ்க்கையில்" இந்தியத் திருநாட்டு செல்வங்கள் ஒரு மயிருக்கும் உதவுவதில்லை திங்கற உணவிலிருந்து உடுத்துகிற உடையிலிருந்து இருக்கின்ற இடம் வரை. "முன்னேறிய கோஷ்டிகள்" எல்லாம் இதை வேறு வழியில்லாமல் குற்ற உணர்ச்சியுடன் செய்வதையே ஆதிக்கப்படுத்தப்பட்டோர் இன்னமும் முனைப்பாக, மகிழ்சியாக, விடுதலையாக செய்யலாம். அதுவும் என் கருத்தாகத்தான் சொல்லியிருந்தேனே ஒழியே , இப்படி செய்யுங்கள் என யாருக்கும் "கை" காட்டும் விதமாகவோ "மேலெழுப்பி"விடுதலை "வாங்கிக்" கொடுக்கும் விதமாகவோ பிரசிங்கிக்க வில்லை. இப்படிச் சொன்னதை ஏதோ பிரசங்கம் நடத்தியது போல போல்போட் போல ஆட்களைக் "கொல்லுவதால்" அல்லது "அகற்றுவதால்" என்று நான் சொன்னதாகத் திரிப்பது கேலிக் கூத்து. வெளிப்படையாக இல்லாவிட்டாலும்"அதிகாரம் கிடைத்தால்" என்று இக்கு வைத்து சொன்னால் கூட. மோகந்தாஸ் காந்தி அன்னியப் பொருட்ட்களை பகிஷ்கரியுங்கள் கொண்டுவாருங்கள் எரிப்போம் எனச் சொன்னது கூட போல்போட்டில் தானே கொண்டு விட்டது இங்கு.


3 பெரியாரை ஏன் ஈவெரா எனும் விடயத்தில் ....
நான் சொன்னது "ஈவெராவை, ஈவெரான்ன ஈவெராக்கு உறைக்குமா." என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பட்டப் பெயரில் என்ன எழவு இருக்கின்றது என்பது தான்அது பெரியாரா இருந்தாலென்ன வேற்ந்த மயிரானக இருந்தாலென்ன? ஊருக்கெல்லாம் வெள்ளைக்கடிதம் என்றால் என்ன எனச் சொல்லிக்கொடுத்த நபருக்கு என்னைப் பெரியாரை ஈவெரா என்று சொல்லக் காரணம் என்ன எனக் கேட்கும் கேள்வியில் உள்ள வெள்ளைக்கடிதம் உறைக்காதது ஆச்சர்யம் தான்.நான் எவனையும் எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிடுவேன் எவன் அனுமதிக்கு காத்திருக்கவேண்டும்? 00களில் இருந்து 80களில் வரை உள்ள அத்துனை உரைநடைகர்த்தாக்கள் அது பாரதியாக இருக்கட்டும் இல்லை புதுமைப்பித்தனாக இருக்கட்டும் இப்பொழுது உள்ள சுரா வரையிருக்கட்டும், இந்த "அவன்" என்ற பதத்தையும் "அவர்" என்ற பதத்தையும் அலட்சியமாக சாதிகாட்டுவதாக உள்ள அறுவறுப்பான நிலையில் அதன் நீட்டிப்பாக பொதுவாகவே இந்தப்பட்டங்கள் மயிறு பிடிங்கித்தனங்களின் மீதான கடுப்பு. அதனால் எனக்கு பெரியாரை ஈவெரா என்பது சங்கராச்சாரியை சுவாமிநாதன் என்பதை விடமுக்கியமாகத் தான் படுகின்றது. இதை எந்த மயிறுக்கு உங்களுக்கு விளக்கவேண்டும். வெட்டித்தனமாக சினிமாவசனத்தை திரித்து "வொயிட் மெயில் விட்டா வசந்துக்கு பிடிக்காது" என பில்டப் போடும் அதே பில்டப் அனாதைக்கும் கொடுக்க வேண்டும் தானே. ஓ நீங்கள் ஸ்பெசல் கேட்டகிரியோ உங்களுக்கு மட்டும் தான் இந்த வெயிட் மெயில் எதிர்ப்பு ஏகபோக உரிமையோ?


2. இசை இலக்கியம் ன்னு ஏதோ ஒரு புள்ளியிலே இணையற போதுள்ள புளுக்க சுகத்துக்கு ....
இந்த வசனத்தை நான் சொல்ல முக்கிய காரணம், நான் பெரியாரை ஈவெரா என்று சொல்லுவதற்கான காரணம் - "இப்ப புது ஃபேஷன் ரவிகுமார் மாறி, பாப்பானுக்கு மஸாஜ் பண்ணிண்டு ஜெயமோகன் சொன்னதையே மாத்தி போட்டு இன்டெலெக்சுவல் பஜனை பண்ணவும் தேவை இருக்கும்." ன்னு நீங்கள் ஊகித்து குற்றம் சாட்டியதால். வெறும் ஊகத்தைவைத்து என்னை பாப்பனுக்கு மசாஜ் பன்றேல்னு குற்றம் சாற்றலாம் ஆனால் அத்ற்காக வேறெங்கேயும் சுற்றாமல்(உங்களைப் போல சுற்றுவது தற்போது என்னால் முடியாத காரியம்) உங்களோட இந்த வாக்கியத்திலிருந்தே "உதாரணமாய் வெங்கட் இந்த `நல்லத்தொர் வீணை செய்து..' பாட்டு பற்றி எழுதியிருக்கிறார். எல்லோரும் ரொம்ப ரசித்து கூட்டமாய் சந்தோஷமாய் இருக்கிறார்கள். நடுவில் போய் அபசகுனமாய் எழுத கொஞ்சம் கூச்சமாய் இருக்கிறது" என்று பாப்பானுக்கு மசாஜ் போட்டதை எடுத்தது அதுவும் ஒரு எதிர் வினையாக எழுதியது நேர்மையில்லாத ஒன்றா? நீங்கள் என்னை ஒரு ஊகம் போட்டு சாடலாம் அது நியாயம் , ஆனால் உங்க வாயிலேருந்தே விசயத்தை உறுவினது உங்களுக்கு வொயிட் மெயில் போடறதாயுடுமா? எந்த ஊர் நியாயம்? கூடவே இந்த வசனம் வேறே "மற்றபடி அநாதை விரும்பும் வகையில்/டிக்டேட் செய்யும்படி நான் சோலி பாக்கமுடியாது." உம்ம எவன்யா எந்த ஜோலி பாக்கச் சொன்னான்? உம்மகிட்ட இதை எழுது இதை எழுதாதன்னு எப்போ சொல்லியிருக்கேன்? கொஞசமாவது அடிப்படை நேர்மை இருக்கா என்னதான் ஆத்திரம் இருந்தாலும்?


3. இருந்தகாந்தியை போய், அம்பேத்கார் உயிர்பித்திருந்ததற்கு காரணமாய் கூறியதைதான் (அதற்கான தர்கத்தைத்தான்) நக்கல் பண்ணியிருந்தேன்.... அபத்தமாய் ஒளரலாய் மட்டும் குறிப்பிட்டேன்
அய்யா இதே வாதத்தை உங்களை இங்கே கூப்பிட்ட முன்பும் சொல்லியிருந்தேன். "கடுப்புக்கு முன்" பதிவுகளில் இருக்கு. இப்போவும் சொல்றேன். இதற்கு முன் "அபத்தமாய்" "ஓளரலய்" படாத வாதம் இப்போ படறதேன்? அப்பவே பட்டாலும் அப்பவே சொல்லாததேன்? சாருநிவாதித சமரசமின்மை அப்போ இல்லையா இல்லை அது சௌகரியத்துக்குத் தான் யூஸ் ஆகுமா? கூடவே ஒன்று மட்டும் சொல்கின்றேன் அம்பேத்கார் மட்டும் ஒரே தலித் தலைவர் அல்ல 1850 - 1960 வரையிலான காலகட்டத்தில். இங்கே தமிழ்நாட்ல கூட அதிதீவிரமான முக்கியமா வெள்ளைக்காரன் சப்போர்ட்ன்னு சொல்ற வாதத்தை வைச்சி பார்த்தாக்கூட தலித் தலைவர்கள் இருந்தாங்க. சர் பட்டமெல்லாம் கூட வாங்கியிருக்காங்க. பாரதி கூட பட்லர்ன்னு எல்லாம் அந்த வகைத் தலைவர்களை கிண்டல் அடிச்சிருக்கார். ஆனா அம்பேத்கார் மட்டும் தனித்து தெரிவதற்கு காந்தி தான்கிற என்னோட புரிதல் உங்களுக்கு அந்தளவுக்கு எரிசலை ஏற்படுத்த என்ன காரணம்? விளக்கி சொல்றதா இருந்தா நீங்க என்னட்ட எதிர்பார்க்கின்ற அதே அளவு "அறிவுஜீவிதத்"துடன் விளக்கி சொல்ல வேண்டியது தானே? இது என்ன "மொட்டை"யான "தட்டை"யான காரணம்? ஓ நாங்க மட்டும் தான் உழைத்து புழைத்து காட்டணும் உங்க மூடு சரியில்லன்னா நீங்கள் பீச்சங்கையில் தள்ளிவிட்டு போயிண்டே இருப்பேள் என்ன நியாயம்டா இது?


4. அநாதை வேண்டுமென்றே நான் சொன்னதை திரிப்பதாகவே படுகிறது .....
முதலில் "திருகிப் போன உலகம்" எழுதியது உங்கள் எழுத்தையோ உங்கள் கமெண்ட்டையோ எங்கும் பார்த்து அல்ல. திண்ணையிலோ அல்லது யாகு குழுமம் ஒன்றிலோ அல்லது தினகரனில் யாருடைய பேட்டியோ இவையாவற்றின் மீதான எனது பார்வையாகத் தான் எழுதியிருந்தேன் ஆனால் அதற்கான கமெண்டில் உங்களுடைய ஏதோ கமெண்டைவைத்து எழுதியதாக நினைத்துக் கொண்டு என்னுடன் நிழலுத்தம் ஆரம்பித்தீர்கள். அதன்பொருட்டே என்னை சீண்டும் விதமாக ஈவேரா - பெரியார் விடயத்தை வைத்து வெற்று ஈகோ யுத்தம் போட்டுவிட்டு , ஏதோ நான் ஈகோ வெறி கொண்டு ஆடுவதாக கமெண்ட்பகுதிகளிலும், இந்தக் கடைசி பதிவிலும் ஆட்டம் போட்டு இருக்கின்றீர்கள். என்னை ஈவெரா-பெரியார் விதமாக சீண்டியது காரணமாகவே "யோவ் ரோசாவசந்த்" என்று ஆரம்பித்து ஒரு கிண்டல் பதிவைப் போட்டிருந்தேன். அதிலும் உங்களைப் பற்றி தனிப்பட்ட வகையில் எதுவும் சொல்லாமல், உங்களைப் புண்படுத்தவெல்லாம் நினையாமல் எதற்கு பெரியார் எஃபக்ட் என்ற படமெல்லாம் எனத்தான் முடித்திருந்தேன். நான் சொன்னதை முற்றாக மறுக்காத நிலையில் அல்லது மறுதலிக்காத நிலையில், இந்த ஸ்டடிஸ்டிக்க்ஸ் பார்க்கும் சூத்திரத்தனத்திலிருந்து மேலெழுந்து அதை விரிவாக "பிரம்மசூத்திரம்" பார்க்கும் நிலைக்கு நான் உயரவேண்டும் என உங்களது "பாசம்" புரிந்தாலும் இந்த இடத்தில் எதற்கு? அப்படி விரிவாக பார்த்தாலும் நான் சொல்ல வருவதிலிருந்து "உண்மை" எந்த அளவிற்கு விலகி நிற்கும்? அந்த அளவு அக்கூரசி இந்த விவாத நோக்கிற்கு அதுவும் வலைப்பதிவுகளில் எந்தளவுக்கு அவசியம்? கூடவே இந்த வசனம் உழைப்பை வைத்து - "அனாதையிடத்தில் ஒரு மயிரும் கிடையாது மொட்டையாக திட்டினால் நிரூபிக்கபட்டுவிடும் என்ற வெகுளி(முட்டாள்?)த்தனம் தான்" தங்களால் இந்த வலைப்பதிவுகளில் எழுதியவற்றில், இந்த தளத்திலும்சரி உங்கள் தளத்திலும் இப்பொழுது சிம்புவின் சூனா அறுப்பு சூளுறுப்பு, உள்ளம் என்பது ஆமை வரை எந்தளவுன்னா உழைப்பு உழைச்சிருக்கேள்? கொஞ்சம் நெஞ்சைத் தொட்டு சொல்றேளா? ஓ இதெல்லாம் அடுத்தாத்து அம்புஜங்களுக்கு மட்டும் தானா? இந்த உழைப்பு/உழைப்பின்மை, அறிவுக்கூர்மை /வெகுளித்தன்மை, மாமனித/வெகுஜன பஜனையெல்லாம் ஒற்றப்பார்வைபார்த்து புறந்தள்ளும் பார்ப்பார வேலைன்னு நினைச்சுட்டுருந்தேன். பீஃப் தின்னாலும் அதே கதை தானா? தொலைபேசி இலாக்காவில் ஜெமோவுடன் கூட உழைத்த "நபர்களுடன்" நேக்கு அறிமுகம் உண்டு.அந்த அறிமுகங்களில் அறிந்த விடயம் அண்ணன் இரண்டு மணி நேரம் தான் "உழைப்பார்" மற்ற நேரமெல்லாம் புத்தகங்களுடன்ஓரத்தில் ஒதுங்கி விடுவார். மற்றோர் கேரமோ அரட்டையிலோ இறங்கியிறுக்கும் போது அண்ணன் புத்தகப்படிப்பில். அலுவலகக் கம்ப்யூட்டரில் ஜில்க்கானா சைட்டுகளுக்கு உலாவருபர் நீர். உங்களைப்போலவாதான் அடுத்தவா உழைப்பைப் பற்றிப் பேச தகுதி. இது இன்னிக்கு நேத்தைக்குநடக்கின்ற விடயம் கிடையாதே நூற்றாண்டு பஜனை ஆச்சே. என் "உழைப்பின்" தகுதி நேக்கு நன்னா தெரியும்னா. அதனாலே தான் இந்த இடத்தில்எழுதறேன் வேறே எந்த எடத்துலயும் "பிரசுரிக்க" நாக்கு தொங்கப் போடக் கூட நினைத்தது கிடையாது. இதோ இங்கே பெரியார் தேவை தேவையில்லை விவாதம் நடந்துண்டுருக்கு, போய் மல்லுகட்டுங்கோ யார் வேண்டான்னா? ஜெமோ ஈவெரா ஒரு கடப்பாறைன்னு போட்டு ஒரு மாமாங்கம் ஆகிறது . நான் தான் "வெகுளி" வெங்காய வெடி போடறவா. லெச்சுமி வெடியும் அணுகுண்டும் வச்சிண்டிருக்கேள், முற்றும் மாறுபடுவேன், முற்றும் மறுதலிப்பேன் ஜெமோவுடன் எதிர் கொண்டு எதிர்கொண்டு உயிர்தெழுவென்னெல்லாம் கீரிபாம்பு சண்டை விளம்பரம் பன்னின்டுருக்கேளே இது வரை கிழிச்சது என்ன? சிம்பு சூனாவைத் தவிற? உம்ம "உழைப்பு" மயிரையும் தான் பார்ப்போமே.


5. இந்தியன் எக்ஸ்பிஸ்ஸுக்கு துதியும், தலிஸ்தானுக்கு வேட்டும்....
maligned. malignedன்னா என்னா அர்த்தம்ன்னா? கொஞசம் சொல்லித்தரேளா? அந்த வரிக்கு dalistan site பற்றியும் இண்டியன் எக்ஸ்பிரஸ் பற்றியும் என்னோட கருத்த சொன்ன மாதிரி திரிக்க/திரியவைக்க வெல்லாம் அளவுக்கு மீறிய ஆத்திரம் வேணும் அல்லது அளவுக்கு மீறிய அலட்சியம் வேணும்.


6. தகவல்ரீதியாய் அநாதை உளரியிருப்பதால் பெரிய பிரச்சனையில்லை. ஈகோ கிளரபட்ட ...
தகவல்ரீதியா உளறலா? சிம்பிள் கேள்வி முதலமைச்சர் பதவி வர பெறும் பலம் இருந்த சென்னை மாகாணத்து ஜஸ்டிஸ்பார்ட்டிக்கும், "சம்பல்பூரில்" இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டியையும் ஒப்புமை படுத்தமுடியுமா? இது தான். இதற்கு உள்ளே இருக்கும் கேள்வி, இந்தத்தகவல் தேவையா என்பதே. யார் பதில்ல ஈகோ கிளரப்பட்டிருக்கு? சென்னை மாகானம் ஆந்திரா "முழுமையும்" கர்நாடகா "முழுமையும்" சேர்த்து இருந்ததா எப்போ உளறினேன். "திடுக்" கேள்வி பாணியிலேயே சென்னை மாகானத்து எல்லையில் இருந்த ஒரு பகுதி ஒரிஸாவா ஆகியிறுக்கு( உண்மையிலேயே ஆயிருக்கு சார். தேடி "உழைத்துப்" பாருங்கோ) அங்கேயும் எபக்ட்டு தேடமுடியுமான்னு கேட்டேன். ஜிகே ஜீரோ ஆனால் "அனாதை" சொன்ன தகவல்ல உளறல் இருக்கு. நல்ல லாஜிக்கான பதில்ன்னா இது. யாரோ "ஒருவருடன்" பேசிய விடயத்தை வைத்து எந்தவிதஉழைப்பு புழைப்புன்னு எந்த மயிறும் இல்லாமல் சென்னை மாகானத்து ஜஸ்டிஸ் பார்ட்டியுடன் கல்கத்தா பக்கம் உள்ள ஒரிஸாவில் இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டி ஒப்புமை செய்து ஜல்லியடித்து ஒளரிகிட்டே அடுத்தவனை ஒளருரான்னு சொல்றதுக்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும் அல்லதுஅளவுக்கு மிஞ்சிய ஆத்திரம் வேண்டும்.


சரி பீயை இந்த அளவுக்கு அள்ளினதே போதும். புள்ளையை இன்னிக்காவது போலார் எக்ஸ்பிரஸ் கூட்டிகிட்டு போகனும். அது தான் எனக்கு இப்போமுக்கியம்....


குட் பையெல்லாம் தேவையில்லன்னா, அந்த வகை சென்ஸிபிலிட்டியெல்லாம் ஸ்டுபிட் மிடில்கிளாஸ் அம்மாஞ்சிகளுக்குத் தானே நம்மைப் போல "சாருநிவேதித" மாற்றுக் கலகக்காரர்களுக்கு எதுக்கு அந்த கருமாந்திரங்கள்.


நன்றியுடன்,

அனாதை


பிகு - இந்த நன்றி எதற்குன்னு கேக்கிறதுக்கு முன்னாலே சொல்லிடறேன் பிரம்மச்சாரி சாமியார்ன்னு சொல்லிண்டு பெண்களோட கூத்தடிக்கிற மாதிரி அனாதைன்னு போட்டுகிட்டு கூட ஒரு ஆளையும் சேர்த்துகிட்டு இருக்கிறேன்னனு இனி எவரும் கிண்டல் அடிக்க வாய்ப்பு இல்ல பாருங்கோ அதுக்கு.

5 comments:

ROSAVASANTH said...

நன்றி, முடிந்தால் இன்று.

ROSAVASANTH said...

எனக்கும் சரி, அநாதைக்கும் சரி, இந்த விஷயத்தை மேலே இழுத்து செல்வது வெட்டியானதாக தெரிகிறது என்று நினைக்கிறேன். அநாதையின் இந்த பதில் போல், நேரம் கழித்து எழுதியிருக்கும் பட்சத்தில், என் பழைய பதிலும் சரி, இந்த பதிலும் சரி வேறு மாதிரி இருக்கும். இதை இப்போது எழுதுவதும், அநாதையை-அவருக்கு இருக்கும் நேர நெருக்கடியில்- மீண்டும் ஒரு பதிலை தர நிர்பந்திக்க கூடும், என்றாலும் பல காரணங்களால் இதை எனக்கு எழுத வேண்டியுள்ளது. என் பழைய பதிலில் எனக்கும், அல்லது குறைந்த பட்சம் எனக்கு, ஈகோவின் போக்கில் சில வார்த்தைகள் வந்திருக்கும் என்று தெரியும் என்றாலும், சில விஷய்ங்கள் அதை மீறி உண்மையானது என்று நினைக்கிறேன். அவற்றுள் முக்கியமானது இரண்டு விஷயங்கள் கீழே.

1. பெரியார் எஃபெக்ட் என்று எதுவுமே இல்லை, எல்லாம் ஸ்டாடிஸ்டிக்ஸ் படியே நடக்கிறது, புள்ளிவிவரமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற அநாதையின் கருத்தை நான் மிக கடுமையாக -ஜெயமோகன் சொல்வதை எதிர்பதை விட கடுமையாக - எதிர்கிறேன். காரணம் ஓரளவு சொல்லியாகிவிட்டது. மீண்டும் சொல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை, விவாதம் அது குறித்து இருந்தாலொழிய, அது குறித்து கேள்வி எழுப்பபட்டாலொழிய. அவ்வாறு எதிர்க்கும்போது சும்மா இருந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. நான் அநாதைக்கு காட்டமான எதிர்வினை வைத்த முதல் சந்தர்பம் அதுதான்.

2. அதே போல அநாதையை நான் கடுமையாய் எதிர்க்கும் இன்னொரு விஷயம் இப்போதும் அநாதை வலியிறுத்தி சொல்லியிருப்பது.

"ஆதிக்க வகையினரை முற்றாக அறிவியல்/இசை/இலக்கிய ஆற்றல்/கணித மேதைத்தனம் போன்ற எந்த வித விடயங்களுக்கும் சமரசமில்லாமல் துறக்க முடிந்தாலே ஒழிய கரையேற முடியாது அதுவும் ஆதிக்கப்படுத்தப்போட்டோர் சிறுபான்மையினராக இருக்கையிலே என்பது என் புரிதல். அதுவும் இந்த இந்திய திருநாட்டு ஆதிக்கச்சக்திகளை, அவர்களின் தொடர்பை, அவர்களது திந்தனைச் செல்வங்களைஅவர்களது அறிவியல் பங்களிப்பை அவர்களது அறவியல் பங்களிப்பை அவர்களின் மரபை தேவையென்றால் அவர்களின் மொழியைக் கூட இலகுவாக தூக்கியெறியலாம் "

அநாதையின் இந்த பார்வை போல்பாட்டில்தான் முடியும் என்று திடமாக நம்புகிறேன் -*அதிகாரம் கையில் இருக்கும் பட்சத்தில்*. அநாதை இதை தான் 'பிரசங்கிக்கவில்லை, அடுத்தவருக்கு அறிவுறுத்தவில்லை, கட்டயபடுத்தவில்லை என்று சொல்வதெல்லாம் உண்மை என்றே வைத்துகொண்டாலும் கூட. ஒருவேளை இணையத்தில் எழுத நேர்ந்திருந்தால், போல்பாட், ஸ்டாலின் அநாதையைவிட ஜனநாயகவாதிகளாக இருந்திருக்க முடியும். ஒரு சின்ன தெரு கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்திருந்தால் கூட பவர் என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

இது தவிர்த்துகூட, ஆதிக்க வகையினரின் 'அறிவியல்/இசை/இலக்கிய ஆற்றல்/கணித மேதைத்தனம் போன்ற எந்த வித விடயங்களை' நிராகரிக்க *முடியாது*, என்றே நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, அப்படி நிராகரிக்க துணிந்த ஒரு ஒடுக்கபட்ட ஆளுமை என் கண்ணில் தெரியவில்லை. ஒடுக்கபட்டவர்களுக்காக பேசியவர்களும் செய்ததிலை. பெரியார் அப்படிபட்ட கேஸ் என்பதுதான் ஜெயமோகனின் தீவிர பிரச்சாரம். அவருடய பிரச்சாரம் யாதார்த்ததில் பொய் என்பது மட்டுமல்ல, அங்கே அவர் நிராகரிப்பது என்பதாக சொல்வதும், விமர்சனத்தையும், *தாக்குதலையு*ம்தான் என்பது என் கருத்து. அதைவிட எல்லாம் முக்கியமாக, அநாதைக்கு இந்த பார்வை இளையராஜா என்ற தலித் மேதையை நிராகரிப்பதில் (தலித்தாக இவர் இல்லாத நிலமையில்) கொண்டுபோய் விடுகிறது. இது அபத்தம் மட்டுமில்லாது அயோக்கியதனமும் ஆகும். ராஜ்கௌவுதமன் குறித்து நான் எழுதிய விமர்சனத்தை (நிராகரிப்பு அல்ல, ராஜ்கௌதமனின் எழுத்துக்களை மிக முக்கியமாக பார்கின்றேன்) குறைகூறியவர், ஒரு பரிசிலனையே இல்லாமல் இளையராஜாவை நிராகரிக்கிறார். மற்றபடி அநாதையை, இந்த முடிவுக்கு இட்டு செல்லும், அடிப்படை காரணங்களாக அவர் நினைப்பதை எந்த *மாற்றமும் இல்லாமல்* நான் ஏற்றுகொள்கிறேன்.


இதை திடீரென்று சணடை வந்ததும் சொல்வதாக அநாதை நினைப்பது உண்மையல்ல. வெகுநாட்களாகவே நட்புரீதியாய் சொல்லிவருகிறேன். திண்ணையிலேயே சொல்லியிருக்கிறேன் ( http://www.thinnai.com/vivadh/topic.asp?TOPIC_ID=90&whichpage=2 ). இங்கேயேகூட அத்தகைய தொனி பல இடங்களில் வெளிப்பட்டிருப்பதை காணலாம். தனிபட்ட கடிதங்களில் வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன். ஸ்டாலினிஸ அமைப்பை விரும்பினால் ஒழிய அநாதை சொல்வதை நடைமுறைபடுத்த முடியாது என்று ஒரு மெயிலில் (நல்லவேளையாய்) சொல்லியிருக்கிறேன். ஆமாம், நட்பாய் பேசும்போது, மென்மையாய் சீனிதடவிதான் பேசமுடியும். சண்டை என்று வந்து, நட்பு என்ற பிரச்சனை தடையாக இல்லாதபின், நேரடியாக சொல்லமுடியும்.



இந்த இரண்டு விடயங்கள்தான் நான் கடைசியாய் எழுதியதன் அடிப்படை. இது குறித்து இப்போதும் என் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன் பேசியிராத எதையும் புதிதாகவும் சொல்லவில்லை. இதை தவிர்த்து உள்ளதை வேறு மொழியில் சொல்லியிருக்கலாம், தவிர்த்திருக்கலாம். அநாதையை 'பீஃப் சாப்பிடுவேளா?' என்று கிண்டலாய் கேட்டதற்கு உளபூர்வமாய் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் (அவர் அதை தோளில் கைவைத்து தேடுவதுடன் ஒப்பிட்டு பார்த்தாலும் பிரச்சனையில்லை) . அதில் அவருக்கு இருக்க கூடிய மருத்துவ பிரச்சனைகள் தெரியாது. ஊகிக்கவும் இல்லை. மற்ற விஷயங்கள் குறித்து சுருக்கமாய் என் பதில்.

1. என்னை குறித்த தன் கருத்து மாறவில்லை, நாந்தான் மாறியிருக்கிறேன் என்கிறார். சந்தோஷம்! இப்போது எழுதியது உட்பட, பாப்பார லாஜிக் என்றெல்லாம் சொல்வது/சொன்னது, பழைய கள்தானா என்று பார்பது அவர் வேலை. நான் பரிசீலித்த அளவில், இந்த 'பஸ் மண்டை' விவகாரத்தில் மட்டும் நான் தவறாய் வாசித்து புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதாக உணர்கிறேன். அதாவது, நான் சொன்ன சம்பல்பூர் விஷயம், 'சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து, ஒரிசாவில் போய்சேர்ந்த ஆந்திர இடத்தை' முன்வைத்து நான் என்னை பஸ் மண்டை என்று காண்பித்துகொள்ள 'ஜேமோ பாணி திடுக் செய்தி' , அவிழ்த்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுவதாக எடுத்துகொண்டேன்.அப்படி இல்லை என்பதாக இப்போது சொல்கிறார். நான் மீண்டும் வாசித்தவரையில் அவர் சொல்வது சரியாயிருக்க கூடும், நான் தான் தவறாய் வாசித்து விட்டேன் என்று உணர்கிறேன். ஆனாலும் நான் பொய் சொல்வதாக அல்லது ஜேமோ பாணி திடுக் செய்தி விடுவதாக குற்றம் சாட்டுவதாகத்தான் அவர் வரிகள் இருக்கிறது. இதற்கு முன் என்னை பற்றி அப்படி நினைத்தாரா என்று தெரியவில்லை.

என்னை பொறுத்தவரையில் நான் அநாதையின் நேர்மை மீது (இப்போதும்) மரியாதை வைத்திருக்கிறேன். 'அயோக்கியத்தனம் இல்லையா' அல்லது 'திரிப்பதாகத்தான் தெரிகிறது' என்பது நான் மதிக்கும் நேர்மையுடன் தொடர்புடையது அல்ல.அது தர்கத்தின் போக்கில் வெளிப்படும் நேர்மையின்மை குறித்தது. (தர்கத்தில் யாருமே நேர்மையாய் இருக்கமுடியாது என்பதை நான் ஏர்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். ) இப்போதும் அநாதையின் கோபம், எந்த முகபூச்சும் இல்லாத நேர்மையின் வெளிப்பாடு, என்பதாகவே எடுத்துகொள்கிறேன். அநாதையோடு நேரடியாய் ஒப்பிடவில்லை. புரிதலுக்கு உதாரணமய் சொல்கிறேன். போல்பாட் கூட நிச்சயாமாய் ஒரு அமேரிக்க கைக்கூலி இல்லை, தான் நம்பும் விஷயத்துக்கு நேர்மையாகவே இருந்திருக்க முடியும். அதற்காக அது சரி என்றோ, எதிர்காமல் விடப்படவேண்டியது என்றோ நினைக்கமுடியுமா? மற்றபடி அநாதை எழுதுவது திடீரென என் பார்வையில் உருமாறியதாய் எனக்கு தெரிய்வில்லை. அநாதையின் எழுத்தை 'மூர்க்கமான ஒற்றை பாரவை'யாக ஏற்கனவே பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அதற்கு பிறகும் மேலே இப்போது சொன்னவைகளை, படிப்படியாக பல சந்தர்பங்களில் சொல்லி, மெல்லிய எதிர்பு காட்டி, நட்பு முறிந்ததாய் நினைத்த நிலையில், (கொஞ்சம் என் ஈகோவின் போக்கில்) சொன்னது அல்லாமல், புதிதாய் ஏதாவது இருந்தால் அநாதை எனக்கு அறிய தரவும். வார்த்தைக்கு சொல்லவில்லை, உண்மையிலேயே அது எனக்கு பயனுடையதாக இருக்கும்.

மற்றவை குறித்து சொல்ல எதுவும் இல்லை.

2. மேலே உள்ள 2ஐ பார்கவும்.

3. ஈவேரா/பெரியார் விஷயத்தில் நான் விட்டது வொயிட்மெயில் இல்லை. அதாவது அநாதையை அதற்காக குற்றம் சாட்டுவதோ, விசாரிப்பதோ, கட்டாயபடுத்துவதோ அதன் நோக்கம் இல்லை. அது வெறும் கிண்டல், மற்றும் அந்த விளிப்பு ஜெயா, சோ போன்றவர் பார்வையுடன் ஒத்துபோவதை சுட்டிகாட்டுவதும். அதற்கு அநாதை பதில் தர, மேலே எழுதவேண்டி வந்தது.

4. "பாப்பனுக்கு மசாஜ் பண்ணுவதாய்' நான் ரவிக்குமாரைத்தான் குறிப்பிட்டேன். அநாதையை அல்ல. எல்லா தளங்களிலும் பெரியார் ஒரு தாக்கபடும் இலக்காக இருப்பதை குறிப்பிட்டு, அநாதை செய்வதில் புதிதாய் என்ன இருக்கிறது என்றுதான் சொன்னேன். அது அநாதையை "வெறும் ஊகத்தைவைத்து என்னை பாப்பனுக்கு மசாஜ் பன்றேல்னு குற்றம் சாற்றலாம் " என்று எப்படி வாசிக்க வைத்தது என்று புரியவில்லை. இப்போது ஒரு வாதத்திற்காக வலிந்து வாசிப்பதாகத்தான் எனக்கு படுகிறது.

அதை தொடர்ந்தும் அநாதை மீண்டும் தர்கத்தின் போக்கில், தன் நேர்மையின்மையை காட்டுகிறார். நான் எழுதியதில் தெளிவாகவே எடுத்து காட்டியிருந்தேன். 'மாஸாஜ் போடவில்லை' என்று ஆதாரம் காட்டவே நான் வெங்கட்டிற்கு பின்னூட்ட்த்தில் எழுதியதை மேற்கோள் காட்டியிருந்தேன். அதற்கு முன்பு வெங்கட் வலைப்பதிவில் எழுதியதும், மஸாஜ் போடாதது மட்டுமில்லாமல், வெங்கட்டை புண்படுத்தியது என்பதுதான் உண்மை. அநாதை சரியாய் எதையும் வாசிக்காமல் எழுதியிருந்தால் மன்னிக்கலாம். நான் தெளிவாய் , மேற்கோள் காட்டிய பின்பும், "பாப்பானுக்கு மசாஜ் போட்டதை எடுத்தது அதுவும் ஒரு எதிர் வினையாக எழுதியது நேர்மையில்லாத ஒன்றா?" கேட்பது வெகுளித்தனமாக தெரியவில்லை. சாமர்த்தியமான நேர்மையின்மையாகத்தான் தெரிகிறது.

மீண்டும் நான் என் வலைப்பதிவில் அவருக்கு நட்புரீதியாய் சொன்னதை மேற்காட்டுகிறார். அது அவசரமாய் எழுதியது. அதை வில்லங்கபடுத்தும் அளவுக்கு அநாதை கீழிறங்குவார் என்று எண்ணாமல் எழுதியது. நான் சொல்லவந்த விஷயமே வேறு. வாழ்க்கை என்பது பல சமரசங்களுடன் (அதேநேரம் எந்த ஒடுக்குமுறையும் இல்லாமல், இருந்தாலும் அதன் பலனை நாமும் அனுபவத்து கொண்டு)இருக்கும் போது, இணையத்தில் வந்து தார்மீக கூச்சல் போடுவது அபத்தமாய் இருபதை பற்றியது. அநாதையை நேரில் பார்க்க ஆசை! 'குட் பையெல்லாம் தேவையில்ல'ஆமல், 'அந்த வகை சென்ஸிபிலிட்டியெல்லாம்' தவிர்த்து, 'ஸ்டுபிட் மிடில்கிளாஸ் அம்மாஞ்சிகளை' எதிர்கொள்ளாமல் அமேரிக்காவில் எப்படி ஒரு குட்டி பூர்ஷ்வா வாழ்க்கை வாழ்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை ஒரு மாற்றுகலாச்சார வாழ்க்கை வாழ்கிறார் போலும். என் வாழ்க்கை அப்படியில்லை. அதனால் எழுத்தில் மட்டும் ரொம்ப பிலிம் காட்டும் அபத்தம் குறித்தே நட்புரீதியில் சொன்னேன். இதற்கும் 'பாப்பானுக்கு மஸாஜ்' போடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. நான் சாரு மாதிரி கூட இருந்து காட்டிகொடுத்ததாக சொல்கிறார். ஆமாம் அது குறித்து சங்கடமாய்தான் இருந்தது. என்னை எழுத சொன்ன அதே உரிமையை எடுத்து, அனாதையை அடிப்பது சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்திருக்க முடியும்? அதற்கு பதில் என் தளத்தில் அதே பதிலை எழுதுவது இன்னும் அசிங்கமாக தெரிந்தது.

ஆனால் காட்டிகொடுப்பது என்பதற்கு அனாதை என்ன அர்த்தம் வைத்திருக்கிறார் என்று புரியவில்லை. தனிப்பட்ட முறையில், அவருக்கு நம்பிக்கை அடிப்படையில் எழுதிய விஷயங்களில், (மேலே சொன்னது அல்ல, அனாதை வேறு இட்ங்களில் தனி மெயிலில் இருந்து குறிப்பிடும்) இன்னும் எதை அவர் பேசபோகிறார் என்று தெரியவில்லை. அது குறித்து எனக்கு மயிரளவு பிரச்சனையில்லை. ஆனால் நான் மதித்த அனாதையின் நேர்மை நொறுங்குவதுதான் கஷ்டமாக இருக்கிறது. அவசரபடும் முன் அனாதை யோசிக்கணும், அனாதை என்னை நம்பி எழுதிய எதையாவது நான் வெளிப்படுத்தியுள்ளேனா என்று. தனி மெயிலில் *நான்* பேசிய விஷயத்தை எங்கே வேண்டுமானாலும் பேச எனக்கு நிச்சயம் உரிமை உண்டு.

5. மீண்டும் எழுதும் போக்கில் எனக்கு ஆத்திரம்தான் வருகிறது. அனாதையுடன் பேசுவதற்கு பதில் மீண்டும் ஒரு வொயினும். பீஃப் சுக்காவும் சாத்த போகலாம் போல தெரிகிறது. நிஜமாவே மண்டையிலே மசாலா இல்லையா, இல்லை நடிக்கிறீரா?

"அம்பேத்கார் மட்டும் தனித்து தெரிவதற்கு காந்தி தான்கிற என்னோட புரிதல் உங்களுக்கு அந்தளவுக்கு எரிசலை ஏற்படுத்த என்ன காரணம்?ளக்கி சொல்றதா இருந்தா நீங்க என்னட்ட எதிர்பார்க்கின்ற அதே அளவு "அறிவுஜீவிதத்"துடன் விளக்கி சொல்ல வேண்டியது தானே? இது என்ன "மொட்டை"யான "தட்டை"யான காரணம்? ஓ நாங்க மட்டும் தான் உழைத்து புழைத்து காட்டணும் உங்க மூடு சரியில்லன்னா நீங்கள் பீச்சங்கையில் தள்ளிவிட்டு போயிண்டே இருப்பேள் என்ன நியாயம்டா இது?"

யோவ் என்ன விளையாடறியா? காந்தியின் கபடத்தனதிற்கு உதாரணமாய்தான் பூனா ஒப்ப்ந்தம், ரெட்டைவாக்குரிமை என்ற மாபெரும் விஷய்த்தை தனது வொயிட்மெயிலால் முறியடித்தது, அந்த ரெட்டை வாக்குரிமை இன்று என்ன வித்தியாசத்தை ஏர்படுத்தியிருக்கும் என்று சுட்டிகாட்டியது. இப்படி சொன்ன பின்பும் நான் மொட்டையா பேசினதா, பீச்சங்கையில் தள்ளிவிட்டு போனதாய் சொல்ல வெக்கமில்லை! (வெட்டி ஒட்ட்யதில் நான் எழுதிய சில விஷயங்கள் விடுபட்டுவிட்டது. அதானால் போய் பார்த்தேன், நல்லவேளை இந்த விஷயம் இருக்கிறது.)

காந்தியை ஏன் நம்பகூடாது என்று அம்பேத்கார் புத்தகமே போட்டிருக்கிறார். போய் படி! இப்பவும் என்ன மயிரு ஆதாரத்தை 'அம்பேத்கார் மட்டும் தனித்து தெரிவதற்கு காந்தி தான்கிற என்னோட புரிதல்; என்று சொல்ல வைத்திருக்கிறாய்? யாரு மொட்டையா பீச்சாங்கை காட்டிவிட்டு போவது? ஏன் அம்பேத்காருக்கு தனிதன்மை இல்லையா? காந்தி வந்து தனிதன்மை வாங்கி கொடுக்கணுமா? அயோத்திதாச பண்டிதரைவிட அம்பேதகாரின் செயல்பாடு ஒரு விரிவான தன்மை வாய்ந்தது. அயோத்திதாச பன்டிதரின் ஆளுமை பறையர் என்ற அடையாளத்தை தாண்டாதது. (பீச்சாங்கையால் சொல்லவில்லை, இது குறித்து மதிவண்ணன் எழுதியுள்ளார், நானும் எழுதுவேன்.)அம்பேத்கார் தனித்து தெரிவதற்கு அம்பேத்கார் காரணமில்லை, அவருடைய எல்லா நடவடிக்கைக்கும் முட்டுகட்டையாகவும், அதை எதிர்த்து ஹரிஜன் பத்திரிகையில் எழுதிய காந்திதான் காரணம் என்று சொல்ல (தானே சுய நினைவுடன் இல்லாத) ஜாதிதிமிரை
தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

நான் சொன்னதை மறுத்துவிட்டு அல்லவா மேலே பேசவேண்டும். அதை விட்டு விட்டு ஒரு பாரவிற்கு ஒரு விஷயமும் இல்லாமல் இப்படி வூடு மட்டும் கட்ட வெட்கமில்லை, தூ!

சரி, நான் ஏன் இதை பதிவுகளில் கேட்கவில்லையா? தெரியாதாக்கும்! அப்போது விபத்தில் அடிபட்டு ஒரு மாசம் இணையபக்கம் வராமல் படுக்கையில் இருந்தேன். அதற்கு பிறகு இங்கே அது குறித்து நாந்தான் எழுப்பினேன். பிறகு பார்த்துகொள்ளலாம் என்று தள்ளிபோட்டு எதிர்வினை தராமல் போன எத்த்னையோ விஷயம் போல அதுவும் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்ததனால் எழுதினேன். அது சரி, நீங்க எல்லாம் கட்வுள் மாதிரி, எதிர்வினை, கோபம் இதெல்லாம் அளந்து ஒவ்வொருத்தருக்கும் கொடுப்பீங்க போல!

6. அலுப்பு வர தொடங்கி விட்டது. முதலில் அனாதை சொல்வதுபோல் 'திருகி போன உலகம்' என்று எழுதியதில் என்னை பற்றி எழுதியதாக எடுத்துகொண்டோ, அல்லது அதில் திரித்ததாகவோ சொல்லவில்லை. அதற்கு *பிறகு* எழுதிய கடைசி கமெண்டில் மீண்டும் பெரியார் இதற்கு காரணம் என்று சொல்வதாக சொல்வதைத்தான் 'திரிப்ப'தாக குறிப்பிட்டேன்.

அடுத்து உழைப்பு குறித்து. நினைத்த மாதிரி அனாதை மொட்டையாகத்தான் எடுத்துகொண்டிருக்கிறார். நான் ஒருவர் அலுவலகத்தில் உழைப்பது பற்றியோ, சம்பளம் கொடுக்கும் மேலாண்மைக்கு விசுவாசமாய் இருப்பது குறித்தொ பேசவில்லை. ஜேமோ டெலஃபோன் டிபார்ட்மெண்ட் வேலை பார்த்தால் எனக்கென்ன, பார்காவிட்டால் எனக்கேன்ன? அவர் வாங்கிய சம்பளத்திற்கு உழைக்கிறார் என்பதல்ல கேளிவி. அவ்ர் எழுதும் எழுஜ்த்துக்களில் வெளிப்படும் உழைப்பைத்தான் குறிப்பிட்டேன். பெரியாருக்கு எஃபெக்ட் இல்லை என்று சொல்ல மிகுந்த உழைப்பு தேவை, அநாதையிடம் உழைப்பு இல்லாதது மட்டுமில்லை, உழைக்கவேண்டும் என்ற பிரஞ்ஞை கூட இல்லை, என்பதுதான் தம்மாத்துண்டு ஸ்டாடிஸிக்ஸ் போட்டு பெரியாரை டிஸ்மிஸ் பண்ணுவதில் தெரிகிறது. இதுதான் நான் சொன்னது. இதற்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் குறித்து அநாதை பேசுவது எதிர்பார்காதது அல்ல. அப்பறம் என் உழைப்பா? சொல்ப வருஷா வெய்ட் மாடி, அனாதை! நிச்சயமாய் பெரியார் தேவையில்லை என்று சொல்லும் மரத்தடியில் அது வெளிவராது. அது போன்றவற்றை படிப்பதை தவிர்பதுதான் இப்போதய நோக்கம்.

7. ஒப்புகொள்கிறேன். mligned என்ப்தை பெரிய விஷயமாய் பேசியது தேவையில்லை, தவறுதான். தர்கத்தின் போக்கில் எதிரியை வீழ்த்தும் போக்கின் வெளிப்பாடுதான் அது. (maligned என்று சொல்வது மற்றவர் பார்வைக்கு அது சரியான ஆதாரம் அல்ல என்ற தொனியை அனாதை முன்வைக்க, அது வலிந்து அனாதைக்கு எதிராய் நான் எடுத்தாள்வதையே தவறு என்று ஒப்புகொள்கிறேன். ஸாரி அபவுட் தட், வேறு என்ன சொல்ல?)

8. மீண்டும் அனாதை சொல்வது விளங்கவில்லை. பார்பனரல்லாத இயக்கம் பெரிய பாதிப்பை, அட, ஒரிசாவை விடுங்கள், ஆந்திராவில் கூட ஒன்றும் புடுங்க முடியவில்லையே என்பதுதான் கேள்வி. மீண்டும் அதை வலியுறுத்தி சொல்லியாயிற்று. அனாதை வேறு எதையாவது பேசுவது குறித்து மேலே பேச ஒன்றுமில்லை.


மேலே என்ன சொல்ல! நிதானமாய்தான் எழுத நினைத்தேன். இடையில் தவறியதில் மாற்ரம் செய்யும் உத்தேசமில்லை-யார் எப்படி எடுத்துகொண்டாலும். அனாதை எழுதுவதை வெங்காயம் என்று நினைத்தாலும், அதை நான் முக்கியமாக (ஆமாம் வெங்காயத்தை ரொம்ப முக்கியமாய் )நினைத்ததாலேயே இன்னமும் கூட அனாதை எழுதுவதை தேவையாய் நினைக்கிறேன். அதனால்தான் பதிலும் எழுதுகிறேன். மற்றபடி 'யோவ் ரோசாவசந்த்' என்று சொன்னதால் எனக்கு கோபம் வந்ததாய் நினைப்பது ரொம்ப ஓவர்! இப்போது நாய், பீ உவமை போட்டது கூட கோபமில்லை. எவனோ ஒரு தன் பெயர் சொல்ல கூட துப்பு இல்லாத அநாநிமஸ், என்னை தாயோளின்னு சொன்னா கூட கோபம் வருவதில்லை. நான் மதிக்கும் அனாதை சொல்லியா கோபம் வரபோகிறது! இதெல்லாம் என் பையன் என் மீது பேள்வது போல். தேவை என்று நினைத்தால் இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன். குட் பை!(நமக்கு குட்டி பூர்ஷ்வாங்கறத மறைக்க அவசியமில்லை.)

ROSAVASANTH said...

என்னாலேயே மீண்டும் ஒருமுறை படிக்க முடியவில்லை. பாண்ட் சைஸ் பெரிசாக்கினல் நல்லது.

ROSAVASANTH said...

அநாதை மன்னிக்கவும், நிதானமாய்த்தான் எழுத நினைத்தேன். நான் தெளிவாகவே எந்த காரணத்திற்காக காந்தியை விமர்சிக்கிறேன், என்று குறிப்பாய் சொல்லியும், மீண்டும் அதே விஷயத்தை (என்னையும் திட்டி) சொன்னதால் எரிச்சலாகி, வார்த்தைகளை விட்டுவிட்டேன். அதை எடிட் செய்யும் வசதியும் இல்லை. அதனால் மன்னிப்பு மட்டும் கேட்டுகொள்கிறேன்.

ஆனாலும் கருத்தளவில் மாற்றம் இல்லை. ரெட்டை வாக்குரிமை விஷயத்திலேயே காந்தியை எதிர்பதையும், மற்ற விஷயத்தில் நேர்மறையாய் பார்ப்தையும் ஏர்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஏன் எதையும் கணக்கில் எடுக்காமல் எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை. அந்த கோபத்திலேயே வார்த்தைகள் விழுந்துவிட்டன. மனிகவும்.

ROSAVASANTH said...

/சிம்பிள் கேள்வி முதலமைச்சர் பதவி வர பெறும் பலம் இருந்த சென்னை மாகாணத்து ஜஸ்டிஸ்பார்ட்டிக்கும், "சம்பல்பூரில்" இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டியையும் ஒப்புமை படுத்தமுடியுமா? இது தான்./

நான் பேச புகுந்தது 'இங்கே வீசிய பெரியார் எஃபெக்ட் அங்கே ஏன் வீசவில்லை?' என்பதை பற்றி அல்ல (அவ்வாறு கேட்பது அநாதைக்கு புள்ளிவிவரம் வீச வசதியானது), மாறாக அங்கே துவங்கிய நீதிகட்சி (அதாவது பார்பனர்ல்லாத இயக்கம்) ஏன் பலம் பெறவில்லை என்பதே! இரணடும் வெவேறான கேளிவிகள். கேள்வியை பொறுத்து பதில் வரும். 'ஒரிஸா வரைக்கும்' என்று சொன்னது, நீதிகட்சியின் பரவலான துவக்கத்தை சுட்டிகாட்ட மட்டுமே. எவ்வளவு எளிதாய் ஒரு கேள்வி, அதன் ரெலெவன்ஸ் மாற்றப்பட்டு சம்பந்தமில்லாமல் போகமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.

அனாதையின் இந்த பதிவை, அவருடைய நேர்மையின்மையின், வலிந்து திரிக்கும் தன்மையின் தெளிவான உதாரணமாய் எடுத்துகொள்கிறேன் - குறிப்பாக அம்பேத்கார், வெங்கட்டின் பதிவில் என் கமெண்ட் பற்றி பேசும்போது. ஆகையில் இந்த உரசலை சரி செய்ய முயற்சி செய்யலாம் என்று இருந்த சிறு உந்துதலுக்கு இனி எந்த நம்பிக்கையும் இல்லை. இதற்கு மேல் இது குறித்து பேசமாட்டேன். விடைபெறுகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி.