Sunday, March 20, 2005

ரோசாவசந்திற்கும் நாராயனுக்கும் நன்றிகள். இந்த வாரத்தில் கலக்கி விட்டீர்கள்.

முதலில் ரோசாவசந்திற்காக. லார்ட்லபக்தாஸை செருப்பாலடிப்பேன் என்று சிம்பாலிக்காகச் சொல்லி ஆரம்பித்து வைத்து பல நரம்புகளைத் தொட்டுவிட்டார். ஒரு விதத்தில் திருமாவளவன் போன்றோர்களை எதிர்மறையாகவேனும் பொதுக்களத்தில் இறக்கப்படுவது நல்லதிற்குத் தான். அதை ஒரு குறிப்பிடத்தக்க கூட்டமாவது தொடர்ந்து விவாத வூடாக வைத்திருக்க வேண்டும். அந்த விதத்தில் ரோசாவசந்த்தின் கோபம் மிகத் தேவையானது. திருமாவளவனை ராமதாஸின் பீயை அள்ளுவதாக காட்டியவனை செருப்பால் என்ன நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும். பெரியாரின் தொண்டர்கள் என்றொரு கூட்டம் தலித்துகள் மீது வன்மம் பாராட்டுவது பிதிங்கிவழியும் சாதியத்தால் மட்டுமே தான் தவிர வேறெந்த மயிரும் அல்ல. சங்காரச்சாரியின் சாதியமும் தலித்துகளின் சாதிஅடையாளமும் சாதியம் என்ற வகையில் முன்பின்/தலைகீழ் முரணானது. இந்தச் சாதாரண அறிவு கூட இல்லாமல் "பகுத்தறிந்து" என்னப் புடுங்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் காலச்சுவட்டிலே இப்படித்தான் ரவிக்குமார பன்றி மேய்க்கச் சொன்னது ஒரு பெரியாரின் "பா"ரிசு. அதையும் "பத்திரிக்கா தர்மமாக' வெளியிட்டார்கள். இப்படி வெளியிட்டது பாப்பார புத்தி தானே என நான் சுராவின் செல்லப் பிள்ளைக்கு வாசகர் கடிதம் போட்டால் "பத்ரிக்கா தர்மம்" என்னவாகயிருக்கும் எனச் சொல்லவா வேண்டும் ? வழக்கம் போலவே இந்த விவாதம் ப* புத்தி என்ற கடுஞ்சொல்லுக்கும் பாப்பாரப்புத்தி என்னும் சுடுசொல்லுக்கும் ஆறு வித்தியாசங்கள் காணும்படி இழுத்து வந்தாயிற்று. பீயள்ளச் சொல்லுவது சாதியத்தின் உச்சம் என்றால் பாப்பாரப்புத்தி என்பது சாதியத்தின் அடுத்த நிலை என்னும் இந்த பாப்பார வாதம், எப்படியாவது தலித்துகளுக்கு என்று பொதுபுத்தியில் இருக்கும் கொஞ்சநஞ்ச கரிசனத்துக்கும் பங்கு போடுவதற்குத் தானே? . ப*யன் என்பதுவும் பாப்பான் என்பதுவும் ஒரு தராசில் வைக்க வேண்டிய விடங்களா என்ன? ஒரு பார்ப்பான் தான் பார்ப்பான் இல்ல எனத் தெளிந்து கொள்ள *தனிப்பட்ட* யோசனை போதுமே. கோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பது போலத் தான் பார்ப்பான் இல்லை என "முற்போக்குத் தனமாக" தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இரட்டை லாபம் தானே. ஆனால் "தலித்" என்பது அப்படிப்பட்ட சுலபமான ஒன்றா? தலித்தாக பிறந்த ஒருவர் தான் "தலித்" இல்லை என "தனிப்பட்ட" அளவில் யோசித்தாலும் இழப்பு, தான் தலித் தான் என யோசித்தாலும் தனிப்பட்ட அளவில் வலி. ஏற்றுக் கொண்டாலும் வலி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வலி. இப்படிப்பட்ட நிலையில் தான் இருபது வயதில் இப்படி இருந்தேன் ; முப்பது வயதில் இப்படி தாராளமானேன் சகித்துக் கொண்டுள்ளேன், பிச்சை போட்டுள்ளேன் என மஞ்சள் நீராட்டு விழாக்கள் அசோகர் மரம் நட்டார் பாணியில் வரலாற்றுப்படுத்தல்களாக வரும் கொடுமை . பார்ப்பான் என்னும் கருத்தாக்கம் அதன் அத்துனை பவித்தரமான புனிதமான விளக்கங்கள் அளவிலேயே ஒரு வடிந்தெடுத்த பாசிச சிந்தனை. அது விகாரமடைந்து கோரமடைந்து கொப்பளித்து வழியும் இந்த நேரத்தில் தான் பார்ப்பான் இல்லை எனத் தெளிந்து மூடிக்கொண்டு இருக்க என்ன கஷ்டம்? அடங்குங்கடா எனத் தான் சொல்லத தோன்று கின்றது. ரோசாவசந்த், ஒரு வேண்டுகோள். இந்த சூழல் கெட்டுவிட்டது, பஜனை புடிங்கிவிட்டது என புலம்பல்களுக்கும் அடையாலங்களை ( எவன் அடையாளம்?) விட்டு வெளி வரவேண்டும் என்னும் புத்திமதிகளுக்கும், எதிர் கொண்டு கருத்து தெரிவிக்க வக்கில்லாமல் அடுத்தவன் பெயரில் கைமைதுனம் செய்யும் நேர்மைக்கொழுந்துகளுக்கும் ஆப்புடிக்கும் வகையில் பிஞ்ச செருப்பையோ, பீயள்ளிய விளக்கமாறையோ, குறி வெட்டும் கத்தியையோ தூர வைக்காமல் இருக்க வேண்டும். என் வேண்டுகோள் எல்லாம் ஒரு தேவையில்லையென்றாலும் , பொதுவில் வைக்க வேண்டும் என்பதற்காக வைக்கின்றேன். பதிவுகளுக்கும், சளைக்காமல் இவன் பதிவு அவன் பதிவு எனப் பார்க்காமல் தேவையான எதிர்ப்பையும் பாராட்டையும் வைக்கத் தயங்காத மனதுக்கும் நன்றி.

நாராயண், தங்களது சிலுக்கு ஸ்மிதா மீதான பதிவுகளுக்கு ( சாவித்ரியின் கடைசி கால நிலமை மிகவும் அவதிப்பட வைத்த விடயம்), பெடொபைல்களைப் பற்றி, கெட்ட வார்த்தைகளைப் பற்றி என அடுத்தடுத்து மாறுபட்ட, தேவையான கூடவே நல்ல எளிய நடையில் பதிவுகளை தந்தமைக்கு நன்றி. சென்னை வந்தால் ந்ங்கம்பாக்கம் (?)ஒரு விசிட் கொடுத்து சாயா குடிக்க வந்து கதையளக்க ஆசை. அது ஒட்டி இது ஒட்டி என எல்லா கருமமந்திரங்களையும் ஒட்டி கஷ்ட்டப்பட்டு சிகரெட்டை விட்டு விட்டு நம் டீக் கடைகளில் எப்படி டீ குடிப்பது எனத் தெரியவில்லை. சமீபத்திய பயணங்களில் அந்த வாய்ப்பே இல்லாமல் போனது எப்படி என ஆச்சர்யமாக உள்ளது.

இரண்டு படங்கள் பற்றி குறிப்பு வைக்க வேண்டும் என்னும் மன நிலை சற்று மாறிவிட்டது. அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும். முடிக்கும் முன் ஜெயகாந்தனைப் பற்றி. ஹர ஹர சங்கர எழுதிய பின் கிடைத்த ஞான பீட பரிசு ஜெயகாந்தனுக்கு ஒரு நல்ல உவர்ப்பைத்
தந்து கொண்டிருக்குதோ இல்லையொ எனக்கு மகிழ்ச்சி. ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும் முன்பாக, கூட்டம் போட வந்த இடத்தில் சாராயம் தான் வேண்டும் என அடம் பிடித்து வாங்கிப் போட்டக் கொண்ட ஆளுமையும் கூடவே எமர்சென்சியிலிருந்து , ஈழத்தமிழர் விடயம் ஊடாக இன்று ஜெயேந்திரரின் வாழையிலையைத் தாங்கும் இந்தக் காலம் கட்டம் வரை அவரது அரசியலையும் சமூகப் பார்வைகளையும் பார்த்ததால் இவரது இலக்கியத்தை படிக்காதது ஒரு வருத்தத்தையும் தரப் போவதில்லை. இனிப்படித்தாலும் ஒரு பிரயோசனமும் இருக்கவும் போவதில்லை. ஜெயகாந்தன் , அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்றோருக்கெல்லாம் ஞான பீடமும் அதற்கும் மேலான பீடமும் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக கிடைக்கின்றதோ அந்த அளவு தமிழ் சூழலுக்கு நிம்மதி. இவர்களுக்கு கிடைத்த அடுத்த அடுத்த வருடங்களில் கருணாநிதி, வைரமுத்து மற்றும் இன்ன பிறவுகளுக்கும் கொடுத்தால் அதைவிட ஒரு சிறப்பான டாப்பிங் கொடுக்க முடியாது. பின் எந்தப் பிணத்தை வைத்தும் இந்த கோஷ்டிகளின் தற்போதைய அல்லது வருங்கால சிஷ்ய கேடிகள் அரசியல் நடத்த முடியாததல்லவா?

மேலும் படிக்க