Saturday, April 25, 2009
புரட்டிவிடும் புள்ளிகள் - Tipping Points - மால்கம் கிளாட்வெல் புத்தகப் பார்வை.
அப்பொழுது தவற விட்டிருந்த புத்தகம் தான் இது - புரட்டிவிடும் புள்ளிகள். இதனுடைய ஆசிரியர் மால்கம் கிளாட்வெல். இந்த புத்தகத்தைத் தவிர மேலும் இரண்டு புத்தகங்களை எழுதி அவைகளும் நல்ல ஆதரவை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்ல வெள்ளை அட்டையில் ஒரு சிறு தீக்குச்சியின் படத்துடன் ஆப்பிள் குழுவினரின் வெளியீடு போல இருக்கும் இந்தப் புத்தகம் எளிமையான நடையில் எழுதப் பட்டிருக்கின்றது. எந்த ஒரு, கொள்ளை நோய் போல, துரிதமாகவும் பரவவும் கூடிய விடயங்களை (நல்லவற்றிர்க்கும் கெட்டவற்றிர்க்கும்) ஏற்படுத்தக் கூடியவைகளை மூன்று வகைளாக வகைப்படுத்தலாம் அவை - , மிகக் குறைந்த அளவிலான ஆனால் செறிவூக்கமும் செயலூக்கமும் கொண்ட நபர்கள் - ஆழமாக ஒட்டக் கூடிய செய்தி - தோதுவான சூழல். இந்த மூன்றையும் சரிவரக் கையாளத் தெரிந்தால் எந்த ஒன்றையும் - தொழிலாக, புரட்சியாக, நோயாக, நோய்கூறாக எதுவாக இருந்தாலும், அதை எளிமையாக பரவலாக்கலாம் என்பது தான் புத்தகம் சொல்லும் செய்தி. ஒரு கட்டுரைக்குள் முடிக்கக் கூடிய விடயமாக இருந்தாலும் (முதலில் இது கட்டுரையாகத் தான் வந்ததாம்), ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான உதாரணங்கள், ஆராய்சிகளின் தொடர்புகள் என ஆச்சர்யப் படக்கூடிய துணுக்குகளை அடுக்கியிருந்தார். பல துணுக்குகளின் பின்னால் உள்ளது மறுதலிக்க இயலாதது.
சில துணுக்குகள் என்னை துணுக்குற வைத்தன என்றால் மிகையில்லை. அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு தூண்டுகோலாக, போஸ்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியை காட்டி, அதை ஆரம்பித்து நடத்திவைத்தவர்களாக ஒரு மூன்று பேரைச் சுட்டுகின்றார். அந்த மூவரில் பால் ரெவெர்(paul revere) என்னும் ஒருவரின் மக்கள் தொடர்பு நிபுனத்துவத்தின் அளவு தான் விவசாயிகளையும் மற்றவர்களையும் ஒன்றினைத்து, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து நிற்க முடிந்தது. அப்படி நிற்க முடிந்ததே பின்னால் சுதந்திரப் போருக்கான ஆதார வித்து எனவும் நிறுவுகின்றார். ஆராய்ந்து பார்த்தால் பல போராட்டங்கள் இப்படித்தான். பல போராட்டங்கள், முளைவிடாமலே கருகி விடுவதும் இந்த மாதிரி ஆட்களின் போதாமையே. ஒரே மொழி பேசும் இனம் இரண்டு நாடுகளில். ஓரு நாட்டில் இருக்கும் அந்த மக்கள் அழித்தெடுக்கப் படுகின்றார்கள். இன்னொரு நாட்டில் இருக்கும் அதே மக்கள் விளையாட்டுப் போட்டிகளின்ன் வெற்றித் தோல்விகளில் முழ்கியிருக்கின்றார்கள். என்னைப் பொருத்தவரை பால் ரெவேர் போன்ற ஆட்களின் போதாமை ஒரு முக்கிய காரணம்.புரட்டிவிடும் புள்ளிகள் இல்லா கள்ளி நிலமாகத் தான் அந்தக் களம் இருக்கின்றது. 4 அல்லது 5 கோடி புண்னாக்க்குகளும் அதன் மேல் பூஞ்ச காளான்களாக 20-25 லட்சம் காளான்களும் இருக்கும் களத்தில் அதை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் தான்
எனக்குக் கணிதத்தில் வரும் சில எண்கள் மேல் ஒரு விருப்பம் . பை எண் (Phi), படியேற்றம் (exponential) போன்ற எண்கள் கொடுக்கும் நிச்சயம், இந்த நிச்சயமற்ற உலகில், வசீகரிக்த்தான் செய்யும். அதே போல எண்கள், மனிதக் குறியீடுகளிலும் அங்கங்கே மறைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்த எண்களை கொடுக்கும் எல்லா செய்திகளையும் அதிகம் நோண்டிப்பார்க்காமல் அங்கீகரித்தும் விடும் என் மனது. இந்தப் புத்தகமும் சில எண்களை விட்டெறிந்திருந்தது. ஏழு என்ணும் வசீகர எண். சராசரி மனித மனம், ஒரு எழு வகை வித்தியாசங்களை உணர முடியும். அதற்கு மேல் உள்ள வித்தியாசங்கள், பிறழத் தொடங்கி விடும். நூற்றி ஐம்பது என்னும் வசீகர எண். இந்தளவு உள்ள மக்கள், எந்த விடயத்தில் இறங்கினாலும், முயற்சித்தால் எளிதாக ஒத்திசைந்து இயங்க முடியும். இதற்கு மேல் கூடத் தொடங்கினால் அந்த ஒத்திசைவு கெடத் தொடங்கிவிடும். இவைகளை சில பல உதாரணங்கள் , பேட்டிகள் என நிறுவுகின்றார். இந்த எண்களை என் மனது அதிகம் ஆராயாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. ம்ம்ம் என்ன செய்ய
உடைந்த கண்ணாடி ஜன்னல் என்னும் ஒரு கோட்பாடு. இது சூழலைச் சார்ந்தது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு நியுயார்க்கில் 90களில் நிகழ்ந்த தீயச் செயல்கள் குறைப்பு ந்கழ்சியை விளக்குகின்றார். நான் இயற்கை vs சூழல் வகை அரசியல் பிரிவுகளில் சூழல் பின் நிற்பவன். எனக்கு இதனை ஏற்பதில் சிரமம் இல்லை. வேறு இடங்களில் ஆசிரியரே இயற்கை மட்டுமே இல்லை கூடவே சூழல் மட்டுமே இல்லை என குழந்தைகள் வளர்ப்பு பற்றிச் சொல்லும் போது அதன் உண்மையும் உறைக்காமலும் இல்லை.
இந்தப் புத்தகம் அதன் கடைசி பகுதிகளில், அதன் முதலில் இருந்த வேகத்தை இழந்தாலும், ஒட்டு மொத்தமாக படிக்கையில் ஒரு புதிய பார்வையைத் தரும் என உறுதியாகச் சொல்லலாம்.
மேலும் படிக்க
Sunday, April 12, 2009
என்ன கொடுமை இது?
மேலும் படிக்க
Saturday, March 28, 2009
வெள்ளைப் புலி (The White Tiger)- அரவிந்த் அடிகா
இந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்னும் தீவிரம் இருந்தது. பலவருடங்களுக்கு முன் அருந்ததிராயின் காட் ஒப்ஃ சுமால் திங்ஸ் நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்து பாதியில் நின்றது, இன்னமும் நிற்கின்றது. சிறுகதைகள் படிக்க முடியும் எனக்கு, நாவல்கள் பெரும் சவால் தான். என்ன பிரச்சனை என்றால் , சிறுகதைகளை தூங்கவதற்கு முன் இருக்கும் அவகாசத்தில் படித்து விடலாம், சில கும்பல்கள் சிறுகதை என்ற பெயரில் குருநாவல் எழுதி உயிரை எடுக்கும், அதை மறந்து விட்டால். ஆனால் நாவல்கள் அப்படியில்லை. பாதியில் நிறுத்தினால் திரும்ப ஆரம்பிற்பதற்கு மெனக்கெடுதல் அதிகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் குறையை விட தவிர என் முனைப்பின் மீதுதான குறை அதிகம். இடைவெளியில் பல திசைகளில் மனம் திருப்பிவிடப்படுகின்றது. மிடில் ஸ்கூல் கால கட்டங்களில் கோடை விடுமுறைகளில், தூங்கும் போதும் , பேளும் (நன்றி ராஜநாயகம்) போதும், சாப்பிடும் போதும் வண்டி வண்டியாக கல்கி, சாண்டில்யன் என படித்த காலங்கள் போய் இப்பொழுது ஒரு 300 பக்க நாவல் படிக்க மூச்சு வாங்குகின்றது. பல கதைகள் பாதியிலே- இது தமிழிற்கும், ஆங்கிலத்திற்கும் பொருந்தும். இந்தக் கொடுமை இப்போ சில/பல சினிமா படங்களுக்கும் தொடர்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் இந்த நாவலை படித்து "முடித்து" விட்டேன். முதலில் ஒரு ஓட்டத்தில் 200 பக்கங்களை கடந்ததும் அடுத்த ஒட்டத்தில் முடிக்க வைத்துவிட்டது. நடை வேகமாக ஓடியது என்பது கூட காரணமாக இருக்கலாம். கதை என்றால் ஒன்றும் இல்லை. குண்டியால் சிரிப்பதற்கு கதையென்பது தேவையா என்பது இந்த நாவல் வைக்கும் ஒரு கருத்தாகக் கூட இருக்கலாம். முதலில் ஒன்று சொல்ல வேண்டும். இந்தக் கதையின் அடிநாத நக்கலைப் பிடிக்க, கொஞ்சம் சூடு சொரனையுள்ள தெற்கத்திய கருப்பனாக இருந்து, வடக்கத்தியான்களுடன் சகவாசமும் முக்கியமாக வடநாட்டில் சில காலமாவது வாழ்ந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்தியாவுடன் சுத்தமாக எந்தவித தொட்டுக்க பட்டுக்கவும் இல்லாமல், இந்தியா என்பதை புத்தகவாக்கில் அறிந்து இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் இந்த நாவலைப் படிக்க/புன்முறுவல் பூக்க/அப்படி போடு என/ ஒஹ் இந்தக் கூனாக்கல் இப்படிதானா என நக்கலுட/ முடியாது.
நாவல், ஒரு ஏழு இரவுகளில், ஒர் மாபெரும் கசாப்புக்கடையில் இருக்கும் கோழிகூண்டிலிருந்து ஒரு கோழி எப்படித் தப்பிக்கின்றது (உண்மையிலேவா?) என கோழியே மற்றுமொரு மாபெரும் கசாப்புக்கடை அதிபருக்கு விளக்கி எழுதும் கடிதங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு இரவும் கசாப்புக்கடையை எவ்வளவு தூரம் ஒரு "கோழி" விளக்கமுடியுமோ அந்தளவிற்கு விளக்கின்றது. 36000004 ( 3 கோடியே 60 லட்சத்து இந்து + 3 கிறிஸ்தவ + 1 முஸ்லீம் கடவுளர்) குண்டிகளை தொழும் கோழிகளின் பழக்கவழக்கத்தில் ஆரம்பித்து, கோழி எதை இழந்து தப்பிக்கின்றது, பின் தப்பித்த கோழி எப்படி தானே ஒரு கசாப்புக்கடை வைத்து..., என ஒரு சோகமான காலவட்டத்தில் கதை முடிந்து விடுகின்றது. முன்னா "ஹல்வாய்" இந்த ஜன்மத்திலேயே அசோக் "சர்மா"வாக என்ன செய்யனும் என்னும் இந்தக் கதை "வருதே மூத்திரம்" கோஷ்டிகள் படிக்க முடியாதது தான்.
பொதுவாக பொலிடிகல் கரக்ட்னெஸ் பார்க்கும் மேற்கத்திய கோஷ்டிகள் இதை எப்படி உள்வாங்கின என்பது ஒரு ஆராய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம் கூட.. பின் குறிப்பாக உள்ள ஆசிரியரின் பேட்டியில் ஆசிரியர் தனது எழுத்தின் ஆதர்சமாக, மூன்று கருப்பின ஆசிரியர்களை குறிப்பிடுகின்றார் - ரால்ப்ஃ எலிசன் (Ralph Ellison), ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin), ரிச்சர்ட் ரைட் (Richard wright) - முக்கியமாக எலிசனின் இன்விசிபிள் மேன் என்னும் புத்தகத்தையும் குறிப்பிடுகின்றார். நாவலின் முன்னும் பின்னும் குவிந்திருக்கும் (அஜீர்னப்படுத்தும் அளவுக்கு உள்ள) புகழாரங்களில், பலரும் எலிசனின் இன்விசிபிள் மேனையும், ரைட்டின் நேட்டிவ் சன் னையும் குறிப்பிடுவதால், அந்தப் புத்தகங்களுக்குள் , இந்த நாவல் மேற்கத்தியவர்களில் எந்த நரம்பைத் தொட்டது என்னும் மர்மம் இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. கூடவே எல்லா விடயத்தையும் "பிலாசபிக்கலாக" பார்ப்பது போல் "தொனத்தொனவென" பேசும் "இந்தியர்களின்" முடிச்சை மேற்க்கத்தியவர்களுக்கு இந்த நாவலின் முக்கிய கோழி அவிழ்க்கப் பார்த்திருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
மேலும் படிக்க
Friday, March 27, 2009
இரவுகள் உடையும் - மாதவராஜ்
கண்களின் பின்னே தெரியும் சோகத்தையும் பயத்தையும் பிடித்திருந்தது ஆச்சர்யமாகவும் சோகமாகவும்
இருந்தது. சில விஷயங்களை இந்தப் படம் இன்னமும் தெளிவாக விளக்கியிருக்கலாமோ என்று பட்டது.
இந்தப் படம் இரண்டு விடயங்களை தொட எத்தனித்தது என நினைக்கின்றேன் - ஒன்று பிரச்ச்னையின் விளைவான தனிமனித சோகம். மற்றொன்று இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான அடிப்படைச் சட்டமீறல் அதுவும் அரசாங்கத்தினாலேயே. தனிமனித சோகத்தைக் காட்டிய அளவு, இந்த சட்டமீறைலைப் பற்றிய ஆழமான விவாதம் இல்லாமல் இருந்ததாகப் பட்டது. அரசாங்கம் பொய்யான தகவலைத் தெரிவிதிருந்தது அதாவது வேலைநீக்கம் செலவினக் குறைக்க எனச் சொன்னாலும், அரசாங்கம் அதே வேலைக்கு இன்னம் அதிகம் செலவழைக்கப் போகின்றது என கணக்கு காட்டிச் சொன்ன சங்கத்து இளைஞர் கருத்தை , ஒரு பேட்டி என்ற அளவில் இல்லாமல் , மேலும் ஆராய்ந்து அந்தக் கணக்கு பிழையை இன்னமும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம். அதே சமயம் அதே வேலைக்கு தனியார் நிறுவணங்கள் மிகக் குறந்த்த கூலி கொடுத்து வாங்கும் கொடுமையையும் வெளிச்சம் போட்டிருக்கலாம். இருந்தாலும் இந்தப் படம் அது செய்ய முனைந்ததை/ வெளிக்கொனர வந்ததை நன்றாகவே செய்தது எனலாம்.
இந்தப் படம் என்னுள் தூண்டியவைகளை சுருக்கமாக சொன்னால்
1. இந்தியாவின் சாலைப் பணியாளர்கள், இந்த வெளிநாட்டு சாலைப் பணியாளர்களை ஒப்பிட்டுப்பார்த்தால், கொடுமைப்படுத்தி வேலை வாங்கப் படுகின்றவர்கள் எனக் கொள்ளலாம். எந்தவித பாதுகாப்பு ஆபரணங்களும் இல்லாமல், தொழிலுக்கு வேண்டிய சரியான கருவிகளும் இல்லாமல், அவர்களது வெறும் உடல் உழைப்பை உறின்சி செய்யப்படிகின்ற வேலையிலும் நடந்த இந்த சட்டமீறலான வேலை நீக்கம் கொடுமையானது
2. எந்தவித அரசு கண்காணிப்பும் இல்லா / இருக்கும் கொஞ்ச நஞ்ச கண்காணிப்பும் லஞ்ச லாவண்யத்திற்கு விற்கப்படும் சூழலில் நடக்கும் தனியார் மயமாக்கம் மிகத் தீங்கானது
3. இந்திய அரசாங்கம் ஒரு நேர்மையான முறையில் பகிர்ந்து அளிக்கப் படவில்லை. வெள்ளைக்காரன் ஒரு அடிமை நாட்டை ஆளவேண்டியதன் பொருட்டு ஏற்படுத்திய வலுவான மத்திய அரசு / மிச்சம் மீதியை கொண்டு அமைக்கப்பட்ட அடிமை மனப்பான்மை கொண்ட மாநில அரசு என மேல் நோக்கி செல்லப்படும் அரசமைப்பை, சுதந்திர இந்தியாவும் சுவீகரித்தது தான் பிரச்சனை. ஒரு நேர்மையான, பொது மக்கள் தங்களைத் தானே ஆள வைக்க வேண்டிய வலுவான முக்கிய அதிகாரம் ( தானே வரி வசூலிக்கக் கூடிய) கொண்ட உள்ளுர் அரசாங்கம் , உள்ளூர் அரசாங்கங்களை வழிப்படித்துகின்ற மாநில அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் ஒரு பொது நிதி கொள்கையைக் கொடுக்கக் கூடிய, மாநிலங்கள் சமபங்கு உரிமை கொண்ட மத்திய அரசு என்னும் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசு இயந்திரங்கள், மக்களுடன் நெருக்கமாக இருந்தால் இந்த வகை சட்ட மீறல்கள் குறையவும், சாலைப் பணியாளர்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் வாய்புகள் அதிகரிக்கலாம் என்று ஒரு எண்ணம்.
இந்தவகைப் படங்கள் மேலும் எடுக்கப்பட்டு அவைகள் விவாதப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். எடுத்த டைரக்டர் மாதவராஜிர்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
படத்தை இங்கேயும் பதிக்கின்றேன்.
சரியாக வரவில்லையென்றால் இங்கேயும் பார்க்கலாம்
மேலும் படிக்க
Saturday, February 14, 2009
அமெரிக்க தளையற்ற பொருளுடமை பற்றி பேசப்படும் அளவிற்கு, அமெரிக்க வணிக கட்டுப்பாடுகள் பற்றி பேசப்படுவதில்லை. அமெரிக்க சுதந்திரம் வாங்கிய சமயத்திலேயே இந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றி விவாதங்கள் நடந்து வந்து, சில கட்டுப்பாடுகள் அடிப்படைச் சட்டத்தில் ஏற்றப்பட்டிருந்தது. ஆனாலும் 19890;ல் வணிக கட்டுப்பாடுகளைப் பற்றிய சட்டம் அமலுக்கு வந்து, வணிக கட்டுப்பாடுகளின் மீதான மறுவிசாரணையும்/ தீர்வையும் அளிக்கும் உரிமை அமெரிக்க உச்சநீதி மன்றத்திடம் வந்தது. அமெரிக்க உச்சநீதி மன்றம், அடிப்படை சட்டங்களிடையேயான மிக முக்கிய தீர்வுகளை தந்துபோல் வணிக கட்டுப்பாடுகள் மீதான சில முக்கிய தீர்வுகளையும் தந்தன. அந்த தீர்வுகள் அமெரிக்க வணிகத்தின் போக்கினை தீர்மானிப்பதாக இருந்தன. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் இணைய வழி வணிகம் கூடவே சிக்காகோ வழி சிந்தனை என்பவைகள் இந்தக் கட்டுப்பாடுகள் மீது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழப்பங்கள், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்புகளில் தெரிந்தாலும், கூடவே நிறுவணங்களின் அரசாக செயல்பட்ட புஷ் அரசாங்கம் நியமித்த அமெரிக்க உச்ச நீதிபதிகள், நிறுவணங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை செய்கின்றன என்றும் ஒரு விவாதம் உள்ளது. ஆனால் என்னுடைய விருப்பம், இந்த அமெரிக்க அரசு உருவான சமயம் அல்லது முக்கியமாக போன நூற்றாண்டு இடை வரை, இந்த நாட்டின் அடிப்படை எவ்வாறு ஒரு தனிமனித சுதந்திரத்தை உண்மையான நோக்குடன் பேணுவதாக இருந்தது என ஆராயும் நோக்கு. தனிமனித சுதந்திரத்தின் அளவே எந்த ஒரு சமுதாயத்தின் வெற்றியின் அளவாகும் என்பதாக என் தனிப்பட்ட விருப்பம். பீயள்ளுவது தான் ஒருத்தனின் சுதந்திரம் என்றால் அந்தப் பீய்ள்ளும் வெற்றிதான் அந்த சமுதாயத்திற்கு, அது சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட்டாலும். சிரித்துக் கொண்டே பீயள்ளுகிறார்கள் அதை எப்படி மேற்கத்திய கண் கொண்டு பார்க்கலாம் என தேவிடியாகுடி ஞானகுருக்கள் கேட்கும் முன்னே நாம் நம் விடயத்திற்கு திரும்பலாம்.எந்த ஒரு பொருளாதாரமானாலும் அது எந்த பொருள் எப்படி எவ்வளவு தேவைப்படும், எங்கிருந்து வரவழிக்கப் படும் அல்லது எப்படி தயாரிக்கப் படும் கூடவே முக்கியமாக யார் இதனை செய்யலாம் யார் இதனை உபயோகிக்கலாம் என்றெல்லாம் முடிவு எடுக்க வேண்டும்.
அந்த முடிவுகளை மூன்று வழிப்படுத்தலாம். முதலாம் வழி மரபு ரீதியானது. ஐரோப்பிய நாடுகளில் மேல்வட்டதினரால் வழிநடத்தப்பட்ட பொருளாதார நிறுவணங்களிடம் இந்த முடிவு செய்யும் அதிகாரம் இருந்தது. அரசனுக்கு ஒரு கமிஷன் கொடுத்துவிட்டு, பின் இந்த நிறுவணங்கள் நிர்ணயம் செய்வது அந்தக் காலத்தில். இதையே தேவடியாகுடியில் சாதி மற்றும் வர்ணம் நிர்ண்யம் செய்யும். சந்திரோயான் விடும் தேவடியாகுடியில் இன்னமும் சில பல முடிவுகள் சில சாதிக்கூட்டங்களின் கையில் இருப்பதும் சிலசமயம் சில இடங்களில் மதக் கூட்டதின் கையில் இருப்பதும் நடக்கும். இந்தப் பொருளாதார முடிவுகளின் முரணே பல நேரங்களில் தேவடியாகுடியில் நடக்கும் மதக் கலவரங்களுக்கு பின்புலனாகவும் இருக்கும்.
இரண்டாம் வழி ஒரு வானளாவிய அதிகாரம் கொண்ட மத்திய அமைப்பு மேலே கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முடிவு எடுக்கும். உதாரணமாக சோவியத் யூனினில் செய்யப்பட்ட அல்லது சைனாவில் செய்யப்படுகின்ற முறை.
மூன்றாவது வழி இந்த முடிவுகளை எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற சந்தை தீர்மானிப்பது. சந்தை என்றால் எவன் வேண்டுமானாலும் விற்கலாம் எவன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்னும் அர்த்ததில். . இதன் சாதக பாதகங்களுக்கு செல்லும் முன்னே இந்தச் சந்தை, "எவன்", விற்பவன், வாங்குபவன் என்னும் ஆட்களை அறிந்து கொள்வது முக்கியம். இந்தச் சந்தை எப்பொழுது தொடந்து ஓட்டம் கொள்ளும்? விற்கின்றவன் கூட்டு சேர்ந்து வாங்குகிறவனை மொங்கா போட்டாலும் வாங்குகிறவன்கள் கூட்டம் சேர்ந்து விற்கின்றவனை மொங்கா போட்டாலும் இந்தச் சந்தை படுத்துக் கொள்ளும். அது இல்லாமல் விற்கின்றவன்கள் தனித்தனியே போட்டி போட்டு, விற்கின்ற பொருள்களை விலையிலும் தரத்திலும் புதுமையிலும் மெருகு ஏற்றி ஏற்றி, வாங்குகிறவனை வாங்க வைக்க வேண்டும். அப்படி வாங்க வைக்கும் போட்டி இருந்தால் தான் சந்தை தொடர்ந்து ஓட்டம் கொள்ளும் என்பது இந்த வகை. ஒரு வகையில் பார்த்தால் முதல் இரண்டு வகைகளும் இந்த வகையின் முழு எதிரிகள். முதல் இரண்டு வழிகளுமே இந்தப் "போட்டா போட்டியை" விலக்கி விடுகின்றன.
இந்த மூன்றாவது வழிதான் அமெரிக்கா தேர்ந்த்தெடுத்தது அமெரிக்கன்களுக்கு இந்தப் "போட்டா போட்டி" மேல் ஒரு நம்பிக்கை. அது தான் மனித சக்தியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றது என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே மோனோபோலி எனப்படும் ஒரு தனிகுழுவோ, நிறுவணமோ அல்லது அரசாங்கமோ இந்தச் சந்தையை கை கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர் ( இப்பொழுது அந்தத் தீவிரம் குறைந்து வருகின்றது ). இந்த போட்ட போட்டியை தற்காத்துக் கொள்ள 1890 ஷெர்மன் அக்ட்(sherman act) என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்த ஷெர்மன் சட்டம் மிக முக்கியமான நோக்கை நோக்கி இருந்தது. அவைகளை நான்கு வகைப்படுத்தலாம். முதலாவது - நுகர்வோர் நலன் மற்றும் சந்தையில் முக்கிய பங்கு வகிப்போரிடம் அந்தப் பங்கு பெருகவிடக்கூடிய சொத்து மாற்றங்கள் மீதான தடைகள். இரண்டாவது சந்தையில் புதுமைக்கும், அறிவுப் பெருக்கத்திற்கும் வகைமை செய்வது. மூன்றாவது சந்தையில் இருக்கும் தனியார் நிறுவனங்களை சமசீராக காப்பது . நான்காவதாக பொருளாதார பலத்தை பரவலாக்குவது.
இந்த ஷெர்மன் சட்டத்தின் இரண்டு பகுதிகளின் தமிழாக்கம் இங்கே - இது இந்தச் சட்டதின் பின் உள்ள குறிக்கோளை காட்டலாம்
1. எந்த ஒரு நிறுவனங்களுக்கிடையேயான ( ஒரு பகுதி அரசு நிர்வாகமாகவும் இருக்கலாம்) ஒப்பந்தம், நேரடியாகவோ அல்லது சூழ்ச்சியின் மூலமாகவோ, எந்த ஒரு வணிகத்தையும் தடை செய்யும் வகையில் இருந்தால் அது சட்டமீறலாகும். எந்த தனிமனிதனோ அல்லது நிறுவனமோ இந்த சட்டமீறை செய்திருந்தால் அவர்களுள் குற்றம் செய்தவர்களாகின்றனர் அவர்களுக்கு சிறை தண்டனையோ , பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்
2. எந்த ஒரு தனி மனிதன் சந்தையை கையகப் படுத்தினாலோ அல்லது திட்டம் போட்டிருந்தாலோ அவர்களுக்கு சிறை தண்டனையோ பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்.
பல ஷெர்மன் சட்டத்தின் விதிகள் தற்போதைய நீதிமன்றங்களால் வேறு வகைகளில் பார்க்கப் பட்டாலும் , இந்த சட்டங்களுக்குப் பின்னாலுள்ள நோக்கு கவனத்திற்கு உரியது. சில பல உச்சநீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் போது, இந்த ஷெர்மன் சட்டத்தில் அடிவாங்கிய, தப்பிய வழக்குகளை, பார்க்கும் போது, இந்த நோக்கு ஒரு புரியலையும் , அமெரிக்க வணிகக் கட்டுப்பாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது எனவும் கணிக்க உதவலாம்.
மேலும் படிக்க
Saturday, February 07, 2009
[மன்னிக்க நான் பாட்டுக்கு யானைக் கட்சி / கழுதைக் கட்சி என வார்த்தை சுருக்கத்திற்கு எழுதுகிறேன். கழுதைக் கட்சியினர் என்றால் அது ஒபாமா கட்சியையும் யானைக் கட்சியென்றால் அது புஷ் கட்சியையும் குறிக்கும். "ஜாக் அஸ்" என தேர்தலில் நின்ற, மிக முன்னால் அமெரிக்க அதிபரான அண்ட்ரு ஜாக்ஸனை, தாக்கிய சமயத்தில், டெமாகரடிக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரு, அதையே தன் சின்னமாக கொண்டதால், டெமாகரெடிக் கட்சியினர் சின்னமாக கழுதை ஆனது. ரிபளிகனுக்கு யானை சின்னம் வந்தது ஒரு அரசியல் கார்டூன் மூலமாக. சரி நம்ம கதைக்கு போவோம்.] Aஇப்படி தாராளமயத்தினரும் ( லிபரலுக்கு என்னுடைய தமிழாக்கம்) பழைமைவாதிகள் போல், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்றால் அவர்களும் பழைமைவாதிகள் போல ஆக மாட்டார்களா என்றால் என்னிடம் "நேர்மையான" பதில் இல்லை. இந்த பழமைவாதிகள்/தாராளமயத்தினர் போராட்டம், சுர/அசுர போராட்டம் போல் தான். இனைந்து போக வழியில்லை. இனைந்து போனால் அங்கே அதன் பின் குழப்பம் தான். முழு தாராளமய அதிபருக்கு, அமெரிக்கா அதனுடைய அடிப்படை சுயத்தில், நீண்ட நாட்களுக்கு ஆதரவு தராது. இந்த முதல் இரண்டு வருடங்கலுக்கு எந்தளவிற்கு தாரளமய திட்டங்களை புகுத்த வேண்டுமோ, அந்தளவிற்கு புகுத்தி, அடுத்த இரண்டு வருடங்களுக்கு பழமைவாதிகளின் "வேடம்" போட்டால், மீண்டும் நான்கு வருடங்கள் உறுதி. ஜார்ஜ் புஸ் செய்ததும் அது தான் அவரது முதல் இரண்டு வருடங்கள் எந்தளவிற்கு பழமைவாதிகளின் பொருளாதார/ராணுவ திட்டங்களை புகுத்தமுடியுமோ அப்படி புகுத்தி, பின் அடுத்த இரண்டு வருட தாரளமய வேடம் போட்டு திரும்ப தேர்தலை கையாண்டார். அவரது இறுதி இரண்டு வருடங்களும் அவரை தாராளமய (முக்கியமாக பொருளாதார) அதிபர் என்றே பழைமைவாதிகள் திட்டி வந்தனர்.
இன்றைய வால்ஸ்டிரீட் பத்திரிக்கையில் இந்தப் பொருளாதார ஊக்கியைத் தாக்கி கடுமையான கருத்து வந்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனை பொருளாதாரச் சந்தையில் பணச் சுற்று இல்லாமைதான். வங்கிகளுக்கிடையேயான பணச்சுற்று நின்று அதன்பின் வங்கிகள் அதற்கு அடுத்த தரப்பிற்கு பணச்சுற்றை விட முடியா நிலைமையில் எல்லா பொருளாதார இயக்கங்களும் கரகர வென்று ஆகிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணச்சுற்று உராய்வு எண்ணையைப் போன்றது என்றே கருதப்படும். இந்தப் பணச்சுற்றை முடுக்கிவிடுவது எப்படி என்பதில் பழமைவாதிகளுக்கும் தாராளமயத்தினருக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. பழமைவாதிகள் பொருளாதார நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதன் மூலம் பணச்சுற்றை இயக்கமுடியும் என்னும் நம்பிக்கை உடையவர்கள் மேலும் அவர்களது அரசியல் பின்புலமும் பொருளாதார நிறுவனங்கள்(சிறிது/பெரிது) சார்ந்தது. தாராளமயத்தினர் காப்பாள அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களது அரசியல் பின்புலமும் காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோர் மூலமே வருவது. அதுவும் ஒபாமா இந்த தேர்தலில் ஒருங்கினைத்தது அப்படி காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோரையே . ஆகவே ஒபாமாவின் இந்த பொருளாதார ஊக்கித் திட்டத்தில் பணச் சுற்று ஏழ்மை/இயலாமையிலிருந்து காப்பதற்கான திட்டங்களுடன் உள்ளது என்பது ஆச்சர்யப் படத்தக்கதல்ல. மேலும் அந்தப் பணச்சுற்று "நிச்சயமாக" செலவிடப்படும் என்னும் அடிப்படையில், அப்படி செலவிடப் படும்போது அது ஒரு பொருளாதார ஊக்கத்தைத் தரும். அந்த ஊக்கம் மேலும் வேகமெடுத்து பொருளாதாரத்தை முன்னெடுக்கும் என்பது அவர்கள் கருத்து. நீயுயார்க் டைம்ஸ்ஸில் பத்தி எழுதும், சமீபத்தில் நோபல் பரிசினைப் பெற்ற, பால் குரூக்மன் போன்றார், இதைவிட பெரிதான பொருளாதார ஊக்கித் திட்டத்தினை முன்வக்கின்றனர். குரூக்மேன் ஒபாமா செய்வது பத்தாது என்று வேறு சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். வால்ஸ்டீரீட் போன்ற பழமைவாத எண்ணத் தொட்டிகள் (இது திங் டாங்ககிற்கான கிண்டலான தமிழாக்கம்), இதற்கு நேர் எதிராக அமெரிக்க நிறுவணங்க்ளுக்கு வரிவிலக்கு தருவதல் மூலம், அவர்கள் அந்த வரிவிலக்கான பணத்தை திரும்ப நேரடி கடனாகவோ, கமெபெனி ஸ்டாக் வாங்குவதன் மூலம், பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த முடியும் என்கின்றனர். உண்மையில் வெறும் பொருளாதார அதுவும் மனிதாபிமானமற்ற, முரட்டுப் பொருளாதாரப் பெருக்கம், இந்த இரண்டு குழு சண்டைக்கு வெளியில் எங்கோ இருக்கின்றது. ஆனால் அந்த மனிதாபிமானமற்ற, முரட்டு பொருளாதாரப் பெருக்கம், முடிவில் எந்த மயிரைத் தரும் என எனக்குத் தெரியாது. தற்போதைய பழமைவாத பொருளாதாரவாதிகளும், முரட்டுப் பொருளாதாரவாதிகள் போல் போலி மயக்கம் கொடுத்தாலும், அவர்களும் ஒருவித காப்பாள நோக்கினை ,அதாவது "தற்போதைய" நிறுவனப் பின்புலங்கள் அழிந்துவிடக் கூடாது என்னும் திட்டத்துடனே செயல் படுவர். மனிதாபிமானமற்ற, முழு முரட்டுப் பொருளாதாரம் இயங்கினால் அது விலங்குகள் அரசு. வலிமை மட்டுமே ஜெயிக்கும் இடமாக இருந்தாலும். வலிமையின் அர்த்தங்களும் அங்கே தொடர்ந்து மாறிக் கொண்டு இருக்கும். அதைப் போலவே நிறுவனம் என்பதான அர்த்தங்களும் அதன் பின்புலங்களும் மாறிக் கொண்டு இருக்கும். அந்த நிலமை பழமைவாதிகளுக்கு தாராளமயத்தினரை விட அதிகம் ஆப்பு வைக்கும் ஒன்று
என்னைப் பொருத்தவரையில், எனது ஆதரவு ஒபாமா வழி பொருளாதார ஊக்கிகுத் தான். இது பத்தாது இன்னமும் அதிகம் வேண்டும் என்னும் குருக்மேன் போன்றார் கருத்திலும் என் நம்பிக்கை. புஸ் (புஷ்சைவிட இது நன்றாக இருக்கின்றது) வழி செய்து பார்த்தாகிவிட்டாயிற்று. வரிவிலக்கு பெற்ற நிறுவணங்களும் அதன் அதிகாரிகளும் எந்த மயிரையும் புடுங்கவில்லை ஐந்து ரூபாய் பொருமான உடைய ஒன்றை ஐநூறு ரூபாய் பொருமானம் உள்ளதாக போலி விளையாட்டு காட்டி ஐநூறு ரூபாய்க்கான இடைக்கூலி பெற்றதைத் தவிர. பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்படும், கூடவே கவிழ்க்கப்படும், அரசியல்வாதிகள் மேல் (எவ்வளவு மோசமானவன் என்றாலும்) நம்பிக்கை வைப்பது, கோல்ஃப் கிளப் கனெக்ச்சன்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவன அதிபர்களை நம்புவதைவிட நிச்சயமாக மேலானது. என்ன பொதுமக்கள் சற்று சுரனையுடனும், குறைந்த பட்ச அறிவுடனும், தன்னைச் சுற்றியிருக்கின்றவன் நலத்தில் அக்கறை(அவன் நிறம்/குணம்/நீளம்/அகலம் சார்ந்து அல்ல)யுடனும் இருந்தால் அரசியலை சுத்தப் படுத்தமுடியும். அதே சமயம் அப்படி இருந்தாலும், கோல்ஃப் கனெக்சன் நிறுவன அதிபர்களை எந்த மயிரும் பிடுங்கமுடியாது
மேலும் படிக்க
Saturday, January 31, 2009
நன்றி
மேலும் படிக்க
Saturday, January 24, 2009
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆயுட்கால நியமனம் என்பதால் அவர்களது பாதிப்பு அமெரிக்க அரசியலில் அதிகம் ஆனால் அமெரிக்க அதிபர்கள் போல் பூமாலையோ , கல்லடியோ பெறுவதில்லை. அமெரிக்க அரசியல் வழிமுறைகளில் என்னால் ஆழ்மனதளவில் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று இந்த ஆயுட்கால நியமனம். ஜான் ஆடம்ஸ் நியமனம் செய்த ஜான் மார்ஷல், அமெரிக்க நீதித்துறையிலும் அதன் பின் விளைவாக அமெரிக்க அரசியல் அரங்கில் விளைந்த மாற்றங்கள், ஜான் ஆடம்ஸ் மற்றும் அவரது அரசியல் எதிர் தாமஸ் ஜ்ஃபர்சன் அரசியல் அரங்கில் செய்ய முனைந்த மாற்றங்களை விட பாதித்தவைகள். ஆனால் உலகுக்கு ஆடம்ஸையும் ஜ்ஃபர்சனையும் தெரிந்த அளவுக்கு ஜான் மார்ஷலை தெரியாது. ஜான் மார்ஷல் மிகக் குறைந்த வயதில் நியமனம் ஆனாதால் மிக நீண்ட நாட்கள் பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்து குறைந்த வயதில் நியமனம் ஆனவர், தற்போதய முதன்மை உச்ச நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். அவரை நியமித்தது ஜார்ஜ் புஷ். ஜார்ஜ் புஷ் செய்த பல முட்டாள்தனங்களை, பராக் ஒபாமா மாற்றி எழுதிவிட முடியும் , ஆனால் ஜான் ராபர்ட்ஸ்சை ஒன்றும் செய்ய முடியாது. அவர் குறைந்த அளவில் 2030 வரை இதே பதவில் இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. பொதுவாக சுப்ரீம் கோர்ட் அதனது முதன்மை நீதிபதியின் பெயரினாலே குறிக்கப்படும். மார்ஷல் கோர்ட், டானரி கோர்ட், வாரன் கோர்ட், ராபர்ட்ஸ் கோர்ட் என்று. அமெரிக்க அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்தது , சில குறிப்பிட்டு சொல்லக் கூடிய கோர்ட்களினால் தான். கோர்ட்களின் உட்கோட்டமைப்ப்பை அமைப்பது அதிபர்களின் பங்கு. ரீகனும், புஷ்சும்(இரண்டும்) தற்போதைய கோர்ட்டின் உள்மைப்பை பழமைவாதிகள் கை ஓங்குமாறு செய்திருந்தார்கள். ரீகன் நியமனங்கள் முக்கியமாக சாண்ட்ரா ஒ கானர், 2000 தேர்தலை மக்கள் ஓட்டை எதிராளியை விட குறைவாக பெற்றிருந்தாலும் புஷ்ஷை அதிபராக நியமிக்க உதவியாக இருந்தது என ஒரு அரசியல் விவாதம் சொல்லும்.
நாம் அடுத்து பார்க்கப் போவது டானரி கோர்ட். மார்ஷலுக்கு அடுத்து முதன்மை நீதிபதியாக வந்தவர் தான் டானரி. மார்ஷலைப் போலவே, டானரி , அதிபர் அண்ட்ரூ ஜாக்சன் அமைச்சகத்தில் இருந்தவர். நீதித்துறை செயலராக இருந்தவர். அண்ட்ரூ ஜாக்சனின் கொள்கைகளை தொல்லையின்றி கொண்டு செல்ல முதன்மை நீதிபதியாக நியமிக்கப் பட்டவர். அண்ட்ரூ ஜாக்சன் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் படிக்க அறிந்து கொள்ள சுவாரசியமான ஒன்று
டானரி கோர்ட் காலகட்டத்தில் அமெரிக்க பலத்த மாற்றங்களை அடைந்து கொண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும் வளர்ந்து கொண்டிருந்தது. அதே சமயம் அடிமை மறுப்பு விவாதம், அனைவருக்குமான உரிமை என்ன்னும் கொள்கை வடபகுதி மக்களின் ஆதார பிரச்சனையாக வளர்ந்து கோண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும், தென்பகுதி அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. அந்த வளர்ச்சிக்கு அடிமை முறை மிகுந்த ஆதாரவாக இருந்ததை யாரும் உணரலாம் அந்த வகையில் அடிமை முறை வேண்டும் என்பது தென்பகுதி அமெரிக்க மக்களைன் வாழ்வாதரவான பிரச்சனையாக இருந்தது.
ஆண்ட்ரூ ஜாக்சனும், டானரியும், பொருளாதார விடயங்களில் தலையிடாமை (அது எந்தளவிற்கு பொது அறத்திற்கு பாதகமாக இருந்தாலும் அதே சமயம் அமெரிக்க அடிப்படைச் சட்டங்களை மீறாமல் இருக்கும் வரை) எனக் கொண்டிருந்தனர். அமெரிக்க சட்டங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உரிமை என கொடுத்து இருந்தாலும், அடிமைகள் மனிதனே இல்லை ஆகவே உரிமை ஏதும் இல்லை என்னும் நீதி ஓடிக் கொண்டிருந்து. இந்தக் கொள்கைப் போராட்டங்கள் தான் பின்னால் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தன.
இந்த அடிமைகள் முழு மனிதனே இல்லை என பார்க்க எப்படி அமெரிக்க சட்டம் வழிதருகிறது என்பது கொடுமைதான் என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்க கூட்டாட்சியினை நிலை நாட்ட வடக்கு மற்றும் தென் மாநிலங்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்தன். அடிமைகளை எப்படி கணக்கிடுவது என ஒரு முக்கியமான பிரச்சனை. அடிமைகளை பொருளாக கணித்தால், தென் மாநிலங்களின் மக்கள் விகிதார அளவு பாதிக்கும், முழு ஆளாக கணித்தால், வரி கணக்கிடுவதில் பாதிப்பு. ஆகவே அடிமைகள் 3 ல் 5 அளவுக்கு மனிதர்கள் என முடிவு செய்து அதை அடிப்படை சட்ட ஆதாரங்களில் எழுதி விட்டனர், அடிமை மறுப்பாளர்களின் எவ்வளவோ எதிர்ப்பையும் மீறி. அந்த விதியைக் காரணம் காட்டியே அடிமைகளுக்கான தனிமனித உரிமைகளை தடுத்து வந்தனர். அந்தக் காலகட்டங்களில் வடக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றாக அடிமை வைத்துக் கொள்வதை தடை செய்ய ஆரம்பித்து இருந்தனர். அமெரிக்க அடிப்படைச் சட்டங்களில், தப்பித்துப் போகும் அடிமையினை, திரும்ப முதலாளி எடுத்துக் கொள்ளும் உரிமையும் இருந்தது. ஆனாலும் அடிமை மறுப்பைச் சட்டமாக எடுத்திருந்த வட மாநிலங்கள், அந்த உரிமையை நிலை நாட்டவில்லை. பென்சில்வேனியா மாநிலம் அந்த வகையில் எட்வர்ட் ப்ரிக்ஸ் என்பவனை அவன் அடிமையை திரும்ப பிடிக்கமுயன்றதற்காக கைது செய்து இருந்தது. அந்த வழக்கு உச்சநீதி மன்றத்துக்கு சென்ற போது டானரி கோர்ட் அவனை விடுதலை செய்தது. இது நடந்தது 1840 களில்.
இதற்கு முன்னதாக 1820ல் வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கும் அடிமை நிலையை முன்வைத்து மக்கள் மன்றத்தில் மேலும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது மிசௌரி மாநிலத்திற்கு வடக்கு மற்றும் கிழக்காக இருக்கும் பிரதேசங்களில் அடிமைகள் வைத்துக் கொள்வதற்கு முழுத் தடையும் அதற்கு கீழ் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களில் எடுக்கும் முடிவும் இருக்கும் என்பது தான் அந்த மக்கள் மன்றத்தின் ஒப்பந்தம். அது மன்றத்தின் சட்டபிரயோகமாக வந்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தை சோதிக்கும் வகையில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. டிரெட் ஸ்காட் என்னும் அடிமை மிசௌரி மாநிலத்தில் இருந்தார். அவரை அவரது முதலாளி, இலியனாய்ஸ் மாநிலத்திற்கும் அதன் பிறகு மினசோட்டா மாநிலத்திற்கும் "எடுத்து"ச் சென்றிருந்தான். அந்த இரண்டு மாநிலங்களும் அடிமை மறுப்பு மாநிலங்கள். பின் அவர்கள் மிசௌரி மாநிலத்திற்கு திரும்பினர். ட்ரெட் ஸ்காட் இப்பொழுது தனது விடுதலைக்காக 1857ல் ஒரு வழக்கு தொடுத்தார். அதற்கு இலியனாய்ஸ் மாநிலத்து அடிப்படைச் சட்டத்தையும், 1820 வந்திருந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகத்தையும் ஆதரவாக வைத்திருந்தார். மிசௌரியில் இழந்து, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது உச்ச நீதிமன்றத்தில் 4 அடிமைமறுப்பு சார்பு இருந்த நீதிபதிகளும், 5 அடிமை வைப்பு சார்பு (டானரியையும் சேர்த்து). பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து நீதியுடன் கருத்தினையும் சொல்வார்கள். அதில் ஒத்துக் கொள்ளாதவர்கள் எதிர்வாதமாக தங்களது கருத்தினையும் வைப்பார்கள். இந்த வழக்கில் அனைத்து 9 நீதிபதிகளிம் கருத்து சொல்லியிருந்தார்கள். டானரியையும் சேர்த்து. டானரியின் கருத்து பெரும்பான்மையினரின் கருத்தாக கருதப்பட்டது. கிழடாகியிருந்த டானரி, அடிமை விடயத்தில் முற்றுப் புள்ளி வைத்து விடுவது என முடிவு எடுப்பது போல் அவரது கருத்து இருந்தது இவ்வாறாக ,
1820ல் வந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகம் அடிப்படைச் சட்டத்தை மீறியது ஆதலால் செல்லாது. அடிமைகள், அடிப்படைச் சட்டமியற்றிய காலத்தில் "வென்ற" வெள்ளை இனத்திற்கு கீழ் இருக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்தவித உரிமையும், விடுதலை பெறும் உரிமையும் சேர்த்து, கிடையாது. தனிமனித உரிமைகளில் பொருளுடைமையையும் காக்க அடிப்படைச் சட்டம் இருப்பதால், அடிமைகள் பொருளுடமைக்குள் வருவதால், அவர்களை விடுவிக்க எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது
இந்தச் சட்டம் வெளிவந்த பிறகு அடிமை மறுப்பாளர்கள் எதிர்ப்பு அதிகமாக, அடிப்படைச் சட்டங்களைப் பற்றிய நம்பிக்கை கிழே இறங்கியது. வடக்கு தெற்கு பிரிவினை உச்சத்திற்கு வந்தது. இன்னமும் இந்த வழக்கும், இந்த வழக்கின் முடிவும் அமெரிக்காவிற்கு அவமானம் தரக்கூடிய வழக்காக இருந்து வருகின்றது. அதனாலேயே கீழ் வரும் படத்தின் பின் இருக்கும் உணர்வு (symbolism) பலமாக பேசப்பட்டது. கீழே இருக்கும் படம் மிசௌரியில் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்கப் பட்டது. பின்னால் தெரியும் கட்டடத்தில் தான் முதலில் டிரெட் ஸ்காட்டின் வழக்கு நிராகரிக்கப் பட்டது.

தொடரலாம்
மேலும் படிக்க
Saturday, January 17, 2009
அமெரிக்க தேர்தல்களுக்கு முன் இந்தக் கட்டுரை முடிந்தால் நல்லது என நினைத்தது தப்பிப் போய் விட்டது. ஆனால் பராக் வெற்றி, உச்ச நீதிமன்றம் வலது பக்கமாக பலமாக சாய்ந்து விடும் என்ற பயமும் இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு என்பிஆர் ரேடியோவில் மெக்கெயின் அல்லது பழமைவாதிகள் ஆட்சிக்கு வந்தால், உச்ச நீதிபதிகளின் சமன் எவ்வாறு கெடும் , அந்த கேடு எந்தளவிற்கு பாதிக்கும் என்று கேட்டு, உண்மையிலே பயந்து அதை பதிவு செய்ய நினத்ததின் விளவு தான் அந்த கட்டுரையின் ஆரம்பம். இன்று இந்தச் செய்திக் குறிப்பில் கண்ட மார்பரி - மாடிசன் வழக்கைப் பற்றிய பின் குறிப்பு என்னைத் தூசி தட்ட வைத்து விட்டது.
அமெரிக்க ஆரம்பகால வரலாற்றில் கூட்டாட்சியாளர் (Fedaralists) எதிர் கூட்டாட்சியாளர் என வலுவான இரு பிரிவு இருந்தன. ஜான் ஆடம்ஸ் போன்றோர் கூட்டாட்சியாளர்களாகவும், தாமஸ் ஜெஃபர்சன் போன்றார் எதிர் பக்கமும் இருந்தனர். இந்த இரு பிரிவினர் இடையேயான வாதங்கள் தான் அமெரிக்க கூட்டாட்சியின் அடிப்படைச் சட்டங்களை எழுத உதவியது. பரந்த, முற்போக்கான, அரசாங்க கனவைக் கொண்ட, இள ரத்த கூட்டாட்சியாளர்களும், பரந்த அரசாங்கமாக இருந்த பிரிடனிடம் இருந்து சற்றுமுன் தான் விடுதலை பெற போராடிய மாநில மற்றும் மாநில அரசாங்களின் வலிமைக்காக நின்ற அதே சமயம் வயதாகிக் கொண்டிருந்த எதிர் கூட்டாட்சியாளர்களும் நடந்த விவாதங்கள் தான் பின்பு ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ் என்னும் பெயர் பெற்றது. உருவாகி வரும் அமெரிக்க அடிப்படை சட்டங்கள், மாநிலங்களின் சட்டங்களை விட பெரிது என எல்லோரும் ஏற்றுக் கொள்ள அப்பொழுது நடந்த விவாதம் இன்றும் மாறுபட்ட வகைகளில் தொடர்வது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகத் தான் நான் கருதுகின்றேன். இந்த பிரசித்தி பெற்ற தனிமனித உரிமை சாசனமே, எதிர் கூட்டாட்சியாளர்களைச் சமாதானப்படுத்த ஏற்படுத்திய ஒன்று தான். அதே சமயம் இப்படி சமாதானப் படுத்த நடந்த விடயங்களில், கை விடப்பட்ட ஒன்று தான் அடிமை மறுப்பு. தெற்கு மாநிலங்களின் உணர்ச்சிபூர்வமான ஒன்றாக அடிமை வைத்துக் கொள்ளும் உரிமை இருந்த சமயம். பென்சமின் ஃபிராங்களின் போன்ற தீவிர அடிமை மறுப்பாளர்கள், அடிமை மறுப்பை , அமெரிக்க சட்டமாக இணைக்கப் போராடிய சமயம். கூட்டாட்சியாளர்கள் அந்த விடயத்தை கூட்டாட்சியை நிலை நாட்ட, தென் மாநிலங்களில் விலைக்கு வித்து விட்டனர், 70-80 ஆண்டுகளில், அதுவே கூட்டாட்சியையே குலைக்க வைக்க திரும்ப வரும் எனத் தெரியாமல்.
கூட்டாட்சியாளர்களைப் பற்றி இரு வேறு வகைகளில் வரலாற்றாளர்கள் பார்கின்றார்கள், ஒரு வகை, கூட்டாட்சியாளர்கள், மற்றும் எதிர் கூட்டாட்சியாளர்கள் பிரிவினை, கொள்கை கோட்பாடு சார்ந்தது கூடவே அதில் பொருளாதார நோக்கு இல்லை என்றும், மற்றொரு வகை (முக்கியமாக சார்ல்ஸ் பேர்ட்) இந்தக் கூட்டாட்சி கோட்பாடே, பொருளீட்டாளர் நலன்களுக்காகவும், அவர்களுக்கிடையே சட்ட ஒழுங்கினை ஏற்படுத்தவும், மேலும் வலுமையான மத்திய அரசாங்கம் இருந்தால், அவர்களது கடல்வழி வணிகத்துற்கு பாதுகாப்பாக இருக்க வந்ததே எனவும் பார்க்கின்ற்னர். இந்தக் கூட்டாட்சியினர் மற்றும் எதிர் கூட்டாட்சியினர் தான் தற்போது திரிந்து வழிந்து குழம்பி டெமாகிரேட்ஸ் எனவும் ரிபப்ளிகன் எனவும் நிற்கின்றனர்.
முதல் பத்து வருடங்கள் , ஜார்ஜ் வாஷிங்டனின் அரசாங்கத்தில், இரு குழூவினருமே பங்கேற்றிருந்தலில், அமெரிக்க ஆதார சட்டங்கள் பற்றிய விவாதங்கள், மக்கள் மன்றம், மாநில அரசு மற்றும் அதிபர் அரசாங்கத்தினடமே நடந்தது. உச்சநீதிமன்றம் எந்தளவு அதிகாரம் கொண்டது எனத் தெரியாமலே இருந்தது எனலாம்.
அடுத்த அதிபர் ஜான் ஆடம்ஸ் காலத்தில் தான் கூட்டாட்சியாளர்கள் ஆதரவு இழக்கத் தொடங்கியிருந்தனர். டெமாகிரேட்-ரிபப்ளிகன் என்னும் கட்சி வளரத் தொடங்கியது.
அடுத்த அதிபரான ஜான் ஆடம்ஸ் தனது ஆட்சி அதிகாரத்தின் கடை நாட்களில் இருந்த சமயம் அது 1800. அந்த தேர்தலில் தனது ஆட்சியை ஜெஃபர்சனிடம் இழந்திருந்தார். சொல்லப் போனால் மூன்றாவதாக வந்திருந்தார். அடுத்த அதிபர் பதிவியேற்கவில்லை இன்னும். அப்பொழுது உச்ச நீதிபதியாக இருந்தவர் ராஜினாம செய்து விட்டார். உச்ச நீதிபதியாக ஒரு கூட்டாட்சி சார்பாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், தன்னுடைய அரசு நிர்வாகியாக இருந்த ஜான் மார்ஷலையே நியமனம் செய்தார். மேலும் ஆடம்ஸ் தனது ஆட்சியின் கடைசி நாளன்று, நூற்றுக்கனக்கான மத்திய நீதிபதிகளை ( உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல) நியமனம் செய்தார். கடைசி நாளில் அரசு நிர்வாகி ஜான் மார்ஷலும் ஆடம்ஸ்சுடன் இனைந்து நியமதிற்கான காசோலையை கையெழுத்திட்டு அவசர அவசரமாக அனுப்ப வேண்டியதாகியது. சில பேருக்கு காசலை அனுப்பக் கூட நேரமில்லை. நியமனங்கள் தங்கிப் போனன.
அடுத்து ஆட்சிக்கு வந்த ஜ்ஃபர்சனும், அவரது நிர்வாகியான ஜேம்ஸ் மாடிசனும் தங்கிப் போன நியமனங்களை / காசோலைகளை அனுப்ப மறுத்தனர். அப்படி கிடைக்க இருந்த வில்லியம் மார்பரி என்பர் சுப்ரீ,ம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கோர்டில் உச்ச நீதிபதியாக ஜான் மர்ஷல்.
உச்ச நீதிமன்றத்துக்கு சோதனை. காசோலை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டு அதை ஜ்ஃபர்சன் உதாசீனப் படுத்தக் கூடும். விளைவுகள் கோளாறாக இருந்தன
மார்ஷலின் பரிபாலனை இவ்வாறாக இருந்தது
மார்பரி பக்கம் நீதி இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி பெறவேண்டியது சரியான வழி இல்லை. உச்ச நீதிமன்றம் அரசு இயந்திரங்களுக்கு இடையேயான விவகாரத்தில் நீதி வழங்கும் முழு உரிமையும், மற்ற வ்ழக்குகளில், வழக்கின் முடிவினை "மறுபரிசீலினை" செய்து அந்த வழக்கு முடிவு ஆதார சட்டதின் வழி இருக்கின்றதா அல்லது எதிராக இருக்கின்றதா என முடிவு செய்யும் "அதிகாரம் மட்டும்" இருக்கின்றது.
இதில் மூன்று குழுவினருக்கும் இழப்பு போல், "நீதி இருந்தாலும்" என்று புது நிர்வாகத்துக்கு ஒரு குட்டு, "சரியான வழி இல்லை" என மார்பரிக்கு ஒரு குட்டு, "மறு பரீசீலினை அதிகாரம் மட்டும்" என உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு குட்டு என்பது போல் காட்டி, மறுபரிசீலினை செய்யும் அதிகாரம் என்று ஒன்றை புதிதாக உருவாக்கி, அமெரிக்க நிர்வாகத்தில் தலையை நீட்டி கால்களை அகட்டி உட்கார்ந்து கொள்ள வைத்து விட்டார் மார்ஷல்.
பின்குறிப்பு
இந்த வழக்கில் மார்ஷலுக்கு conflict of interest இருக்குமா?
தொடரலாம்...
மேலும் படிக்க
Saturday, February 09, 2008
எப்படி இவன்களால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் எழுத முடிகின்றது எனத் தெரியவில்லை. தன்னுடைய ஹிப்போகிரசி இவன்களுக்கு உறைக்குமா? உறைக்காதா? உறைக்க வில்லையென்றால் அந்தளவிற்க்கு முட்டாப் பூணாக்களா? இங்கே கருணாநிதி ஆட்சி ஜெயலலிதா ஆட்சி என நான்கு முறை மாறி மாறி வந்தாகி விட்டது. அது எப்படி usual suspects மாதிரி திரும்பத் திரும்பத் இந்தப் பாப்பாரப் புடுக்குகள் 5 வருடம் காணாமல் போவதும் கருணாநிதி வரும்போதெல்லாம் புளுத்திக் கொண்டு வருவதும் ச்ச்ச்ச் இப்படி வருவதன் வித்தியாசம் இந்தப் பாப்பான்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா? இந்த வெங்கட்சுவாமிநாத புடுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் எந்த சமூக விழிப்புனர்வு கட்டுரை அதுவும் முதல்வரின் பெருமிதங்களையும் ரசனைகளையும் அதிகார ஆணவங்களையும் பற்றி வரைந்தது? அதற்கு நேரமில்லாத அளவிற்கு ஜெயலலிதாவின் எந்த முடியை சிரைத்துக் கொண்டிருந்தது? வெங்கட்சுவாமிநாத புடுக்குக்கு மட்டுமில்லை மற்றப் பாப்பாரப் புடுக்குகளுக்கும் சேர்த்தும் தான் இந்தக் கேள்வி. என்ன மாதிரி நம்பிக்கை இந்தப் பார்ப்பான்களுக்கு? இந்த மாதிரி இருக்குமோ? இந்தப் பார்பனரல்லா கூனாக்களுக்கு திரும்பத் திரும்ப அறவியல் மயிரியல் என்ற போர்வையில் படங்காட்டினால், அதுவும் விட்டு விட்டு தன் சௌகரியத்திற்கு என்றாலும் கூட, முட்டாக் கூனாக்கள் ஆண்டாண்டுகாலமாக காலை நக்கும் பழைய ஞாபகம் ஊறித் திளைத்து, குழம்பிப் போய், இது தான் எளிதாயிற்றே என்று நாய் காலை நக்குவது போல் நக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் செய்யும் குயுக்தியா? பார்ப்பான்களையும் அதற்கு தப்பு சொல்ல முடியாது. கோடாரிக்காம்புகள் செழித்து வளரும் பிரதேசமாயிற்றே இந்தத் தே-தமிழகம்? 97% பார்பனரல்லா பிரதேசத்தில் இந்த மாதிரி ஹிப்போகிரைட் கட்டுரைகள், குயுத்தியுடன் வரமுடியும் என்றால் உண்மையில் பார்ப்பனரல்ல கூட்டங்கள், பார்ப்பன வேதங்கள் சொல்வது போல் தே மகன்கள் தானா? வெட்டிப் பூனாக்கள் தானா? ம்ம்ம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம்பி, நரிப்பாம்புகள் கூட சேர்ந்து வாழ்ந்தால் எப்படிச் சூனாவும் வாணாவும் வெந்து போகும் என்பதற்கு இந்தப் பார்பனரல்லா கூனாக்களே நல்ல உதாரணம்.
இன்று இந்தக் கடுப்பைப் பற்றி எழுத வரவில்லை. எழுத வந்தது வேறு. தற்ப்போதைய அமெரிக்க தேசத்து அதிபர் தேர்தலைப் பற்றி, அதன் முக்கியத்துவத்தைப், அதுவும் முன்னெப்போதும் இல்லாத, முக்கியத்தைப் பற்றி எழுதி வைக்க வேண்டும் என்ற ஆசை. நேரப் பற்றாக்குறையும், விரைவாக எழுதத் தெரியாத என்னுடைய திறனில்லாமையும், துன்பப் பட வைக்கின்றது. ஒரு நல்ல காத்திரமான, எந்தக் குயுக்திகளும் இல்லாமல் அடுத்தவன் முட்டாப்பய, தான் பெரும் புளுத்தி என்னும் எண்ணம் துளிக்கூட வெளிப்படா பல கட்டுரைகள், வலது இடது என்றில்லாமல் இந்த மேற்கத்திய உலகில் காணக் கிடைப்பது உண்மையிலேயே வயிற்றெரிச்சலைக் கொடுக்கின்றது. ஆறு மாதகாலமாக எழுத நினைத்தது தள்ளிக் கொண்டே போகின்றது. சமீபத்திய வால் ஸ்டீரீட் பத்திரிக்கை கட்டுரைகளும், அதிபராக வர ஆசைப்படுபர் முக்கியமாக ரிபப்ளிகன் கட்சியில் இருப்பவர்கள் , கொடுக்கும் சில அரசியல் வாக்குறுதிகள் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியமான ஒன்று எனத் தெரிய வைக்கின்றது.
அமெரிக்க தேசம், அதன் கனவுகளைத் தாண்டி, அதன் அதிகார ஆணவங்களைத் தாண்டி, அதன் ஆதாரக் கோட்பாடுகளால் என்னைக் கவர வைத்த ஒரு தேசம். தன்னுடைய தேசமக்கள் என்றில்லாமல், உலக மக்கள் எவருக்குமாக, அதன் அதிகார எல்லைக்குள், வரைந்த உரிமை சாசனம் மிகவும் ஆச்சர்யப் படக் கூடிய ஒன்று. என்னுடைய ஆரம்பகால வலைப் பதிவுகள் காலத்தில் அதாவது 2004ல், அமெரிக்க உரிமை சாசன விவரணைகளை (அதன் முதல் பத்து) மொழியாக்கம் செய்திருந்தேன். ஒரு 6,7 மாதங்களுக்கு முன் அமெரிக்க ஆதாரச்சட்டங்களையும் அதை நிர்வகிக்கும் முறைகளைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு வந்தது. படிக்கப் படிக்க வியப்பும் அதே சமயம் இந்த நிர்வகிக்கும் முறைகளில் இருக்கும், எனக்குப் பட்ட, ஓட்டையும் தான், இங்கே எழுத வேண்டிய முனைப்பின் பின் இருப்பது.
< இது இன்னமும் எடிட் செய்யா நிலையில் மனதில் தோன்றியதை கொட்டி வைக்கின்றேன். பின்னர் தேவைப்பட்டால் எடிட் செய்து கொள்ளலாம் –என இங்கே பதிக்கின்றேன். ஒழுங்கில்லா நிலைக்குப், படிப்பவர்கள் மன்னிக்க >
மேற்கத்திய உலகம் இந்த உலகிற்கு கொடுத்த முக்கியமான கொடை இந்த முறைபடுத்தப்பட்ட மக்களாட்சி முறை என்று தனிப்பட்ட வகையில் கருதுகிறேன்.(குடவோலையையும் மக்களாட்சியையும் அதன் ஓற்று வேற்றுமைகளை பின்னர் கவனிப்போம்). அந்த வகையில் பதினேழாம்/பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும், மன்னராட்சிக்கு எதிராக வந்த மாற்றங்களைப் பற்றி ஆராயலாம். மிக அடிப்படையில், எந்த நிலையில், ஒரு சமூகம், மன்னராட்சி அல்லது ஒரு தலைவன்/சர்வாதிகாரியின் அல்லது ஒரு சிறு குழுவின் கண்கானிப்பில் தன்னை விட்டு விடுவது இயல்பாக நடக்கின்றது அதே சமயம். வேறு ஒரு சமூகம், அதன் எதிர் நிலையான, இந்த மக்களாட்சி என்ற முறையை, அதாவது தன்னைச் சுற்றி நிகழும் அனைத்திலும் தன் தனிப்பட்ட விருப்பத்தை ஏற்றும் வாய்ப்புள்ள ஒரு சமூக கட்டமைப்பை ஏற்பது இயல்பாக நடக்கின்றது எனவும் ஆராய வேண்டியிருக்கின்றது. தற்போது எங்கேயும் இந்த சுத்தமான அமைப்புமுறை / பிரிவு இல்லையென்றாலும், இதனுடைய வாசனையை நம்மால் அறியலாம். இந்த சுத்தமான அமைப்புமுறை மற்றும் தெளிவான பிரிவு இல்லாததற்கும், இந்த அடிப்படையே ஒரு காரணம் என்றும் பின்னால் கணிக்கலாம் ஒவ்வொரு இனத்திற்கும் (அதாவது உயிரினத்திற்கும்) ஒரு டிஎன்ஏ இருப்பது போல ஒவ்வொரு மனித சமூகக் கூட்டத்திற்கும் ஒரு சிந்தானா முறை "டிஎன்ஏ" இருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணிக்கொண்டால், சிலவற்றை அர்தப்படுத்தலாம் ( அனர்த்தமும் படுத்தலாம்). தமிழனின் சாப்ட்வேரில் சில பல பிரச்சனை இருக்குப்பா என்பான், சாப்ட்வேரில் வேலை பார்க்காத என் நண்பன். அப்படி அர்த்தப்படுத்த வாய்புள்ளதாக நான் எண்ணுவது இந்த முன்னர் சொன்ன பிரிவு. தாய்வழி/ பெண் வழி சமூகம் அல்லது விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த சமூகம் (நீட்டிப்பாக) இந்த தொழிற்சாலைகள் சார்ந்த சமூகங்கள் ஒரு வகை டிஎன்ஏ என்றால் ( இது ஒரு வகை குருடர்கள் யானை பார்த்த கதை தான் என்றாலும் - இது தரும் சுவாரிசியம் என்னை வசீகரிக்கின்றது), ஆண்வழி சமூகம் அல்லது வியாபாரம், கேளிக்கை, தொழில் திறன் அல்லது தனிப்பட்ட உடல் திறன் (காசுக்கு ஆள் வெட்டறது கூட!!) வழிச் சமூகங்கள் ஒரு வகை டிஎன்ஏ. இந்த இரண்டு வகையே, மக்களாட்சியா அல்லது பெரு மன்னர்/பெரு அதிபர் ஆட்சியா எனத் தீர்மானிப்பது என்பது என் எண்ணம். இந்த மேற்கு மட்டும் கிழக்கு சிந்தனாமுறைகளுக்கு அடிப்படை கூட இந்த இரண்டு வகையாக இருக்கலாம். வியாபாரியான கனியன் பூங்குன்றனார் எழுதியதற்கும் , விவசாய குடும்ப திருவள்ளுவரின் எழுத்திற்கும் ஆழத்தில் உள்ள அடிப்படை வேறுபாட்டை இந்த இரண்டு வகை டி என் ஏ பிரச்சனையாகக் கூட பார்க்கலாம். மேலும் இதன் நீட்டிப்பாகவே இந்த அமெரிக்க கன்சர்வேட்டிவ்ஸ்கள் அதன் எதிர் பக்கத்தில் இருக்கும் லிபரல்கள் (அத்தாரிட்டேரியன் vs அனர்கிஸ்ட்டுகள்) எனவும் நீட்டித்திப் பார்க்க முடியும் என நினைக்கின்றேன். மேலொட்டமாக இவைகள் இந்த தெளிவான கருப்பு வெள்ளை படலத்தில் இல்லாமல் ஒரு கலப்படியான கலவையாக இருக்கும் ஆனால், இதனை வெங்காயத் தோல் உரிப்பது போல் லேயர் லேயராக உரித்தால், இந்த கருப்பு வெளுப்பு அடிப்படை தெரியவரலாம் என்றூ ஒரு அனுமானம். சரி இது எனது தனிப்பட்ட கருதுகோள் -. கவனிக்க - எந்த வகைப் பிரிவு எந்த அடிப்படையில் சிக்கும் என்பதை சொல்லவில்லை அதை அவரவர் தனிப்பட்ட புரிதல்களுக்கு விட்டு விடுகின்றேன்.
கடந்த இரு நூற்றாண்டு அமரிக்க கூட்டாட்சியின் போக்கை, மனநிலையை தெரிந்து கொள்ள அந்தந்த காலத்திய சட்டத்திருத்தங்களைப் பற்றியும் அந்த காலத்திய நீதிமன்ற முடிவுகளும் கருத்துக்களும் அவசியம். அமெரிக்க சிவில் போரைத் தூண்டியதில் அந்தக் கால நீதிமன்ற முடிவு மற்றும்கருத்துக்கள் ஒரு காரணம் என்பர் பலர். அமெரிக்க கூட்டாட்சி ஆதார சட்டங்களை ஒரு 20 அல்லது 25 பக்கங்களில் அடக்கிவிடலாம். ஆனால் அதை ஒட்டிய நீதிமன்ற கருத்துக்கள் , நீதிமன்ற முடிவுகளை படிக்க, தெரிந்து கொள்ள, ஒரு கேரியர் தேவைப்படலாம். இதைப் படிப்பவர்கள், இதில் எழுதப்பட்டவைகள் ஒரு தனி மனித புரிதல் முயற்சிகள் என்றளவில் பார்த்தால் ஷேமம். ஆதாரங்களை சேகரிக்கப் போவதில்லை எவருமே கூகுளாண்டவர் புண்ணியத்தில் பலவற்றை தெளிந்து கொள்ள முடியும்.
அமெரிக்கப் புரட்சியின் போதே இந்த அரசாங்க வடிவைப் பற்றிய விவாதம் இருந்தது. அரசாங்கங்களைப் பற்றி இரண்டு வித மரபுகள் இருந்தன. எந்த ஒரு தனிமனிதரின் நன்னடத்தையையும் கடமையையும் தீர்மானிப்பது, முன்பே ஒத்துக் கொண்ட ஒப்பந்தத்தின் எல்லையே என ஒரு மரபும், தனி மனிதர்கள் நன்னடத்தையையும் கடமையையும் பிறப்பிலே கொண்டவர்கள் எனவும் அவர்களின் அரசியல் பங்களிப்பே அரசாங்கங்களை நடத்திச் செல்லும், என ஒரு மரபும் இருந்தன. (மிக எளிமையாக்கிவிட்டேன் என நினைக்கின்றேன் - மேலும் விரிவாக அறிய ஆசைப்படுபவர்கள் Social contract theory என கூகிளிட்டு ஆரம்பித்து அறிந்து கொள்ள முயலாம்). இந்த இரண்டு வித மரபுகள் திரிந்து இப்பொழுது அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் எனவும் குடியரசு கட்சியினர் எனவும் வந்துள்ளனர். இதன் ஆரம்பகால கட்டங்களில், மத்திய கூட்டாட்சிக் குழுவினர் (federalists) எனவும் இவர்களின் எதிர் குழுக்கள் எனவும் இரண்டு கூட்டணியினர் இருந்தனர். ஜார்ஜ் வாஷிங்டனின் ஆட்சிக் காலத்தில், இரண்டு குழுவினரும் ஆட்சிப் பங்கில் இருந்தனர்.
எல்லா மக்களாட்சி முறைகளைப் போலவே அமெரிக்க கூட்டாட்சியும் மக்கள் மன்றம், நீதிமன்றம், அரசாங்க மன்றம் என்னும் மூன்றடுக்குகளால் ஆனது. இந்தியா மூன்றடுக்கா அல்லது இரண்டடுக்கா என்னும் குழப்பம் இப்பவும் எனக்கு உண்டு. 1947-52 கலில்இந்திய அரசாங்கம் உருவான முறையும், 1768-1791களில் அமெரிக்க அரசாங்கம் உருவான முறையையும் ஒப்புமைப் படித்திப் பார்க்கலாம். மேலோட்டமாகப் பார்த்தாலும் இரண்டும் தலைகீழான முறையில் வளர்ந்தது எனத் தெரியும். மிக வலிமை வாய்ந்த மாநிலங்கள் ஒன்றினைந்து அமெரிக்க கூட்டாட்சியை வளர்த்தெடுத்ததும், வெள்ளைக்காரன் தன் நிர்வாக வசதியை மட்டும் கருத்தில் கொண்டு அமைத்த அரசாங்க வடிவை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை வைத்து இந்திய ஆட்சிமுறை மல்லுக்கட்டுவதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றம் இரண்டடுக்கு கொண்டது. முதலாம் அடுக்கு, மக்கள் தொகைக் கேற்ப அவர்களது பிரதிநிதிகள்(representatives), இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தேடுக்கப் பட்டு மக்கள் மன்றத்துக்கு அனுப்பப் படுவர். அவர்கள் சார்ந்த கட்சியின் பெரும்பண்மை, யார் அந்த மக்கள் மன்றத்தை கட்டுப் படுத்துகின்றார்கள் என வரும். இந்த மக்கள் மன்றம் அதன் எல்லைக் கேற்ப்ப, அரசாங்க கண்காணிப்புக் குழுக்களை உண்டாக்கி வழி நடத்தும். பெரும் பாண்மைக் கட்சியினர் , இந்தக் குழுக்களின் எஜண்டாக்களைத் தீர்மாணிப்பர். அடுத்து இரண்டாம் அடுக்கு, இந்த தேசத்து மாநிலங்களின் ஒவ்வொரு மாநிலத்துக்கான இரண்டு பிரதிநிதிக்களைக்(Senators) கொண்டு அமைந்த ஒன்று, இந்தப் பிரதிநிதிக்கள் ஆறாண்டுக்கு ஒரு முறை அந்த மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப் படுவர். சிறிய மாநிலம் – பெரிய மாநிலம் இரண்டிற்கும் ஒரே மாதிரியான பிரதிநிதிக்கள். இந்த அடுக்கு, மக்கள் மன்றத்தை விட பலம் வாய்ந்தது. அரசாங்க மன்றம், மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு தலைவரின்(president) கீழ் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை அமையும். அந்தத் தலைவரின் விருப்பத் தேர்வுகள் அந்த அமைச்சரவையை அமைக்கும். அந்த அமைச்சரவை நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாதவர்கள். ஜான் ஃகென்னடி தனது தம்பியை ஒரு முக்கிய அமைச்சராக்கியிருந்தார். ஆனால் மக்கள் மன்றத்தால் அங்கீகரிக்கப் படுபவர்கள். அமெரிக்க நீதிமன்றங்கள், பல இருந்தாலும், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமானது. இது ஒன்பது நீதிபதிகளால் ஆனது. இவர்களை அரசாங்கத் தலைவர் தேர்ந்தெடுப்பார். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர்களது ஆட்சிக்காலம், இவர்கள் இறக்கும் வரை நீடிக்கலாம் அல்லது இவர்களாக பதவி விலகும் வரை நீடிக்கலாம். இவர்களையும் இரண்டடுக்கு மக்கள் மன்றம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் மன்றம் இவர்களை (அரசாங்கத் தலைவரையும்) பதவி நீக்கலாம் ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மக்கள் மன்ற ஆதரவு தேவை. உச்ச நீதிமன்றம், அமெரிக்க ஆதார சட்ட திட்டங்களின் அதிகாரப் பூர்வமான காப்பாளர்கள். அவர்களது நீதி இறுதியானது. 9 நீதிபதிக்களின் தனிப் பெரும்பாண்மை, அவர்கள் வழங்கும் நீதியை நிலை நாட்டும். குழப்பமாக இருக்கின்றதா? நீதிக்கு எதற்கு தனிப் பெரும்பான்மை என்று? நீதிக்கு ஒரு பக்கம் மட்டும் இல்லை என்பதால் தான் இந்தக் குழப்பம். கன்சர்வேடிவ்களின் நீதி , லிபரல்களுக்கு அநீதி. லிபரல்களின் நீதி கன்சர்வேடிவ்களுக்கு அநீதி. ஆயுட்கால நீதிபதிகளால் வரும் இந்த சமசீர் இல்லா நிலை தான் நான் ஓட்டை என முன்னர் சொன்னது.
அமெரிக்க உச்ச நீதிமன்றமும் நீதிபதிக்களும் , ஆதார சட்ட அதிகாரபூர்வமான காப்பாளர்களாக ஆன கதை சுவாரிசியமானது, அதற்கு வாசிங்டன் காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ( அமெரிக்க தேர்தலுக்குள் இந்த கட்டுரையை முடித்தால் தனிப்பட்ட அளவில் ஒரு திருப்தி இருக்கும், பார்க்கலாம் முடிகின்றதா என)
.தொடரலாம்...
மேலும் படிக்க
Saturday, January 12, 2008
மேலும் படிக்க
Sunday, November 12, 2006
டேனியல் ராசய்யாவுக்கு கொம்பு முளைத்து விட்டதாம். முளைத்து விட்டதால் தனக்குத் தானே பூணுலும் மாட்டிக் கொண்டாராம். பூணுல் மாட்டியபின் பெரியார் அதுவும் வெறும் சினிமா படமாக இருந்தால் கூட எப்படி தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்?
"டொண்டனக்கா"த்தவிர இந்த தப்படிக்கிறவனுக்கு என்னத் தெரியும் என்று அண்ணன் ராசய்யாவின் பாட்டு வந்தாலே, ரேடியோவை நிறுத்துன கூட்டம், இன்றைக்கு தியாகய்யர் ரேஞ்சில் வைக்கப் போவதாக எண்ணிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றார் ராசய்யர். கொடாரிக் காம்புகள் வழைமையாக செய்வது தான். நேத்து ராத்திரி ஹம்மாவும் தேவர் காலடிப் பொண்ணேயும் போட்டவனுக்கு இன்று கொள்கை முக்கியமாம். தூத்தெரி. ஒன்னையும் குத்தம் சொல்லமுடியாது நீ மயிறுபிடிங்கி போட்ட வெத்துப் பாட்டைக்கேட்டு, உன்மத்தம் ஆகி கூடவே உன்னையும் ஒரு சமூகநீதியின் வெற்றியின் அடையாளமாகக் கொண்ட என்னைப் போன்றவர்களைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். நீ அடிக்கடி சொல்வது கூட உண்மைதான் இசை எங்கு தான் இல்லை. உன் இசையையும் தூக்கி எறிந்து விடலாம் தான். என்ன இந்தக் கேடுகெட்ட காலம், உனக்கு முன்னால் உன்னைப் போன்றவர்களின் இசையை, இசைவன்மையை கண்டு கொள்ளாமலே விட்டுவிட வில்லையா? ஏன் இந்த ஈவெராவின் காலத்திற்கு முன்னால் பிறந்திருந்தால் உனக்கும் அதை விட கேவலமான நிலைமை தானே இருந்திருக்கும்? தேவர்காலடி மன்னேவை ஒரு கலம் அரிசிக்காக, எந்தத் தேவர்மகன் எழவுக்கோ, அவன் வீட்டு பெண்களின் முதல் தூமைக்கோ அடித்துக் கொண்டிருக்கலாம்.
நன்றாக இருங்கள் ராசய்யரே. ஆவணி அவிட்டதிற்கு மறக்காமல் பூனூலை மாற்றிக் கொண்டு விடும். பாண்டிபுரத்தில் ராசய்யர் உற்சவம் சிறப்பாக சீக்கிரம் நடக்க ஆரம்பித்து பல்லாண்டு காலத்திற்கு தொடரும். என்ன உன் சுற்றமும் உறவும் உற்சவத்து வாசல் வாழைமரம் கூட கட்டமுடியாது. அதைப் பற்றி ஒனக்கென்ன கவலை?
மேலும் படிக்க
Sunday, October 30, 2005
போனவருடம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஒரு ஸ்பா பார்ட்டி. இந்தியாலேருந்து ஒரு பழம் பெரும் நடிகை வந்திருந்தா. நடிக்கிறதை விட்டுட்டு சமையல் கலையிலே இறங்கிட்டா இப்போ ஏதோ டீவி ப்ரோகிராமுக்கு. இண்டர்னெட்டுல 'தளிகை" ன்னு மேகசீன் போட்டுண்டு இருக்கின்ற கோமளா வரதன் தான் இந்தப் பார்ட்டி கொடுத்தா. பார்ட்டியிலே யார் யாரோட ஓடினாள்னு பேசிண்டது, வயத்தைக் குமட்டற வாயு பிரிந்ததுன்னு சிலதைத் தவிர எல்லாத்தையும் பகிரும் பெரும் மனப்பான்மை எனக்கு இருக்கு. புத்தம் சரணம் கச்சாமி...
இந்த ஸ்பா பார்டியிலே ஹோம் சயிண்ஸ் பேராசிரியை உண்ணாமுலை, மருத்துவ நிபுணி ஷோபனா, துணைக்கு கணவர் ரவி, தளிகை நடத்துனர்கள் கோமளா வரதன், பண்டரி பாய், அப்புறம் வரதன் , பட்டிமன்றம் புகழ் ஆச்சார நங்கை என்னும் வண்ணை வச்சலா, மற்றும் உப்புக்குச் சப்பாணியாக என்னைப் போன்ற பலர் கலந்து கொண்ட இந்த ஸ்பா பார்ட்டி சம்பாஷணையிலிருந்து..
உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டி எப்ப?
சுந்தரி : கோமளாவைத்தான் கேக்கனும்.
உண்ணாமுலை : அடுத்த ஸ்பா பார்ட்டின்ம் போது யேல் வந்தேள்ன்னா ஒரு சமையல் ஷோ வைச்சுரலாம். என் ஸ்டூடண்ட்ஸ் நல்லா ருசிப்பா.
சுந்தரி : யேல்ல என்ன பண்றேள்.
உண்ணா ; சமையல் தான் ..
பார்வையாளர் பலத்த சிரிப்பு.. ( ஸ்பா பார்டியிலே பார்வையாளரான்னு குறுக்க கேக்கப்படாது கோர்வையா வராது நேக்கு அப்புறம் )
சுந்தரி : பலமுறை உங்களை எங்காத்துக்கு பக்கத்திலே பார்திருக்கேன். என் டீவி ஷோல கூட பேட்டி எடுத்தோமே.
உண்னா : இப்போத்தான் இங்கே வந்தேன். உங்க மருமக ராதாக்குத் தெரியுமே
பொறுமையிழந்த வண்ணை வச்சலா : ஹோம்சயின்ஸ் ஸ்டூடண்ட்ஸ் டிபன்ல்லாம் ருசிப்பாளா இல்லை ஃபுள் மீல்ஸ் தானா?
உண்ணா: ம்ம்ம் சில பேருக்கு டிபன் பிடிக்கும். இப்பத்தான் சமைக்க ஆரம்பிக்கிறா இங்கே
சுந்தரி : கலிபோர்னியா பேராசிரியை லிவர் ஃபுள் மீல்ஸ் வத்தக் குழம்பை விட்டு வரமாட்டேன்றாளே
உண்ணா: அவா நாக்கு அப்படி
சுந்தரி : அதுக்காக பிஸ்ஸா தெரியாம இருக்காளே, அவா அவா டேஸ்ட் அப்படியோ..
வண்ணை வச்சலா : சில பேர் தான் இன்னும் வத்தக் குழம்பு சாப்டுண்டு இருக்கா. அதைத் தப்புன்னு எப்படி சொல்லலாம்?
சுந்தரி : அதைத் தப்புன்னு தான் சொல்லனும். ஹோம் சயிண்ஸ் ப்ரொபசரா இருந்துண்டு வத்தக் குழம்போட இருந்தா எப்படி? நூடுள்ஸ், பிஸ்சா ன்னு உட்டு விளாச வேணாமா?
வண்ணை : நான் என்ன நினைக்கிறேன்னா, புல் மீல்ஸ் foodன்னா என்ன சாதரண டிபன்னா என்னன்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியனும். லிவர் எல்லாம் புல் மீல்ஸ் peopleன்னு சொல்லலாம்.
(இதெல்லாம் என் தலைவிதி ன்னு நினைத்துக் கொண்டே)உண்ணா :
யுனிவர்சிட்டிலேல்லாம் Specialize பண்ணாத்தான் பொழப்பு ஓடும். சிலருக்கு full meals specilizatioன்னா சிலருக்கு டிபன்.
யேல் டோரா: To promote indian food, importance of full meals is subordianate to
issues around whole indian food. When your kid chooses Yale, they can think like "
If I go to Yale, I can cook Indian food also". Our aim is to make the students
identify all indian spices in four years time.
வண்ணை வச்சலா : நான் என்ன நினைக்கிறேன்னா, யேல் ஸ்டூடண்ஸ்க்கு இட்லி
வடை தெரிஞ்சா போறும். I am not interested in full meals.
டோரா : Sure, our students can pick up Dosa and eat without fork and knife.
They can use their hand you know
சுந்தரி (உண்ணாமுலையைப் பார்த்து0 Sorry, நான் உங்களை கண்டுக்கவே இல்லை முதல்ல
உண்ணா : அதனாலென்ன , எல்லாரும் தான் முகத்துல இந்த வெள்ளைய பூசிண்டு கண்ணுல வெள்ளிரிக்காவை வைச்சுண்டுருக்கோம்,. யாரை யாருக்கு தெரியறது.
வண்ணை வச்சலா: அடுத்த சமையல் ஷோ எப்ப?
சுந்தரி : இப்பல்லாம் வெறும் வீட்டு டிப்ஸ் மாத்திரம் தான் கொடுக்கிறேன். சமையல் ஷோக்கு நிறைய உழைக்கணும். டிப்ஸ்க்கு கூடத்தான். அமெரிக்காவிலல்லாம் எவ்வளோ ரெசபி வச்சுண்டுருக்கா. பெரிய பெரிய டிஷ்ஷஸ்ல்லாம் ரொம்ப சாதாரணமா எழுதிருக்கா
பண்டரி பாய் : நடிகை லக்சுமியோட அம்மா ருக்குமனி ஒரு சமையல் புத்தகம் எழுதிருக்கா
சுந்தரி : புத்தகம் தலைப்பு என்ன?
பண்டரி பாய் : ரசம் தாளிப்பது எப்படி?
சுந்தரி : நம்மவாள்ளாம் இப்படி தான் ரொம்ப சிம்பிளான ரெசபியை சிம்பிளா தந்திடுவா. ரெசபியோட complexity ஒன்னும் இருக்காது. இங்கே (அமெரிக்காவுல) உள்ளவா எல்லாம் அப்படி இல்லை. "அடுப்பை நெருப்புக் குச்சி கொண்டு பத்த வைக்கவும்" ன்னு இங்குள்ளவா எழுதவே மாட்டா. ( பார்வையாளர்கள் சிரிப்பு). நம்மவா அப்படித்தான் ஆரம்பிப்பா. (மீண்டும் சிரிப்பு). அதுக்குள்ள போய் அந்த complexityயோட எழுதுறதெல்லாம் ஒரு Art. In this country they are doing it casualy.
ரவி : சில பேரு வாய்ல வைக்கமுடியாம சமைச்சுட்டு அதையே மருந்துண்னு நினைச்சுட்டு -damn fools they are..
சுந்தரி : but, இங்குள்ளவா மாறி அங்கேயெல்லாம் வெளியே வந்து சாப்பிட்டாள்ன்னா, அவன் foolன்னு வெளியே தெரிஞ்சுடும். யாரும் வெளியே வந்து சாப்பிறது இல்லை. அவனுக்கும் வேற வழியில்லை வாயில வைக்க முடியாம சமைக்கிறான்,
உண்ணாமுலை : இந்த நாட்டுலே சமையல் ஒரு கலையா வளர்ந்திருக்கு. நம்ம நாட்டுல வெளிக்கி போறது ஒரு கலையா வளந்திருக்கு. பாமரர்கள் திங்கிற மாதிரி ஒன்னுமே இல்லை. எளிமையா சமைக்கிறதுன்னுட்டு சாம்பார்ல தண்ணியை ஊத்தி ரசம் அப்படீன்ணுறான். நான் ஒரு பட்லர். நான் சமைச்சா non-butlers திங்கனும். MITலெ ஒரு ஹோம் சயின்ஸ் ப்ரொபசர் இருக்கார். அவர் சமைச்சா எல்லோரும் திம்பா. நம்ப நாட்ல பாஞ்சாபிஸ் தேவலாம்.
சுந்தரி : வெளிக்கி போறது ஒரு கலையா இருக்குன்னு சொல்றேள். என்னால ஒத்துக்க முடியாது. ஒரு புக் இருக்கு. வெவ்வேறு கால கட்டத்துல வெளிக்கி போறதைப் பற்றி ஒரு புக் இருக்குன்னு வைச்சுக்குங்கோ. திறந்த வெளி புல்வெளி கழகத்திலே வெளிக்கி போனவா, ஆத்தங்கரைப் பக்கமா சொம்போடோ வெளிக்கி போனவா, வரிசையா மேடை மாதிரி கட்டி அது மேல பாகம் ப்ரிச்சுண்டு வெளிக்கி போனவா, flush டாய்லெட்டுல அதான் பாம்பே கக்கூஸ்ல வெளிக்கி போனவா, இப்ப உக்காந்துண்டு வெளிக்கி போறாளே அது மாரி போனவான்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காது. அதுக்கும் இங்கே வந்து national geographyல ஏதேனும் படம் எடுத்துருக்கானான்னு தான் பாக்கனும்.
உண்ணாமுலை (குமட்டலுடன்); நீங்க சொல்றது சரி தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் எழுதறா. அவாளும் இந்த பீயைப் பத்தி எழுதாம பீயள்றவாளப் பத்தி எழுதிண்டு போயிறா.
சுந்தரி (புல் ஃபார்மல) : யாருமே இல்லை. அப்கோர்ஸ். ஒரு பில்லியன் இந்தியர்கள் இருக்காங்க; 2000 வருட பாரம்பரியம் இருக்கு. சிந்து சமவெளியிலேயே கக்கூஸ் இருந்திருக்கு. வேர்ல்ட நாறடிச்சு முழுகடிக்கிற வெளிக்கி போர்ஸ் நம்ம கிட்ட இருக்கு. ஏன்ணா அந்தளவுக்கு back-ground இருக்கு. ஆனா நம்மோட smellல கான்பிச்சா ஒருத்தருக்கும் கண்டுபிடிக்க முடியலை. நம்ப கண்டிசன் அப்படி. அண்டார்டிகாவுல ஒருத்தர் கண்டுபிடிச்சார் அப்படிம்பாங்க. என்னன்னு பார்த்த நம்ம சயண்டிஸ்ட் அங்க குடிசை போட்டுருப்பார். அவ்வளவு தான். பரவலா, நம்மளோட கண்ரிபூசன், நம்ம ஸ்டைல் யாருக்கும் தெரியாது.
ஜியார்ஜியன்: you got a point. இன்னி தேதிக்கு சைனீஸ் , இட்டாலியனை விட டேஸ்டானது இந்தியன் foodன்னு எந்த சுலினரி ஸ்கூல்லயாவது சொல்றாளா? one of the three best full meal or full course foodன்னு சொல்றாளா?
சுந்தரி: அதுல பெருமையில்லை மேடம். பிரேக் பாஸ்டுக்கு , லஞ்சுக்கு, டின்னருக்குன்னு continuous food இருக்கே!!! வேறேங்காவது இருக்கா? யாரவது சைனீஸ் பிரெக் பாஸ்ட் சாப்டு இருக்கேளே?
டோரா : We have to explain this to food connoisseur community in Yale. they dont know it. We have to feed them, Indian food is a world food.
ரவி : What is the meaning of world food?
டோரா : The smell should go beyond the kitchen. The aroma should float in air without the time consciousness. I am cooking up this. Trying to fry something. If you take the pakistan food menu, it is very shallow. Not more than two pages. Indian food menu is bigger than that.
ரவி : Do you think in Asia everybody knows about Indian food? Then you have not done it in your own continent.
டோரா : Instead of cooking Indian food, the rich inidan dishes should be cooked like Chinese or thai or italian. Then others will know about it.
சுந்தரி : இல்லங்க, இது இன்னமும் complex. நீங்க இட்டலியை பிஸ்ஸா மாதிரி ஓவன்ன பேக் பண்றீங்க. அவங்க பிஸ்ஸாவை இட்டலி மாதிரி வேகவைக்கிறாங்க. எது வேர்ட்ல ரீச் ஆகும். உங்க இட்லி வேகுமா? இல்லை அந்த பிஸ்ஸா வேகுமா? அந்த பாயிண்டை யோசிச்சு பாருங்க.
ரவி : It will not boil for sometime , but if we ...
சுந்தரி : சாத்தமுதுவோட ரெசபியை பார்த்தசாரதின்னு ஒருத்தர் pie மாதிரி மாத்தி செஞ்சுருக்கார். ஒருத்தர் சீண்டலையே. seven to eight years கஷ்டப்பட்ருக்கார். ஏன் சீண்டலை?
டோரா : exactly this point. there are butlers here. They some time look at chappathi or Naan but not idli or dosa
ரவி : Idly or dhosa is next only to Chappathi or Naan
சுந்தரி : வேர்ல்ட இருக்குற பெஸ்ட் ரெசபியில சப்பாத்திக்கி இடம் கிடையாது. உங்க கண்ரியிலே http://www.epicurious.com/ அப்படின்னு ஒரு சைட் இருக்கு சப்பாத்திக்கு இடம் கிடையாது. பல்லுல மேல் அன்னத்தில ஒட்டுதுன்னு பளிச்சுன்னு சொல்றான்.
டோரா : சப்பாத்தி ஒரு உலக மாக கோந்து தான்.
சுந்தரி : நேக்கு ரொம்ப சந்தோசம் சப்பாத்தி இப்படி அதானல இடம் கொடுக்கலன்னு ஒரு ரீசன் கொடுக்கிரான் பாருங்க. இப்பத்தான் ஒரு ரெசபி புக் வாங்கினேன். பல பேர் ரெசபி இருக்கு. மெக்ஸிகன் tortilla ரெபர் பண்றான். கிரீக் பிட்டா பிரெட்டை ரெபர் பன்றான். நம்ப naan கிடையது சப்பாத்தி கிடையாது.
பண்டரி பாய் : அது வந்து தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்ப இந்தியாவை எடுத்துண்டேள்ன்னா, சப்பாத்தி / naan இல்லாம ஏதாவது food irukkaa?
சுந்தரி : அது பத்தி சொல்லல. இப்ப இட்டலி தோசை யோட நிலமை எப்படி இருக்கு?
பண்டரி பாய் : அது கரெக்ட்; அதுக்கு நம்ப நாடு ஒரு தீணிப் பண்டார நாடாகனும்.
ஷோபனா : Digestion Power.
சுந்தரி : கரெக்ட்.
ரவி : ஏசியாவில இருக்குற எல்லா சாப்பாட்டு கல்ச்சருக்கும் இந்தப் பிரச்சனையா?
சுந்தரி : மிச்ச எல்லோரும் சாப்பாட்டு ரசனையில மட்டம் தான். நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம். உலகத்துலேயே எளிமையா ஜீரணம் ஆகிற உணவு இட்லி. எல்லோருக்கும் ஆகும் குழந்தையிலிருந்து கிழவன் வரை. நாம என்ன பண்ணிண்டு இருக்கோம். இட்டலி சில சமயம் சரியா ஊறலைன்னா கல்லாயிடும் மத்தபடி எல்லோரும் செரிக்கிற மாதிரி தானே இருக்கு?
கோமளா : அதை நல்லா விக்கனும். நம்மகிட்ட விக்க ஆளில்ல்லை. நான் கூட இந்தியர்களுக்குமட்டும்.comன்னு ஒரு கடையை internetல போட்டு விக்கப் பாக்கிறேன். ஒருத்தனும் மோந்து கூட பார்க்க மாட்டேன்கிறான்.
சுந்தரி : ரவி அய்யா சொண்ணாங்க. மாத்திப் போட்டு செய்யனும். இட்டலிய பிஸ்ஸா மாதிரி bake பண்ணனும்னு. இன்னி தேதிக்கு பெஸ்ட் ஓவன்ல வைச்சி இட்டலிய bake பண்ணாலும், அதை விக்க முடியாது
ஷோபனா : பெஸ்ட் food mart போனா ஆயிரம் மெனு இருக்கு ஆனா இட்டலி கிடையாது.
சுந்தரி : அந்த food எல்லாம் சாப்பிட்டு பார்த்தேள்ன்னா ஒன்னு கூட செரிக்காது, நம்ப இட்லி மாதிரி இல்லாம
ஷோபனா : ஆமா ஆமா.
சுந்தரி : இந்த பிட்டா பிரெட் இருக்கு இல்ல அதை வைச்சி நாலு dishhes இருக்கு. ஏன் சப்பாத்தியை வைச்சு இல்ல
பண்டரிபாய் : இங்கே ஹரே ராமா ஹரே கிருஷ்னா இரண்டு கெட்டான் ஒருத்தர் சப்பாத்தியையும் , பாஜியையும் வைச்சி சைனீஸ் நூடுள்ஸ் பண்ணியிருக்கார்.
உண்ணாமுலை : டேஸ்டி foodன்குறது ஒன்னு, packaging the foodன்கிறது ஒன்னு. இரண்டும் வேற வேற
பண்டரி பாய் : packaging சரியா இருந்தா திண்ணையை கூட Googleஸ்கிட்ட வித்திரலாம் இல்லிங்களா?
உண்ணாமுலை : அது ஒரு வகையான packaging. நான் சொல்றது கிட்ட connoisseur அப்பீல் பண்ற மாதிரி packaging. இப்ப நல்ல ஜப்பனீஸ் ஹோட்டல்ல சூசி பாத்தீங்கன்னா அதை தட்டுல தர்ரதிலேயே ஒரு அழகு இருக்கும் இல்லீங்களா.
ரவி : சப்பாத்தியை முழுசா கொடுக்காமல் பிச்சி பிச்சி கொடுக்கலாம் பல்லுல ஒட்டாது. Nobel Prize winner Chandrasekar uses to cut pieces of chappathi for distributing in his classes. Two of other Nobel Prize winners also started grabing it from him to distribute in their class room.
சுந்தரி : connoisseur இருக்காங்களே, நான் தமிழ்ல சாப்பாட்டு ராமன்கள்ன்னு சொல்றது. தமிழ்நாட்டு சாப்பாட்டு ராமன்கள உலகத்து சாப்பாட்டு ராமன்களோட ஒப்பிடவே முடியாது.(பார்வையாளர்கள் ஒரே சிரிப்பு) பர்ஸ்ட் ஆப் ஆல், ஒரு சின்ன விஷயம் சொல்றேன், நான் தமிழ்நாட்ல சுற்றி இருக்கும் போது டாக்டர்ஸ், பொலிடிசியன்ஸ், ரிலிஜியஸ் பீபள்எல்லோரையும் பாக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் என மனசுல பட்டிருக்கு. நாம் எந்த சாப்பாட்டை சாப்பிடறோம்ன்னு ஒரு உணர்வே கிடையாது. சாப்பாட்டை எவன் மோந்துண்டு ரசிச்சுண்டு சாப்புடறான். உருண்டு கட்டி அள்ளி அப்புறதோட சரி. நான் connoisseurன்னு அதைத்தான் சொல்றேன். அந்தாளு ஒரு aristocrate மாதிரி இருக்கனும்னு நான் நினைக்கல. நீங்க செஞ்சுண்டு இருக்கிறது சாப்பிடறதுன்னு கூட ஒரு உணர்வு கிடையாது. தமிழ்நாட்ல அவ்வளவு பேரும் வெளிக்கி போறவன் மாதிரி தான் இருக்கான். வெளக்கெண்ணையை குடிச்சுண்டு ஓவரா வெளிக்கி போயிண்டே இருகிறவன் எப்படி இருப்பான்? சாப்பாட்டுக்கும் அவனுக்கும் contact போயிறதோல்லியோ? அதே மாதிரி தான் தமிழ் நாட்ல இருக்காங்க. நான் கொஞ்சம் exaggerate பண்ணி சொல்றேன்,
பண்டரி பாய் : இன்னும் கொஞ்சம் specific exampleஓட சொல்லுங்களேன்.
(தொடரனுமா ?)
மேலும் படிக்க
Sunday, August 14, 2005
இளையராசா என்னும் இசைமேதையை வைத்து ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. எவன் கை எவன் முதுகை குத்துகின்றது அல்லது எவன் முதுகு எவன் கையை குத்து கின்றது எனப் புரியாமல் ஒரு கிச்சு கிச்சுத் தாம்பாளம். ஞாநி, சாரு , அவுட்லுக் ஆனாந்த், 10ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல முனையும் "பெரியாரி"ஸ்டுகள் (யாருப்பா நீங்கள் எல்லாம்?) ஒரு பக்கமும் , கலக விரும்பி ( நன்றி பத்ரி அவர்களே) ரோசாவசந்த் மறுபக்கமும் மற்றும் ஒத்துக்கு கூடவே "இசை" ரசிகர்கள், "இசை அரசியல்" ரசிகர்கள் மற்றும் வழக்கமான "பூணூல்" ரசிகர்கள்.
சரி சண்டை தான் என்ன என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முனைந்தாலோ தலைச் சுற்றுகின்றது. இளையராசாவின் இசை மேதமையை ஞாநி, சாரு மற்றும் 10ஆம் நூற்றாண்டு பெருவியாதிஸ்டுகள் "மதிக்காமல்" அவரது அரசியல்/சமூக நிலைப்பாட்டை கற்பனை செய்து குற்றம் சாட்டுவதாக ரோசாவின் "கலகம்" என நினைக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டின் வீர்யம், இளையராஜா தலித் சமூகத்திலிருந்து வந்தவர் என்ற கருதுகோளைக் கொண்டு, அசோகமித்ரன், ஜெயகாந்தன், இளையராஜா என்ற அந்த வர்ணாசிரம ஏற்ற இறக்க வரிசையில் இருந்திருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பா அல்லது வேறு ஏதேனும் உள்குத்தா என யாமறியேன் பராபரமே. இப்போதைக்கு இந்த "மேதமை" என்ற விடயத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்த ஆசை
அது என்ன மேதமை? தலித் சமூகமோ அல்லது அதைப் போன்ற ஆனால் வெவ்வேறு அளவுகளில் அச்சுறுத்தல்களுக்கும்/சுரண்டல்களுக்கும்/வன்முறைகளுக்கும் உள்ளான வேறு சமுகங்களோ, பாலினங்களோ , இந்த "மேதமை" என்ற யாரோ நிர்ணயித்த அளவுகோளினைத் தாண்டிய ஆளுமைகளை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏதேனும் உள்ளதா என்பதே என் முன்னால் உள்ள கேள்வி. சில மாதங்களுக்கு முன் வலைப்பதிவில், இன்று ரோசாவசந்துடன் சேர்ந்து கலகப் போர் தொடுத்திருக்கும் அருள் என்பவரின் பதிவில் ஒரு வர்ணச்சித்திரம். ஊர்க் குருவியின் அருகில் அமர்ந்து ஒரு பருந்து சொல்கின்றது "உயர உயரப்" பறந்து நான் பருந்தாகிவிட்டேன் என்று. நந்தலாலா என்பவர் கமெண்ட்டைப் படித்தால், இளையராஜாவும் மனது வந்து சமூகத்தினரை நேருக்கு நேர் பார்த்து கருத்து சொல்லும் பாக்கியம் வந்தால் உதிர்ப்பதும் "இதைப்" போல் இருக்கக் கூடும் என்று தெரிகின்றது. "இதைப்" போன்ற "வன்"முறையை, அது விளைவிக்கும் பாதிப்பை, ஒரு "ஒரிஜினல்" பருந்தும் "ஊர்"குருவிக்கு செய்து விட முடியாது.
அது போகட்டும், மூளையின் மடிப்புகளில் சில அதிக மடிப்புகளை இயற்கையின் சோழி உருட்டல் விளையாட்டில் பெற்றுவிட்ட தன்மையினாலே வரும் "அதி" மனித தீரங்களுக்கு எந்தளவு அவசியம் மற்றும் தேவையும் கூட? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் இதயத்தின் அளவைவிட சற்று அளவு பெரிதான ஒன்று அமைந்து போனதாலே விளையாட்டுத்தளத்தில் எல்லோரும் தளரும் நேரத்தில் தளர்ச்சி காட்டாமல் ஒருவர் விளையாடி வெற்றி பெருவதோ அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட முலைக் காம்பினைப் பெற்றிருப்பதாலே சர்க்கஸில் வந்து பார்வையாளர்களை கிளுகிளுப்பாக்குபவரோ அல்லது அதிவேகமான மற்றும் ஏரானமுறையில் சிந்தித்து செஸ் விளையாட்டில் பத்து ஆட்ட முறைகளுக்கு பிந்திய சாத்தியக் கூற்றை மனதில் படம் பிடித்து வெற்றி பெருகின்றவரோ, இவர்களுக்கிடையில் மிக அடிப்படையில் என்ன வித்தியாசம்? கூடவே விஞ்ஞானம் அஞ்ஞானம் மற்றும் கலை இலக்கிய வீர தீர தனி மனித "சாதனை"யாளர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு சமூகம் கடமை பெற்றிருக்கின்றது என்பதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி?
அனாதை.
மேலும் படிக்க
Sunday, June 12, 2005
அந்த எழவை ஏன் படித்தேன் எனத் தெரியவில்லை. அது இந்தியிலோ அல்லது சமஸ்கிரதத்திலோ அல்லது பெங்காலியிலோ அவ்வளவு ஏன் மலையாளத்திலோ எழுதப்பட்டிருந்தால் நான் ஏன் சீந்தப் போகின்றேன்? கருமாந்திர தமிழில் எழுதியதால் படித்து தொலைத்து இந்த ஞாயிற்றுக் கிழமையை புண்ணாக்கிக் கொண்டது தான் மிச்சம். மூன்று பிளாக்குள் படித்தேன். மிக எதேச்சயாக. ஆனால் மூன்றிலும் தொடர்புடைய எதோ ஒரு பொது இணைப்பு சிக்கிக் கொண்டது. முதலில் சாரு நிவேதிதா பிரென்சும் அல்ஜீரியப் போரும் பற்றி பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து. அந்தக் கருத்தை ஒரு குறையாகச் சொன்னாலும் பொதுவாக ஒரு இனத்தின் போக்கைச் சொன்னதாக எனக்குப் பட்டது. அதுமட்டுமல்ல ஆதிக்கம் நடத்தும் சமயம் போலில்லாமல், தன் இனத்தவர் மற்றோர் தேசத்தில்
சிறுபான்மையினராக இருந்து ஆதிக்கத்தின் கொடுமைக்கு உள்ளாகும் போதெல்லாம் வேறு தேசத்தில் இருப்போர் கொதிப்பாவது மிகவும் ஒரு சாதாரண விடயம் தான உலகளவிலாக. இந்த லெபனாலில் நடக்கும் இன்றையத் தேர்தலாக இருக்கட்டும் அந்த வகை கொதிப்பு வெளிப்படவில்லை? அதற்குப்பின் இந்தப் பதிவு கதை முன்னமே படித்திருந்ததால் தலைப்பு இழுத்துவிட்டது.
சரி நாம் தான் "இந்தியத்" தமிழர்கள் தனிக் குணம் உண்டு என்றாலும் குமறி எழவேண்டாம், கை கொடுக்க வேண்டாம், ச்ச்ச் கொட்ட வேண்டாம், அட அடுத்தவன் துன்பத்தில் சிரிக்கனுமா ஆத்துக்குள்ளாகப் போய் பின் கட்டிலிலாவது சிரிசுண்டு வந்த்ட்டு ஒன்னுமே தெரியாதது போல் வேலை மயிரையாவது பாத்துண்டு போகலாமில்லையா. அதெல்லாம் இல்லாமல் எந்த ஆயுதத்தை ஆதிக்க இனத்திற்குக் கொடுத்து தன் இனத்தைச் சேர்ந்த சிறுபாண்மையினர் அழித்தொழிப்பை விரைவுபடுத்தலாம் என்னும் என்ணம் எப்படி இங்கே வரமுடியும்? இங்கே தான் வருகின்றது அந்தத் "தேவடியாகுடி" என்னும் சொல்லாக்கம்.
பல மாநில பெண்களைக் கூட்டித் தொழில் நடத்திவரும் ஒரு தேவடியாக்குடியில் பிறந்து வளரும் ஒருவனுக்கு அவன் தாய்க்கே ஆள் பிடித்து வரும்போது ஏதேனும் வலியோ குறுகுறுத்தல்களோ இருக்க வாய்ப்பிருக்கின்றதா? அந்தத் தேவடியாக்குடியில் இருக்கும் மற்ற பெண்களாக இருக்கட்டும் அல்லது அவனது தாயாகவே இருக்கட்டும் அவர்கள் மீது பரிவு இரக்கம், காயம் மற்றும் வலியைப் பற்றின அவனது உணர்வுகள், நம்பிக்கை இழப்பு இவை மீதான அவனது உணர்தல்கள், இந்தத் தேவடியாகுடிக்கு வெளியே இருப்பவர்களின் உணர்தல்களொடு இயந்து வருமா? இயந்து வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லை? இந்த என் முட்டாள்தனத்தை நொந்ததாலே இந்தச் சிறு பதிவு.
உண்மையில் இந்தப் படிமம் எனக்கு பலவற்றை அர்த்தப்படுத்தியுள்ளது. இந்த இந்தியத் தேவடியாக்குடியிலும் நடப்பது இது தானே? இங்கே தானே தாய் மொழியைப் பற்றி பேசினவன் நாயாகின்றான்? "அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுத்து விளக்கெண்ணை தடவி கூடவே வாழையிலை பீயள்ளும் மகன்களுக்குத் தானே இங்கே ஞானபீடம்? ஒருத்தன் பின்னால் ஒருவன் ஏறுவதும் அவன் பின்னால் இன்னொருவன் ஏறுவதும் தானே இங்கே சுவாரசியம் தரும் வாழ்க்கை அனுபவம்? இந்தச் சமுதாயம் ஆயுதம் தர யோசிக்காமல் வேற எந்த எழவை யோசிக்கும்?
மேலும் படிக்க
Sunday, May 01, 2005
சரி - எனது மொழிப்பெயர்ப்பு பயிற்சி..
scinece News - Apr 2005 Vol 167 No 15 Code of Many Colors - Can researchers see race in the genome?
by Christen Brownlee
இந்த கடந்த 65 வருடங்களில், இனத்தை வரையறுத்தல் என்பது குழப்பமான ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. இனம் என்பது சமூக ரீதியாக உண்டென ஆகியிருந்தாலும், உயிரியலில் அது நிறுவப்பட்டாலே ஒழிய இனவெறிக்கு வேறு ஆதாரமில்லை. - உண்மையிலேயே உயிரியலில் இனம் என்பது உண்டா? உண்டு இல்லை என இன்னமும் திட்டவட்டமாக நிறுவப்படாவிட்டாலும், அடிப்படை உயிரியலைப் புரிந்து கொண்டாலே, இனம் பற்றிய பார்வைகளில் பல மாற்றம் வரலாம்.
இன்னமும் அறிவியலாளர்களை இனம் என்பதை மக்களைக் குறிக்க எனச் சொல்ல வைக்கவே கடினம். அறிவியல் மொழியில் இனம் என்பது ஒரு உயிர்வகைகளுக்குள்ளாக இருக்கும் மரபளவில் மாறுபட்ட, தனக்குள்ளாக இனப்பெருக்கம் செய்யும் துணை உயிர்வகைகளைக் குறிப்பது. இடரீதியாகவும் நெடுங்காலமாகவும் பிரிந்த உயிர்வகைகள், தனக்குள்ளாக செய்யும் இனப்பெருக்கத்தால், தன்னுடைய மரபனுவில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு இந்தத் துணை உயிர்வகையாக பெருகும். இந்தத் துணை உயிர்வகைகள் மரபனுவின் "அளல்ஸ்" (allels) என்னும் தனிப்பதிவை ஏற்படுத்திக் கொள்ளும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ரைட்'ஸ் விதியின் படி "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 25%த்தை தாண்டினாலேயே இரு வகைகளும் துனை உயிர்வகையாக அதாவது வேறு வேறு இனமாக ஒத்துக் கொள்ளப்படும். (100% வேறுபாடுகள் ஆனாலேயே இரு வேறு உயிர்வகைகளாக கருதப்படும்) தற்போது வேறு வேறு மனித இனமாக கருதப்படும் மக்கள் கூட்டத்தின் "அளல்ஸ்" களுக்கிடையேயான வேறுபாடு 15%க்கு மிகையாகக் கிடையாது.
100 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இனம் ஒரு பிரச்சனையில்லை. எல்லா மனிதர்களும் ஆப்பிரிக்காவிலே வசித்ததால், அந்த காலத்திய குறைந்த அளவிலான மனிதர்களிடையே வேறுபாடுகள் இல்லை. அவர்களிடமிருந்து பிரிந்து பல்வேறு இடங்களுக்குச் சென்ற, பரிணாம வளர்ச்சியுற்ற தற்கால மனிதர்கள், அவர்களின் பெரும்பாண்மை "அலல்ஸ்"களை தன்னுடன் எடுத்துச் சென்று உள்ளார்கள்.
லிசா புரூக்ஸ் என்பவர் ஒரு மரபனு ஆராய்சியாளர். அவரது கவனத்தில் பட்டது மரபணுவில் SNP என்னும் மரபணுத் தொடரும் மக்களுக்கிடையே இருக்கும் அந்தத் தொடரின் வேறுபாடுகளும். அதாவது ஒருவரது மரபனுத் தொடரின் வேதிப் பொருளை க ச ஞ ட என்னும் குறியீடு போல குறித்தால், "டகககசக" என்று அந்தத் தொடர் வரலாம். அதையே மற்றுமொருவருக்கும் "டகககஞக" என்று வரலாம். இந்த ஒத்தை குறியீடு மாற்றமே SNP எனக் குறிக்கப்படுகின்றது. பொதுவாக இந்த மாற்றங்கள் மரபனுத் தொடரின் முக்கியமில்லா இடங்களில் (புரதம் தயாரிக்காத) தான் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் சில சமயம் இந்த மாற்றம் முக்கியமான பகுதிகளில் வரும் போது அது உயிர்வகையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை , அதாவது உடல் ரீதியான மாறுபாடுகளையோ, நோயிற்கான சாத்தியத்தையோ தரலாம். ஒரு குரோமோசாமில் அடுத்தடுத்து காணப்படும் இந்த SNP தொகுப்பு ஹப்லோடைப்ஸ் எனப்படும். ஆப்ப்ரிக்க, அய்ரோப்பிய கிழக்கு ஆசிய மக்களை வைத்து, இந்த ஹப்மாப் (hapmap Project) எனும் ஹப்லோடைப்ஸ் ஆராய்ச்சியில், புரூக்ஸ், இந்த மக்கள் குழுக்களுக்கிடையே ஏராளமான ஒற்றுமையை கண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழுக்களையும் ஒரு நிற வட்டமாக வரைந்தால், 85 சதவிகிதம் ஒவ்வொரு வட்டமும் ஒன்றன் மேல் ஒன்றாக படியும். மேலோட்டமான இனவேறுபாடுகளான நிறம், முடியின் திடம் போன்றவைகள், இந்த வேறுபாடுகளில் வரவில்லை எனக் குறிக்கின்றார் புரூக்ஸ். இனம் என்பது மரபனுவில் உள்ள வேறுபாடு என நம்பியிர்ப்பவர்களுக்கு இந்த கோட்பாடு உறைப்பது கடினம் தான் என்கிறார் ஜார்ஜியா டங்ஸ்டன் என்னும் மரபணு ஆராய்ச்சியாளர்.
மனித உயிர்திசுக்களையும் வேற்றுப் பொருளையும் மனித நோய் தடுப்பு சட்டகம் (human immune system) எவ்வாறு வேறுபடுத்தி உணர்கிறது என்பதை ஆராய்கிறவர் தான் டங்ஸ்டன். இந்த உணர்தலுக்கு காரணமான மரபனுவிற்கு "Histocompatibility" மரபணு எனப் பெயர். இந்த மரபணுவின் ஒத்தவகை கொண்டவர்களுக்கு இடையே தான் மனித திசுக்களை/உறுப்புகளை மாற்றிக் கொள்ளமுடியும். இந்த திசுமாற்றத்தினை நிர்ணயிப்பதில் இனம் எந்த வகையிலும் உதவுவதில்லை என்கிறார் டங்ஸ்டன். இந்த பரந்துவிரிந்த கருப்பு என்னும் இனத்தில், ஒரு கருப்பருக்கும் வேறு கருப்பருக்கும் இந்த மரபணு கடும் மாற்றம் கொண்டிருக்கலாம். ஒரு கருப்பரின் இந்த மரபணு ஒரு வெள்ளையருக்கு ஒத்துப் போனாலும் வேறு கருப்பருடன் மாறுபடலாம் என்கிறார் டங்ஸ்டன்.
மார்க் சிரவர் என்னும் மரபனு அறிவியலாளர், இந்த 15% மரபணு வேறுபாடுகளும் மக்கள் குழுக்களுக்கிடையே பூளோகரீதியாக ஒரு தொடராக நீளுகிறது என்கின்றார். அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்வீடன் தேசம் வரை மக்கள் மாதிரியை (sample ??- என் தமிழ் அறிவு, இத்துனைக்கும் பத்தாவது வரை தமிழ்வழி முறையில் படித்திருந்தும்- என்னைத் தூக்கில் தொங்கலாம் என வைக்கின்றது ) எடுத்துக்கொண்டால் இந்த வேறுபாடுகள் ஒரு தொடராக நீளும். இந்தப் புள்ளிதான் இந்த வேறுபாடுகளைக் திட்டவட்டமாக குறிக்கும் குறியீடு என அளவிட முடியாதவாறு இந்தத் தொடர் இருக்கின்றது என்கிறார் மார்க்.
இதே மார்க் சிரவர், DNAPrint Genomics என்னும் கம்பெனியில் வேலையில் இருக்கின்றார். இந்தக் கம்பெனி, உள்கன்னத்தில் இருக்கும் மரபனுவை எடுத்து மூதாதயர்களில் எவ்வளவு சதவிகிதம் ஆப்பிரிக்க , கிழக்காசிய, அய்ரோப்பிய, அமெரிக்க கலப்பிருக்கின்றது எனக் காட்டக் கூடிய அளவு தகவல் சேகரித்து வைத்திருக்கின்றதாம். தன்னைச் சுத்த வெள்ளை என நம்பிருந்த இவரின் உள் கன்ன மரபனுவில் "டஃப்பி நள் அளல்" (duffy null allel) என்னும் சப்-சஹார ஆப்பிரிக்காவினரில் மட்டுமே காணப்படுவது இருந்ததாம். மொத்தத்தில் 11% மேற்க்காப்பிரிக்க மூதாதயர் கலப்பு இருந்ததாம் இவரது மரபனுவில்.
*************
எனக்கும் இந்த டெஸ்ட் செய்ய வேண்டும் என ஆவல் இருக்கின்றது. ஏதோ கருப்பன் என நினத்துக் கொண்டிருக்கும் என் தலையில், இல்லை 20% சிங்கு கலப்பு இருக்கின்றது என்று மண் அள்ளிப் போடலாம்.
ஏதோ முடிந்தவரை முயன்றிருக்கின்றேன், தமிழாக்கத்தில் ஏதேனும் சிறு தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
ஹி ஹி சரி இப்பொழுது இந்தக் கட்டுரையின் சுட்டியைத் தருகின்றேன். இது இரண்டு பாகங்களாக வந்த கட்டுரை. அந்த இரண்டு பாகங்களையும் இங்கே சொடுக்கலாம்.
பாகம் 1
பாகம் 2
மே 2 2005
இந்தச் சோதனையில் கலந்து கொள்ளாமல் சுயமாக இருக்கவிரும்பும் குடிகளின் குரல்களை காண, ரவி ஸ்ரினிவாஸ் கொடுத்த சுட்டி
http://www.ipcb.org
மேலும் படிக்க
Saturday, April 30, 2005
1. தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை.
2. தலித்துகள் மீது செய்யப்பட்ட / தலித்துகள் செய்த சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களை விசாரிக்கும் மற்றும் நீதி வழங்கும் அதிகாரம் மற்றுமொரு தலித்திற்கே எனும் சட்டம்.
3. தலித்துக்ளுக்கு எதிராக குற்றம் நிருபிக்கப்பட்டவர்களுக்கு பொது தண்டனையின் அளவுகளுக்கு மேலாக பொருளாதார நிவாரணமும் உடனடி வசூலிக்கப்பட்டு தலித்துகளிக்கு சேர்பித்தலும் நடக்கவேண்டும்.
4. தலித்துகள் மீதான குற்றம் கீழ் கோர்ட்டில் நிருபிக்கப்படாவிட்டால், அதனை மேல் கோர்ட்டுக்கு மறுமுறையீடு செய்யும் வாய்பை மறுத்தல்
5. எந்த அரசு சார்ந்த / பொதுக் குழு சார்ந்த மேல்மட்ட குழுக்களில் தலித்திய பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்தல்.
6. தலித்துகள் பிரதிநிதிப்படுத்தப்படாத நிறுவணங்களுக்கு தலித்திய உதவி வரி என்னும் தனிப்பட்ட வரியைப் பெற்று அதனை தலித்துகள் பொதுப் பணத்தில் சேர்த்தல். கூடவே சரியான அல்லது கூடுதலான பிரதிநிதித்துவம் உள்ள நிறுவணங்களுக்கு வரி விலக்கு அளித்தல்.
7. சுழல்முறை தலைமைப் பதவிகள் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த / அரசு உதவும் நிருபணங்களின் சட்டங்களில் தலித்திய தலைமைப் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கல்.
8 சாதிகளை வெளிப்படையாக்கள் மற்றும் அதனை சமூக அளவீடுகளில்பகிரங்கப் படுத்தல்.
9. முதல் இரண்டு பெரும்பான்மை சாதிகள் மற்றும் ஆதிக்க சாதிகள், அவர்களது பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தும் எந்தப் பதவியையும் வர விடாமல் தடுத்தல்.
10. எந்த அரசியல் பதவியும் இரண்டு முறைக்கு மேல் எந்த தனிப்பட்ட நபரும் போட்டியிட முடியாமல் தடுத்தல்.
11. எந்த அரசு உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் அவர்களது தனிப்பட்ட உதவியாளர்கள்/ பிஏக்கள் போன்றோரை தன் சுய சாதியில் வைத்திருக்க அனுமதி மறுத்தல்.
12. சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை அளித்தல். மேலும் அதனை பகிரங்கப்படுத்தல். கூடவே அதனைக் கடுமையாக்கல். உதாரணமாக வெளியேறியவர்களுக்கு அவர்களது சாதியிலே திருமணம் செய்யும் நிலை வந்தால் அவர்களது சாதியை அவர்களுக்கு திரும்ப அளித்தல். கூடவே மாற்றுச் சாதியில் கல்யாணம் செய்து குழந்தை பெற்றவர்கள்/ மாற்றுச் சாதி குழந்தையை தத்தெடுத்தவர்களுக்கு வெளியேறுவதற்க்கான எளிதான விதிகளும், சாதியைவிட்டு மீளாத திருமணம் செய்தவர்கள், சுய சாதிப் பெரும்பாண்மையுள்ள இடங்களில் வசித்தல்/உழைத்தல் ஆகியோருக்கு சாதியை விட்டு வெளியேறும் வாய்ப்பை தீவிரமாக்கலும்.
இன்னமும் விட்டால் எழுதிக்கொண்டு போகலாம் அவ்வளவு தேவையிருக்கின்றது இந்த திருகுகலைப் போக்குவதற்கு.
மேலும் படிக்க
Sunday, April 03, 2005
சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை "அவ்வளவு சீக்கிரம்" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி.
மேலும் படிக்க
Sunday, March 20, 2005
முதலில் ரோசாவசந்திற்காக. லார்ட்லபக்தாஸை செருப்பாலடிப்பேன் என்று சிம்பாலிக்காகச் சொல்லி ஆரம்பித்து வைத்து பல நரம்புகளைத் தொட்டுவிட்டார். ஒரு விதத்தில் திருமாவளவன் போன்றோர்களை எதிர்மறையாகவேனும் பொதுக்களத்தில் இறக்கப்படுவது நல்லதிற்குத் தான். அதை ஒரு குறிப்பிடத்தக்க கூட்டமாவது தொடர்ந்து விவாத வூடாக வைத்திருக்க வேண்டும். அந்த விதத்தில் ரோசாவசந்த்தின் கோபம் மிகத் தேவையானது. திருமாவளவனை ராமதாஸின் பீயை அள்ளுவதாக காட்டியவனை செருப்பால் என்ன நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும். பெரியாரின் தொண்டர்கள் என்றொரு கூட்டம் தலித்துகள் மீது வன்மம் பாராட்டுவது பிதிங்கிவழியும் சாதியத்தால் மட்டுமே தான் தவிர வேறெந்த மயிரும் அல்ல. சங்காரச்சாரியின் சாதியமும் தலித்துகளின் சாதிஅடையாளமும் சாதியம் என்ற வகையில் முன்பின்/தலைகீழ் முரணானது. இந்தச் சாதாரண அறிவு கூட இல்லாமல் "பகுத்தறிந்து" என்னப் புடுங்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் காலச்சுவட்டிலே இப்படித்தான் ரவிக்குமார பன்றி மேய்க்கச் சொன்னது ஒரு பெரியாரின் "பா"ரிசு. அதையும் "பத்திரிக்கா தர்மமாக' வெளியிட்டார்கள். இப்படி வெளியிட்டது பாப்பார புத்தி தானே என நான் சுராவின் செல்லப் பிள்ளைக்கு வாசகர் கடிதம் போட்டால் "பத்ரிக்கா தர்மம்" என்னவாகயிருக்கும் எனச் சொல்லவா வேண்டும் ? வழக்கம் போலவே இந்த விவாதம் ப* புத்தி என்ற கடுஞ்சொல்லுக்கும் பாப்பாரப்புத்தி என்னும் சுடுசொல்லுக்கும் ஆறு வித்தியாசங்கள் காணும்படி இழுத்து வந்தாயிற்று. பீயள்ளச் சொல்லுவது சாதியத்தின் உச்சம் என்றால் பாப்பாரப்புத்தி என்பது சாதியத்தின் அடுத்த நிலை என்னும் இந்த பாப்பார வாதம், எப்படியாவது தலித்துகளுக்கு என்று பொதுபுத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்ச கரிசனத்துக்கும் பங்கு போடுவதற்குத் தானே? . ப*யன் என்பதுவும் பாப்பான் என்பதுவும் ஒரு தராசில் வைக்க வேண்டிய விடங்களா என்ன? ஒரு பார்ப்பான் தான் பார்ப்பான் இல்ல எனத் தெளிந்து கொள்ள *தனிப்பட்ட* யோசனை போதுமே. கோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பது போலத் தான் பார்ப்பான் இல்லை என "முற்போக்குத் தனமாக" தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இரட்டை லாபம் தானே. ஆனால் "தலித்" என்பது அப்படிப்பட்ட சுலபமான ஒன்றா? தலித்தாக பிறந்த ஒருவர் தான் "தலித்" இல்லை என "தனிப்பட்ட" அளவில் யோசித்தாலும் இழப்பு, தான் தலித் தான் என யோசித்தாலும் தனிப்பட்ட அளவில் வலி. ஏற்றுக் கொண்டாலும் வலி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வலி. இப்படிப்பட்ட நிலையில் தான் இருபது வயதில் இப்படி இருந்தேன் ; முப்பது வயதில் இப்படி தாராளமானேன் சகித்துக் கொண்டுள்ளேன், பிச்சை போட்டுள்ளேன் என மஞ்சள் நீராட்டு விழாக்கள் அசோகர் மரம் நட்டார் பாணியில் வரலாற்றுப்படுத்தல்களாக வரும் கொடுமை . பார்ப்பான் என்னும் கருத்தாக்கம் அதன் அத்துனை பவித்தரமான புனிதமான விளக்கங்கள் அளவிலேயே ஒரு வடிந்தெடுத்த பாசிச சிந்தனை. அது விகாரமடைந்து கோரமடைந்து கொப்பளித்து வழியும் இந்த நேரத்தில் தான் பார்ப்பான் இல்லை எனத் தெளிந்து மூடிக்கொண்டு இருக்க என்ன கஷ்டம்? அடங்குங்கடா எனத் தான் சொல்லத தோன்று கின்றது. ரோசாவசந்த், ஒரு வேண்டுகோள். இந்த சூழல் கெட்டுவிட்டது, பஜனை புடிங்கிவிட்டது என புலம்பல்களுக்கும் அடையாலங்களை ( எவன் அடையாளம்?) விட்டு வெளி வரவேண்டும் என்னும் புத்திமதிகளுக்கும், எதிர் கொண்டு கருத்து தெரிவிக்க வக்கில்லாமல் அடுத்தவன் பெயரில் கைமைதுனம் செய்யும் நேர்மைக்கொழுந்துகளுக்கும் ஆப்புடிக்கும் வகையில் பிஞ்ச செருப்பையோ, பீயள்ளிய விளக்கமாறையோ, குறி வெட்டும் கத்தியையோ தூர வைக்காமல் இருக்க வேண்டும். என் வேண்டுகோள் எல்லாம் ஒரு தேவையில்லையென்றாலும் , பொதுவில் வைக்க வேண்டும் என்பதற்காக வைக்கின்றேன். பதிவுகளுக்கும், சளைக்காமல் இவன் பதிவு அவன் பதிவு எனப் பார்க்காமல் தேவையான எதிர்ப்பையும் பாராட்டையும் வைக்கத் தயங்காத மனதுக்கும் நன்றி.
நாராயண், தங்களது சிலுக்கு ஸ்மிதா மீதான பதிவுகளுக்கு ( சாவித்ரியின் கடைசி கால நிலமை மிகவும் அவதிப்பட வைத்த விடயம்), பெடொபைல்களைப் பற்றி, கெட்ட வார்த்தைகளைப் பற்றி என அடுத்தடுத்து மாறுபட்ட, தேவையான கூடவே நல்ல எளிய நடையில் பதிவுகளை தந்தமைக்கு நன்றி. சென்னை வந்தால் ந்ங்கம்பாக்கம் (?)ஒரு விசிட் கொடுத்து சாயா குடிக்க வந்து கதையளக்க ஆசை. அது ஒட்டி இது ஒட்டி என எல்லா கருமமந்திரங்களையும் ஒட்டி கஷ்ட்டப்பட்டு சிகரெட்டை விட்டு விட்டு நம் டீக் கடைகளில் எப்படி டீ குடிப்பது எனத் தெரியவில்லை. சமீபத்திய பயணங்களில் அந்த வாய்ப்பே இல்லாமல் போனது எப்படி என ஆச்சர்யமாக உள்ளது.
இரண்டு படங்கள் பற்றி குறிப்பு வைக்க வேண்டும் என்னும் மன நிலை சற்று மாறிவிட்டது. அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும். முடிக்கும் முன் ஜெயகாந்தனைப் பற்றி. ஹர ஹர சங்கர எழுதிய பின் கிடைத்த ஞான பீட பரிசு ஜெயகாந்தனுக்கு ஒரு நல்ல உவர்ப்பைத்
தந்து கொண்டிருக்குதோ இல்லையொ எனக்கு மகிழ்ச்சி. ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும் முன்பாக, கூட்டம் போட வந்த இடத்தில் சாராயம் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கிப் போட்டக் கொண்ட ஆளுமையும் கூடவே எமர்சென்சியிலிருந்து , ஈழத்தமிழர் விடயம் ஊடாக இன்று ஜெயேந்திரரின் வாழையிலையைத் தாங்கும் இந்தக் காலம் கட்டம் வரை அவரது அரசியலையும் சமூகப் பார்வைகளையும் பார்த்ததால் இவரது இலக்கியத்தை படிக்காதது ஒரு வருத்தத்தையும் தரப் போவதில்லை. இனிப்படித்தாலும் ஒரு பிரயோசனமும் இருக்கவும் போவதில்லை. ஜெயகாந்தன் , அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோருக்கெல்லாம் ஞான பீடமும் அதற்கும் மேலான பீடமும் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கிடைக்கின்றதோ அந்த அளவு தமிழ் சூழலுக்கு நிம்மதி. இவர்களுக்கு கிடைத்த அடுத்த அடுத்த வருடங்களில் கருணாநிதி, வைரமுத்து மற்றும் இன்ன பிறவுகளுக்கும் கொடுத்தால் அதைவிட ஒரு சிறப்பான டாப்பிங் கொடுக்க முடியாது. பின் எந்தப் பிணத்தை வைத்தும் இந்த கோஷ்டிகளின் தற்போதைய அல்லது வருங்கால சிஷ்ய கேடிகள் அரசியல் நடத்த முடியாததல்லவா?
மேலும் படிக்க
Sunday, March 13, 2005
இன்று சன் டீவியில் தெரியாத்தனமாக விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்துத் தொலைத்தேன். உண்மையில் அரட்டை அரங்கம் கான்சப்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடிக்கும். கடிதங்கள் பகுதி, ஆசிரியருக்கு கேள்வி பதில் பகுதி, கேள்விக்கு பதிலாக வரும் ஆலோசனை பகுதி, பெண்கள் பத்திரிக்கையில் வரும் வாசகர் பக்கம்/ வாண்டுகள் பக்கம் போன்றவைகள் எனக்கு பிடிக்கும் அது எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற கவலை கூட இல்லாமல். தினப்படி பப்பரில் "ask amy" என்ற பகுதி விளையாட்டுக்கு பிறகு படிக்கும் பகுதி. சரி அரட்டை அரங்கம் பார்த்தற்கு இந்த அளவு சால்ஜாப்பு போதும் என நினைக்கின்றேன். அரட்டை அரங்கத்தில் மிகப் பிற்ப்போக்கான கருத்துக்கள் அலட்சியமாக, கூடவே மக்கள் கைத்தட்டலுடன் வரும் போதெல்லாம் உடல் கூசிப்போய் மண்ணாந்தை போல கேட்டுவிட்டு பின் மறந்திருக்கின்றேன். ஆனால் இன்று கேட்டதற்கு மன்னிப்பே கிடையாது. அந்த விசு என்ற அந்த பிற்போக்கான மனிதரை(நாயை என்று எழுதி மனது வராமல் மாத்தி விட்டிருக்கின்றேன்)யெல்லாம் என்ன செய்வது எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த வலை உலகத்தில். ஆனால் இந்த மாதிரி ஆட்கள், அதுவும் ஊடகத்துறையில் இருப்பவர்களே இந்தளவு பிற்போக்கானவர்களாக இருக்கும் நிலையில், இந்தியா வல்லரசானால் என்ன ஆகும் என்று யோசிக்கவே முடியவில்லை.
ஒரு பத்து வயது பெண் குழந்தை பேசிக் கொண்டு இருக்கின்றது. அந்த குழந்தை என்ன பேசியது என்பது முக்கியமில்லை. ஒரு இடத்தில் அந்த குழந்தை (ஞாபகத்தில் இருந்து)
பெண் குழந்தை:
எங்களுக்கு பெற்றொரிடத்தில் சுதந்திரமே கிடையாது - அங்கப் போனா தப்பு; இங்கே போனா தப்பு; அதைப் பார்த்தா தப்பு இவரோட விளையாண்டா தப்பு; சிரிச்சா தொந்திரவு.
இடைமறித்த விசு
இத்துணுண்டு இருந்துட்டு இப்படி பேசறே. சிரிச்சா தொந்திரவுன்னு சொல்றே. தெரிஞ்சுண்டு சொல்றியா இல்ல தெரியாம சொல்றியான்னு தெரியலா.
கூட்டமே கை தட்டி சிரிக்கின்றது.
அடுத்து எழுந்த பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறுவன்.
இந்த பொண்ணுங்க என்னமோ சுதந்திரம் சுதந்திரம்ன்னு சொல்லுறாங்க. அவங்களுக்கு தெரியல ஆம்பிளைங்க கல்லு மாதிரி. சுதந்திரம்ன்கிற ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா சின்ன அசைவு இருக்கும் அவ்வளவு தான். பொம்பிளைங்க கண்ணாடி மாதிரி. ஆற்றுத் தண்ணியிலே உழுந்தா நொறுங்கிடும் ஒட்டகூட வைக்க முடியாது.
கூட்டம் கை தட்ட, விசு அந்த சின்ன பொண்ண எழுப்பி,
"உனக்கு புரியறதா. ஆண்கள் கல்லு மாதிரி. அப்படி இப்படி இருந்தாலும் அவங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஆனா பொண்ணுங்க அப்படி கிடையாது. அவங்க கண்ணாடி மாதிரி. "அப்படி இப்படி" இருந்தா நொருங்கிடும். குடும்பத்துக்கே கேவலம் தான்."
இந்த சன் டீவி பண்ணாடை நாய்களை என்ன செய்தா தகும்?
மேலும் படிக்க