Monday, December 27, 2004

துக்கம்.

காலையில் எழுந்ததிலிருந்து கேள்விப்பட்டவுடன் இந்தச் செய்தி மனதை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. சென்னையில் தினப்படி பெசண்ட் நகர் அருகே வாக்கிங் செய்யும் உடன்பிறப்பின் இருப்பை உறுதி செய்து பின் வேதாரன்யத்தைச் சேர்ந்த நண்பனுடன் பேசியதில் அவனுடைய கிராமமெல்லாம் பாதிக்ப்பட்டது தெரிந்தது அவனுக்குத் தெரிந்த சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து தினப்படி 200லிருந்து 300 பேராவது மீன்பிடிக்க செல்வார்கள் என்றும் எவரும் மீளவில்லை என்ற போது கொடூரமாக இருந்தது நாகப்பட்டினத்தில் இருவருக்கும் பொது நண்பர் ஒருவரின் மாமனார் மீன் வாங்க சென்றவர் திரும்பாததும் அவரது சைக்கிள் மட்டும் ஓரத்தில் கிடந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு அடிப்படை வார்னிங் சிஸ்டம் இல்லாமல் கூட இருக்கின்றோமா? ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் முன்னால் கூட வார்னிங் செய்ய முடியாத ஆபத்தா இது. ஒன்றும் புரியவில்லை. ஆபத்துகால நடவடிக்கை எடுக்க ஏதேனும் திட்டங்களும் வழிமுறைகளும் இருக்கின்றனவா அல்லது இவையெல்லாம் டிரையல் அண்ட் எர்ரர் மூலம் எடுக்கப்படுகின்றதா எனவும் தெரியவில்லை. உடல்களை தூக்கி வருவதெல்லாம் இளைஞர்களும் சாதாரன மக்களும் போல் உள்ளது இல்லை அவர்கள் எல்லாம் அரசாங்க ஆட்களா? வண்டியில் அடுக்குவதைப் பார்த்தால் செத்து அடுக்குவது போல் இருக்கின்றது செத்ததை உறுதிப் படுத்திக் கொள்ளவெல்லாம் செய்கிறார்களா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கின்றது? பிபிசியில் ஒரு ஹெலிகாப்டர் ஆட்களை காப்பது போல் ஒரு படம் போட்டிருந்தார்கள் அதைத் தவிர வேறேதிலும் அரசாங்க இயந்திரத்தைப் பார்க்க முடியவில்லை. எழுபத்தி ஏழில் தமிழ்நாட்டில் பெரும் புயல் அடித்தபோது அரை டிரைவுசர் பள்ளி மாணவன். ஊரெங்கும் மரமெல்லாம் விழுந்து அதன் விறகு பொறுக்க அந்த மதியமே ஓடியது இன்னமும் நினைவிருக்கின்றது. அதன் ஆபத்தும் தொத்திக் கொண்டிருக்கும் மரம் திரும்ப மேலே விழலாம் அதனால் சாவு கூட நிகழலாம் எல்லாம் விளங்காமல் கூட்டத்தோடு கூட்டமாக ஓடியது மட்டும் ஞாபகம் இருக்கின்றது. இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் பொது சிந்தனை இன்னமும் வளரவில்லை என்னதான் மயிறு முன்னேற்றம் என்பது தான் வயத்தெறிச்சலாக இருக்கின்றது. டீவியில் பார்க்கும் போது எல்லா மக்களும் வெளியில் அதுவும் ஏதோ பிக்னிக் போல வேடிக்கை பார்க்க. அவ்வளவு பேர் வெட்டியாகக் கூடினால் வேறு வகை வியாதிகள் எளிதில் பரவாதா? தடுப்பு நடவடிக்கைகளுக்கும் நிவாரணத்திற்கும் இந்தக் கூட்டமே தடையாக இருக்காதா? தலை சுத்துகின்றது.


டீசே தமிழன் இயற்கையைத் திட்டிக் கொண்டிருந்தார் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையான இயற்கையென்றால் வயது, பால், வர்க்கம் பாத்திருக்காது. இங்கே 95% அன்றாடங்காச்சிகள் அதிலும் முக்கியமாக குழந்தைகளும் பெண்களும். இப்படிக் குறி வைத்து தாக்கவெல்லாம் இயற்கைக்கு சூட்சமம் தெரியாது.



மேலும் படிக்க