Friday, May 08, 2009

நல்லா போடறாய்ங்கய்ய......... (நாடகம்)

படிக்கும் முன் இதைப் படித்துவிட்டால் (முக்கியமாக பின்னூட்டங்களை) நல்லது. ஈழச் சகோதர(ரி)ர்களே தயவு செய்து மன்னிக்க


திரை விலகுகிறது

ராஜ மாதவன் ஒரு மரத்தடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கையில் சத்திய சோதனையும் தலைக்கு காப்பிடலிசத்தையும் வைத்துக் கொண்டு கண்கள் மூடிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

ராஜ மாதவன் தம்பி மாசான் ஓடி வருகின்றார்.

மாசான்: அண்ணெ அண்ணெ எழுந்திருங்கன்னே சீக்கிரம் வாங்கன்னே

கண்விழித்த ரா மா: என்ன தம்பி என்ன ஆச்சி ஏன் இந்த பதற்றம்?

மாசான்: சிங்காளத்தூர் பசங்க நம்ம அம்மாவையும் அண்ணியையும் களவாண்டுட்டாங்கன்ன. அந்தத் தேவடியாப்பசங்க தலையை வெட்டணுன்னே வாங்கண்ணே

ரா மா: சரிப்பா நீ எதுக்கு பதறுறே - உனக்கு வேற ரெத்த கொதிப்பு இருக்கு பதறக் கூடாது; கெட்ட வார்த்தையெல்லாம் பேசறே; எங்கே கத்துக்கிட்டே ? சீச்சீ அசிங்கம்

மாசான் : லூசான்னே நீ? நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே? நாம சீக்கிரமா போய் காப்பாத்தனும்னே அப்படியே சிங்காளத்தூர் தேவடியாப்பசங்க குலத்தை அறுக்கனூம்னே

ரா மா: தம்பி நான் ஒனக்கு எத்துனை தடவை பாடம் சொல்லியிருக்கின்றேன். நாமெல்லாம் காந்தி வழி நடப்பவர்கள் குலத்தை அறுக்கணும்னேல்லாம் பேசலாமா? என் உடம்பெல்லாம் நடுங்குது. இப்படியெல்லாம் பேசினா நீ என் முகத்துலேயே முழிக்க முடியாது உனக்கு பொறுமை அவசியம் வேணும். இந்தா இந்த சத்திய சோதனை 38ம் பக்கம் படி நான் என்ன சொல்ல வற்றேன்னு புரியும்

மாசான்: ஒங்காம்மல முதல்ல உன்னை வெட்டனும்டா; வெட்டிப்புட்டு ஒன்னைப் பெத்தது போதாதுன்ன்னு இத்தாதண்டி வளர்தாலே என் ஆத்தா அவளையும் சேர்த்து வெட்டணும். நான் வர்றேன் ( ஓடுகின்றார்)

ரா மா: பாத்தியா உன் உணர்ச்சி உன்னை என்னா செய்ய்துன்னு? அண்ணனையும் ஆத்தாவையும் வெட்டனும்ன்றியே . ஒன் சேர்காலம் சரியில்லை

இந்தக் கூத்தில் ஊர் மக்கள் கூடிவிடுகின்றனர்

சூர்யா : சின்னப்பிள்ளத்தனமா பேசாதீங்கன்னே. தம்பி என்ன சொல்லிட்டாப்ப்ல ? நீங்க பதற விசயம் தான் கோமுட்டுத்தனமா இருக்கு

பக்கத்து வீட்டு ரங்கு அய்யர்: மாது நீ சொல்றது தான் சரி. ஒன் தம்பி சேர்க்கை சரியில்லை; நீதான் கவனிக்கனும். பையன் அம்மாவும் அண்ணியையும் இழந்துட்டான். நீதான் பொறுப்பா கவணிச்சுக்கணும். (மனதிற்குள்ளாக அம்பாளே முதலி குடும்பத்தை ஒழிச்சதுக்கு உனக்கு தினம் நெய் வேத்தியம் ஏத்தறேன்)

சிங்காளத்தூரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் வைத்தி: ராஜன்னே அமைதி தேவைன்னே. சட்டுபிட்டுன்னு கிளம்பிட்டா ஊரெல்லாம் ரெண்டாயிடும் அப்புறம் எவனும் ஒழுங்கா நடமாட முடியாதுன்னே. உங்களைப் போல அமைதி யாருக்குன்னே வரும்..

ரா மாவின் பெண்டாட்டியிடம் செறுப்படி வாங்கினவன்: ராஜா அண்ணே நீங்க தான்னே மாசானை கரிக்கிட்டா புரின்ஞ்சுகிட்டீங்க. தேவடியாங்கிரது, குலத்தை அறுக்கனும்கிறது சேச்சே என்ன அதீதம் என்ன வக்கிரம்??

ரா மா: வாங்க எல்லோரும் வாங்க; அங்கே ஆத்தாளையும் சகபத்தினியையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள்; உள்ளம் பதைபதைக்கின்றது அதெல்லாம் விட இந்த மாசான் பேசிய வார்த்தைகள் அப்பப்பா என்ன துவேஷம்; இந்த சத்திய சோதனையிலேயே இதற்கு தீர்வு இருக்கின்றது பொறுமையாகப் படித்தால் ஒரு தீர்வு வராமலா போய் விடும்;

வத்திக்குச்சி : மாசான் சொல்லியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கின்றேன்.

ரா மாவின் மனைவியின் முறைமாமன்(எனச் சொல்லிக்கொள்பவர்): பெண்டாட்டியை தூக்கிட்டுப் போயிட்டான் ஆத்தாளத் தூக்கிட்டுப் போயிட்டான்னு இந்தச் சண்டை போடுறீங்களே; ஆத்தாளை தூக்கிட்டு போகும்போது ஆத்தா கால் பட்டு என் அப்பாவுக்கு காயம் ஆயிட்டது தெரியுமா? வந்துட்டாய்ங்க சண்டை போடுறதுக்கு

ரா மா: வத்திக்குச்சி, நான் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை; வரலாற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றேன்; சில வார்த்தைகளை வார்த்தைகள் என நினைக்கக் கூடாது அதற்கும் மேலே இல்லாவிட்டால் அதற்கும் கீழே பொருள் கொள்ள வேண்டும். மாசான் எதோ வேகத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதன் விளைவு அப்பப்பா எண்ணமுடியவில்லையே ( சிவாஜி குரலில் )

சுதந்திரம் : சரியான பேச்சு; மாசான் சரியாக பேசினால் சரியாகத்தான் பேசினார் எனலாம். தப்பாகப் பேசினால் தப்புன்னுதானே சொல்லனும். நல்லது தான் சொல்லுகிறீர்கள். உங்களக்கு எனது நன்றிகள்

கஸ்பர் : என்ன சொல்றீங்க சூர்யா? உங்களுக்கெல்லாம் கெட்ட வார்த்தைன்னா என்னன்னு தெரியாது? கொலவெறின்னா என்னன்னு தெரியாது . you dont know any stupid thing

புற வர்ஷங்கள்: அடிப்படையாகவே நம் நாட்டில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ஆதரவும், எதிர்ப்பும் ஆதாயங்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு பலி என இப்போதைக்கு மாசான். மாசான் கருத்துக்களில் பலவற்றோடு நான் முரண்படுகிறேன். கருத்தில் நேர்மையற்றவர்கள் அரசியல் செய்ய மட்டுமே லாயக்கானவர்கள் என்பதென் கருத்து. சேகுவேராவின் படம் அச்சிடப்பட்ட ஆடையணிவதால் மட்டுமே புரட்சி வந்து விடுமா என்ன..? புரட்சியென்பதை பேச்சாக மட்டுமே பிரபலப்படுத்தியவர் மாசான். ஒலிபெருக்கியைப் பிடித்து ஆத்தாலுக்கும் பெண்டாட்டிக்கும் ஆதரவை பேசிவிட உங்களுக்கும், எனக்கும், நம்போன்றோருக்கும் எவ்வளவு கணம் பிடிக்கும். வெறும் பேச்சல்ல நடைமுறை வாழ்க்கையென்பது. போலி புரட்சியாளர்களும், அவர்களுடைய போக்கும் குறித்து சிந்தனையாளர்கள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இது மாசானின் ‘குலத்தை அழிக்கணும்‘ என்பதற்கான பதில் அல்ல. பொதுப்போக்கில் மாசானின் நடவடிக்கைகள் குறித்த கருத்து.

ராமலீலை : மே 15ஆம் தேதி தெரியும் எங்கே என்ன கிழிஞ்சுதுன்னு

ரா மா: எனக்கு மட்டும் எதுவும் கிடையாது என பேசிக்கொண்டிருக்கின்றிர்கள்; நான் வரலாற்றின் துளிகளிலிருந்து பூகோளம் படிப்பவன்; அறிவியல் படிப்பவன் ஏன் தமிழ்ப்பாடம் கூட படித்தவன். வரலாற்றின் துளிகளின் நுனிகளில் பாடம் கற்காதவன் எதையும் சாதிக்க முடியாது. என் ஆத்தாளின் தம்பியே என்ன சொல்லியிருக்கிறார் என கையில் டேப் வைத்திருக்கின்றேன். சிங்காளத்தூரில் வசிக்கும் என் மனைவியின் முறைமாமனே இங்கே என்ன சொல்லியிருக்கின்றார் என கவணிக்கவும். அவருக்கு சூர்யா போன்ற யாரவது ஒருவர் பதிலளிப்பார் என நினைத்தேன். இந்த கஸ்பர் என்னிடமே கேள்வி கேட்கின்றார். நான் என்ன செய்ய. வரலாற்றின் ஒவ்வொரு பக்கமாக அடியெடுத்து படித்தவனிடம் கேள்வி கேட்கிறார்கள் , இண்டர்னெட்டில் தீர்மானம் போட்டுக் கொண்டு கிண்டல் செய்கின்றனர். அமெரிக்காவிலிருந்தெ போன் போட்டு சாட்சியுடன் சொல்லிவிட்டனர் எனத் தெரியாமல் செய்கின்றனர். இந்த ஊருக்கும் சிங்காலத்தூருக்கும் விரோதம் வரவேண்டுமெனவே இந்தவாறு வெறியுடன் பேசுகின்றனர். அமைதியின் அர்த்தமும் ஆழமும் தெரியாமல் பேசுகின்றனர்.......


(பேசிக் கொண்டிருக்கும் போதே இவர் தலைக்குப் பின் ஒளிவட்டம் விழுவது போல் வெளிச்சம் விழ மற்ற இடங்களில் மெல்லிய இருட்டு. கூடியிருப்பவர்கள் அமைதியுடன் ஜெபம் பண்ணுவது போல இருக்க மறுபக்கத்திலிருந்து ஒரு வண்டியில் "எல்லாவற்றையும்" அள்ளிப் போட்டுக் கொண்டு மாசான் கேவி அழுது கொண்டே வருகின்றார்.

திரை கவிழ்கிறது.......

மேலும் படிக்க

Thursday, April 30, 2009

சில/பல எறுமைகளும், சில சிங்கங்களும், ஒரு முதலையும்

நெட்டுல உலவிக் கொண்டிருந்த போது கிடைத்த ஒளிப்படத் துண்டு. முன்னமே சோகத்தில் இருநத மனது பதைபதைபபுடன் பார்த்து.....






தெரியாவிட்டால் இங்கே கிளிக்கவும்

இந்தக் காளான்மண்டிய புண்ணாக்குத் தேவடியாகுடி தமிழனாக பிறந்ததற்கு பதிலாக இந்த எறுமைக் கூட்டத்தில் ஒன்றாக பிறந்திற்கலாம்.





நன்றி - NegativeSpace Media

மேலும் படிக்க

Wednesday, April 29, 2009

அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.

எவனையாவது நம்பி, நல்லா எழுதுறாய்ங்களே, மனிதம் மனிதம்ன்னெல்லாம் உருகுராய்ன்களே நல்லவய்ங்களோன்னு அவிங்க எழுதறதெல்லாம் படிச்சா, சமயத்திலே நல்லா பீயை கறைச்சி மூஞ்சியிலே ஊத்துவாய்ங்க. இந்தத் தேவடியாகுடி நாய்ங்கள்ன்னாலே இப்படித்தானா? குலம்/கோத்திரம் பாக்கக்கூடாது, நல்லது எந்தச் "சூழலில்" இருந்தாலும் முளைக்கும்ன்னு முட்டாத்தனமா நம்பினா இப்படித்தான் போலும். ஒருத்தம் பின்னாடி ஒருத்தன் ஏறுறது இறுந்தாத் தான் வாழ்கை சுவாரசியம்ன்னு ஒரு வாழையிலை பீ தூக்கி ஞான பீடம் பிச்சை வாங்கின தேவமகன் சொன்னான். அவன் கிட்ட வாசம் பிடிச்சதுகிட்ட இந்த மயித்தைத் தான் எதிர்பாக்கனும்னா என்ன செய்யுறது? இந்த தேசீய புழ்த்திகளுக்கு தனக்கு இருக்கும் நியாயம் அடுத்தவனுக்கு கொடுக்க/இருக்கக் கூடாது என்கிறதில இருக்கிற அசிங்கம் தெரியுமா அல்லது தெரியாது போல நடிப்பாங்களா? கவிதைத் தனமா அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்றியே அப்புறம் என்னா மயித்துக்கு முற்போக்குன்னு போட்டுக்கிட்டு புழ்த்திகிட்டு இருக்குற. போய் மாமனோடோ சேந்துகிட்டு ஒன் சொந்த வாழ்க்கை மயிரை புடிங்கிக்க வேண்டியது தானே அவரவர் வாழ்க்கை அவரவருக்குன்னு. ஏண்டா எழவு வீட்டல வந்து ஒங்க சங்காத்தம். வேற எதிலயவாது போய் உங்க CPM கட்சி புழுத்திய புழுத்திக்க வேண்டியது தானே. இந்த விசயத்துக்கு, இங்க , இப்ப எதுக்குடா வற்றீங்க. - திருடன், மொள்ளமாறி, ராட்சசீ இதுங்கள்ட்ட கூட தப்பிச்சுரலாம் இந்த நல்லவன் மாறி வேசம் போடற நாய்கள்ட்ட ஒரு தடவையாவது சுத்தமா ஏமாந்து தான் சுதாரிக்கனும் போல. தூத்தெறி... And here is the rest of it.

மேலும் படிக்க

Saturday, April 25, 2009

புரட்டிவிடும் புள்ளிகள் - Tipping Points - மால்கம் கிளாட்வெல் புத்தகப் பார்வை.

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்ட அனைவருக்குமான விலங்கியல் / அனைவருக்குமான இயற்பியல் போன்ற ஒரே துறையைப் பற்றி புதிது புதினா செய்திகளைத் தொகுத்து வந்த புத்தஙகங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கிப் படித்ததுண்டு. மாடு தின்பது உண்மையிலேயே வைக்கோல் தானா? என்னும் கேள்வி வந்த அனைவருக்குமான விலங்கியல் புத்தகம் இன்னமும் ஞாபகத்தில் இருப்பது ஆச்சர்யம் தான். அதைத் தமிழில் படித்திருந்தது தான் அது ஞாபக அடுக்குகளில் ஒட்டியிருக்கின்றது போல ஒரு தேற்றம் இப்பொழுது. சோவியத் யூனியன் விழ்ந்ததில் நான் அடைந்த சோகம் இந்த வகைப் புத்தகங்கள் மீதான இழப்புத் தான். அதே வகைகளில் இபொழுது மனோதத்துவம், பொருளாதரம், சமூகவியல், வரலாறு, புள்ளியியல் என பல இயல்களை அனைவருக்குமாக கலந்து கட்டி சின்னச் சின்ன விடயங்களை, வேறு புது கோணத்தில் காட்டி எழுதும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் புகழடைந்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன் தாறுமாறுளாதரம் ( :-) Freakonomics), உலகம் தட்டை தான் (The world is flat) என்னும் புத்தகங்கள் மக்களாதரவை அடைந்திருந்த சமயத்தில், கும்பலோடு கும்பலாக வாங்கிப் படித்ததில் இந்த வகைப் புத்தகங்கள் மீதான ஒரு ஆவல் தொடங்கியது.
அப்பொழுது தவற விட்டிருந்த புத்தகம் தான் இது - புரட்டிவிடும் புள்ளிகள். இதனுடைய ஆசிரியர் மால்கம் கிளாட்வெல். இந்த புத்தகத்தைத் தவிர மேலும் இரண்டு புத்தகங்களை எழுதி அவைகளும் நல்ல ஆதரவை பெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்ல வெள்ளை அட்டையில் ஒரு சிறு தீக்குச்சியின் படத்துடன் ஆப்பிள் குழுவினரின் வெளியீடு போல இருக்கும் இந்தப் புத்தகம் எளிமையான நடையில் எழுதப் பட்டிருக்கின்றது. எந்த ஒரு, கொள்ளை நோய் போல, துரிதமாகவும் பரவவும் கூடிய விடயங்களை (நல்லவற்றிர்க்கும் கெட்டவற்றிர்க்கும்) ஏற்படுத்தக் கூடியவைகளை மூன்று வகைளாக வகைப்படுத்தலாம் அவை - , மிகக் குறைந்த அளவிலான ஆனால் செறிவூக்கமும் செயலூக்கமும் கொண்ட நபர்கள் - ஆழமாக ஒட்டக் கூடிய செய்தி - தோதுவான சூழல். இந்த மூன்றையும் சரிவரக் கையாளத் தெரிந்தால் எந்த ஒன்றையும் - தொழிலாக, புரட்சியாக, நோயாக, நோய்கூறாக எதுவாக இருந்தாலும், அதை எளிமையாக பரவலாக்கலாம் என்பது தான் புத்தகம் சொல்லும் செய்தி. ஒரு கட்டுரைக்குள் முடிக்கக் கூடிய விடயமாக இருந்தாலும் (முதலில் இது கட்டுரையாகத் தான் வந்ததாம்), ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான உதாரணங்கள், ஆராய்சிகளின் தொடர்புகள் என ஆச்சர்யப் படக்கூடிய துணுக்குகளை அடுக்கியிருந்தார். பல துணுக்குகளின் பின்னால் உள்ளது மறுதலிக்க இயலாதது.

சில துணுக்குகள் என்னை துணுக்குற வைத்தன என்றால் மிகையில்லை. அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு தூண்டுகோலாக, போஸ்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியை காட்டி, அதை ஆரம்பித்து நடத்திவைத்தவர்களாக ஒரு மூன்று பேரைச் சுட்டுகின்றார். அந்த மூவரில் பால் ரெவெர்(paul revere) என்னும் ஒருவரின் மக்கள் தொடர்பு நிபுனத்துவத்தின் அளவு தான் விவசாயிகளையும் மற்றவர்களையும் ஒன்றினைத்து, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து நிற்க முடிந்தது. அப்படி நிற்க முடிந்ததே பின்னால் சுதந்திரப் போருக்கான ஆதார வித்து எனவும் நிறுவுகின்றார். ஆராய்ந்து பார்த்தால் பல போராட்டங்கள் இப்படித்தான். பல போராட்டங்கள், முளைவிடாமலே கருகி விடுவதும் இந்த மாதிரி ஆட்களின் போதாமையே. ஒரே மொழி பேசும் இனம் இரண்டு நாடுகளில். ஓரு நாட்டில் இருக்கும் அந்த மக்கள் அழித்தெடுக்கப் படுகின்றார்கள். இன்னொரு நாட்டில் இருக்கும் அதே மக்கள் விளையாட்டுப் போட்டிகளின்ன் வெற்றித் தோல்விகளில் முழ்கியிருக்கின்றார்கள். என்னைப் பொருத்தவரை பால் ரெவேர் போன்ற ஆட்களின் போதாமை ஒரு முக்கிய காரணம்.புரட்டிவிடும் புள்ளிகள் இல்லா கள்ளி நிலமாகத் தான் அந்தக் களம் இருக்கின்றது. 4 அல்லது 5 கோடி புண்னாக்க்குகளும் அதன் மேல் பூஞ்ச காளான்களாக 20-25 லட்சம் காளான்களும் இருக்கும் களத்தில் அதை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் தான்

எனக்குக் கணிதத்தில் வரும் சில எண்கள் மேல் ஒரு விருப்பம் . பை எண் (Phi), படியேற்றம் (exponential) போன்ற எண்கள் கொடுக்கும் நிச்சயம், இந்த நிச்சயமற்ற உலகில், வசீகரிக்த்தான் செய்யும். அதே போல எண்கள், மனிதக் குறியீடுகளிலும் அங்கங்கே மறைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்த எண்களை கொடுக்கும் எல்லா செய்திகளையும் அதிகம் நோண்டிப்பார்க்காமல் அங்கீகரித்தும் விடும் என் மனது. இந்தப் புத்தகமும் சில எண்களை விட்டெறிந்திருந்தது. ஏழு என்ணும் வசீகர எண். சராசரி மனித மனம், ஒரு எழு வகை வித்தியாசங்களை உணர முடியும். அதற்கு மேல் உள்ள வித்தியாசங்கள், பிறழத் தொடங்கி விடும். நூற்றி ஐம்பது என்னும் வசீகர எண். இந்தளவு உள்ள மக்கள், எந்த விடயத்தில் இறங்கினாலும், முயற்சித்தால் எளிதாக ஒத்திசைந்து இயங்க முடியும். இதற்கு மேல் கூடத் தொடங்கினால் அந்த ஒத்திசைவு கெடத் தொடங்கிவிடும். இவைகளை சில பல உதாரணங்கள் , பேட்டிகள் என நிறுவுகின்றார். இந்த எண்களை என் மனது அதிகம் ஆராயாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. ம்ம்ம் என்ன செய்ய

உடைந்த கண்ணாடி ஜன்னல் என்னும் ஒரு கோட்பாடு. இது சூழலைச் சார்ந்தது. இந்தக் கோட்பாட்டைக் கொண்டு நியுயார்க்கில் 90களில் நிகழ்ந்த தீயச் செயல்கள் குறைப்பு ந்கழ்சியை விளக்குகின்றார். நான் இயற்கை vs சூழல் வகை அரசியல் பிரிவுகளில் சூழல் பின் நிற்பவன். எனக்கு இதனை ஏற்பதில் சிரமம் இல்லை. வேறு இடங்களில் ஆசிரியரே இயற்கை மட்டுமே இல்லை கூடவே சூழல் மட்டுமே இல்லை என குழந்தைகள் வளர்ப்பு பற்றிச் சொல்லும் போது அதன் உண்மையும் உறைக்காமலும் இல்லை.

இந்தப் புத்தகம் அதன் கடைசி பகுதிகளில், அதன் முதலில் இருந்த வேகத்தை இழந்தாலும், ஒட்டு மொத்தமாக படிக்கையில் ஒரு புதிய பார்வையைத் தரும் என உறுதியாகச் சொல்லலாம்.

மேலும் படிக்க

Sunday, April 12, 2009

என்ன கொடுமை இது?

தமிழில் முக்கியமாக தமிழ்இணையத்தில் நல்ல எழுத்தை - நல்ல என்பதற்கு சிறப்பான மொழி வளமான சரளமான நடை கொண்ட எழுத்து என்பதை விட "சக" மனிதம் மேல் நம்பிக்கை ஏற்ப்படுத்தும்/ஏற்படுத்த முனையும் எழுத்தே என தற்போதய அறிவு சொல்லும் - தருகின்றவர்களாக மாதவராஜ் மற்றும் தமிழ்செல்வன் அறிமுகமாகியிருக்கின்றார்கள். ...... "முற்போக்கு" என்னும் சொல்லின் மீதே வன்மம் தெளித்து எழுதி வந்த கூட்டங்களைப் பார்த்து ஏன் இந்த வார்த்தையை துவம்சம் செய்திருக்கின்றார்கள் எனத் தோனும் இவர்கள் இருவரது எழுத்தைப் பார்க்கும் போது அந்த "முற்போக்கு"ன் மீதான வன்மத்தின் அடியாழம் பிடிபடுகின்றது. சகமனிதத்தின் எதிர்ப்புதான் உண்மையிலேயே அந்த வன்மத்தின் ஊற்றுக்கண் எனவும் புலப்படுகின்றது. சரி மேலும் விலகாமல் சொல்ல வந்ததை சொல்ல முனைகின்றேன். இன்று மாதவராஜ் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரையை இப்பொழுது படிக்கும் போது தோண்றியதை அப்படியே அதே "ரா"வான தொனியை தர வேண்டும் என ஒரு வெறி- அமெரிக்கா காரன் ஈராக் காரனை போட்டு அடிக்கின்றான். சீனாக்காரன் திபேத் காரணை போட்டு அடிக்கின்றான். ரஷ்யாகாரன் ஜார்ஜியா/செசனியா ன்னு போட்டு அடிக்கின்றான். இஸ்ரேல் காரன் பாலஸ்தீனியனை போட்டு அடிக்கின்றான். ஆப்பிரிக்காவில எவன் எவனோ எவன் எவனையோ போட்டு அடிக்கின்றான். இந்தியத் தேவடியாகுடி மாமாக்கூட்டமான தமிழ்க்கார நமக்குக்கு என்ன யோக்கிதை இருக்கு அதையெல்லாம் கேக்கிறதுக்கு? நமக்கு தான் விளக்கென்னை தடவி விட்டு உள்ளே நல்லா போகுதான்னு விளக்கு பிடிக்கிற வேலையை விரும்பி எடுத்தாச்சு. அந்த நிலைமையிலே இந்த வடிவேலு சவுண்டெல்லாம் எதுக்கு? ஒரு நிமிடம் ஒரு அமெரிக்க/அய்ரோப்பிய வெள்ளைக்காரனாகவோ ஒரு சப்பான் சப்பமூக்குகாரனாகவோ இருந்து இதை வேடிக்கைப் பார்த்தா இதுவரையிலேயே மோசமா எடுத்த காமெடிப் படத்தை விட மோசமா இருக்கும் நம்ப நிலமை. சீரிஸா சொல்றேன் - நமக்கு எவனைப் பத்தியும் எதுவும் சொல்ல இனி எந்த ஜென்மத்திலேயும் எந்தக் காலத்திலும் யோக்கிதை கிடையாது. வேற எதயாவது பேசலாம் இந்த இனம் அந்த இனத்தை அடிக்குதுன்கிறத தவிர வேற எதையாவது பிளீஸ்

மேலும் படிக்க

Saturday, March 28, 2009

வெள்ளைப் புலி (The White Tiger)- அரவிந்த் அடிகா

அடிகாவின் இந்தக் கதையைப் பற்றி போன வருடம் ஏப்ரலில்இந்த இடத்தில்வந்ததைப் பற்றி என்னுடைய twitter messageல் குறிப்பிட்டிருந்தாலும், இப்பொழுது தான் படிக்க முடிந்ததது. சில நாட்கள் முன் COSTCO மாதாந்தர சாமான் வாங்கும் வைபவத்தில் என் மனைவி தீவிரமாக தள்ளுவண்டியில் அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது, நான் புத்தகப் பிரிவில் மேய்ந்து (திட்டு வாங்கிக் கொண்டுதான்) கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம் $8.99 க்கு கிடந்தது, வாங்கவும் கை அரித்தது. எனக்கு fictionஐ விட non fiction மீது ஈடுபாடு இருந்தாலும் அபூர்வ சமயங்களில் fiction வாங்குவது உண்டு கவணிக்க- வாங்குவது என்பதற்கும் படிப்பது என்பதற்கும் 6 வித்தியாசங்களுக்கு மேல் உண்டு. ஆனால்

இந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்னும் தீவிரம் இருந்தது. பலவருடங்களுக்கு முன் அருந்ததிராயின் காட் ஒப்ஃ சுமால் திங்ஸ் நாவலை வாங்கி படிக்க ஆரம்பித்து பாதியில் நின்றது, இன்னமும் நிற்கின்றது. சிறுகதைகள் படிக்க முடியும் எனக்கு, நாவல்கள் பெரும் சவால் தான். என்ன பிரச்சனை என்றால் , சிறுகதைகளை தூங்கவதற்கு முன் இருக்கும் அவகாசத்தில் படித்து விடலாம், சில கும்பல்கள் சிறுகதை என்ற பெயரில் குருநாவல் எழுதி உயிரை எடுக்கும், அதை மறந்து விட்டால். ஆனால் நாவல்கள் அப்படியில்லை. பாதியில் நிறுத்தினால் திரும்ப ஆரம்பிற்பதற்கு மெனக்கெடுதல் அதிகம் வேண்டியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்களின் குறையை விட தவிர என் முனைப்பின் மீதுதான குறை அதிகம். இடைவெளியில் பல திசைகளில் மனம் திருப்பிவிடப்படுகின்றது. மிடில் ஸ்கூல் கால கட்டங்களில் கோடை விடுமுறைகளில், தூங்கும் போதும் , பேளும் (நன்றி ராஜநாயகம்) போதும், சாப்பிடும் போதும் வண்டி வண்டியாக கல்கி, சாண்டில்யன் என படித்த காலங்கள் போய் இப்பொழுது ஒரு 300 பக்க நாவல் படிக்க மூச்சு வாங்குகின்றது. பல கதைகள் பாதியிலே- இது தமிழிற்கும், ஆங்கிலத்திற்கும் பொருந்தும். இந்தக் கொடுமை இப்போ சில/பல சினிமா படங்களுக்கும் தொடர்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் இந்த நாவலை படித்து "முடித்து" விட்டேன். முதலில் ஒரு ஓட்டத்தில் 200 பக்கங்களை கடந்ததும் அடுத்த ஒட்டத்தில் முடிக்க வைத்துவிட்டது. நடை வேகமாக ஓடியது என்பது கூட காரணமாக இருக்கலாம். கதை என்றால் ஒன்றும் இல்லை. குண்டியால் சிரிப்பதற்கு கதையென்பது தேவையா என்பது இந்த நாவல் வைக்கும் ஒரு கருத்தாகக் கூட இருக்கலாம். முதலில் ஒன்று சொல்ல வேண்டும். இந்தக் கதையின் அடிநாத நக்கலைப் பிடிக்க, கொஞ்சம் சூடு சொரனையுள்ள தெற்கத்திய கருப்பனாக இருந்து, வடக்கத்தியான்களுடன் சகவாசமும் முக்கியமாக வடநாட்டில் சில காலமாவது வாழ்ந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இந்தியாவுடன் சுத்தமாக எந்தவித தொட்டுக்க பட்டுக்கவும் இல்லாமல், இந்தியா என்பதை புத்தகவாக்கில் அறிந்து இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாவிட்டால் இந்த நாவலைப் படிக்க/புன்முறுவல் பூக்க/அப்படி போடு என/ ஒஹ் இந்தக் கூனாக்கல் இப்படிதானா என நக்கலுட/ முடியாது.

நாவல், ஒரு ஏழு இரவுகளில், ஒர் மாபெரும் கசாப்புக்கடையில் இருக்கும் கோழிகூண்டிலிருந்து ஒரு கோழி எப்படித் தப்பிக்கின்றது (உண்மையிலேவா?) என கோழியே மற்றுமொரு மாபெரும் கசாப்புக்கடை அதிபருக்கு விளக்கி எழுதும் கடிதங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு இரவும் கசாப்புக்கடையை எவ்வளவு தூரம் ஒரு "கோழி" விளக்கமுடியுமோ அந்தளவிற்கு விளக்கின்றது. 36000004 ( 3 கோடியே 60 லட்சத்து இந்து + 3 கிறிஸ்தவ + 1 முஸ்லீம் கடவுளர்) குண்டிகளை தொழும் கோழிகளின் பழக்கவழக்கத்தில் ஆரம்பித்து, கோழி எதை இழந்து தப்பிக்கின்றது, பின் தப்பித்த கோழி எப்படி தானே ஒரு கசாப்புக்கடை வைத்து..., என ஒரு சோகமான காலவட்டத்தில் கதை முடிந்து விடுகின்றது. முன்னா "ஹல்வாய்" இந்த ஜன்மத்திலேயே அசோக் "சர்மா"வாக என்ன செய்யனும் என்னும் இந்தக் கதை "வருதே மூத்திரம்" கோஷ்டிகள் படிக்க முடியாதது தான்.

பொதுவாக பொலிடிகல் கரக்ட்னெஸ் பார்க்கும் மேற்கத்திய கோஷ்டிகள் இதை எப்படி உள்வாங்கின என்பது ஒரு ஆராய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம் கூட.. பின் குறிப்பாக உள்ள ஆசிரியரின் பேட்டியில் ஆசிரியர் தனது எழுத்தின் ஆதர்சமாக, மூன்று கருப்பின ஆசிரியர்களை குறிப்பிடுகின்றார் - ரால்ப்ஃ எலிசன் (Ralph Ellison), ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin), ரிச்சர்ட் ரைட் (Richard wright) - முக்கியமாக எலிசனின் இன்விசிபிள் மேன் என்னும் புத்தகத்தையும் குறிப்பிடுகின்றார். நாவலின் முன்னும் பின்னும் குவிந்திருக்கும் (அஜீர்னப்படுத்தும் அளவுக்கு உள்ள) புகழாரங்களில், பலரும் எலிசனின் இன்விசிபிள் மேனையும், ரைட்டின் நேட்டிவ் சன் னையும் குறிப்பிடுவதால், அந்தப் புத்தகங்களுக்குள் , இந்த நாவல் மேற்கத்தியவர்களில் எந்த நரம்பைத் தொட்டது என்னும் மர்மம் இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. கூடவே எல்லா விடயத்தையும் "பிலாசபிக்கலாக" பார்ப்பது போல் "தொனத்தொனவென" பேசும் "இந்தியர்களின்" முடிச்சை மேற்க்கத்தியவர்களுக்கு இந்த நாவலின் முக்கிய கோழி அவிழ்க்கப் பார்த்திருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.


மேலும் படிக்க

Friday, March 27, 2009

இரவுகள் உடையும் - மாதவராஜ்

நேற்று இரவு தான் இந்தக் குறும்படம் பார்த்தேன். தமிழகம் சார்ந்த குறும்படங்களை பல பார்த்திருக்கின்றேன். சிறுவனாக இருக்கும் பொழுது நகர லைப்ரரில் மாதத்தின் இரண்டாம் சனியன்று படங்கள் போடுவார்கள். அந்தப் பொழுதில் உடல் சரியில்லை என்றாலே, பரிட்ச்சை சமயமோ தவிர மற்ற எல்லா நேரங்களிலும் படம் பார்த்திருக்கின்றேன். பெரும்பாலும் குடுப்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரப் படங்கள். கூடவே செய்தி நிறுவணப் படங்கள் எனப் பல. அதன் பிறகு சமீபத்தில் சிவகுமார் என்பவர் அமெரிக்கா வந்த போது காண்பித்த, அவர் எடுத்திருந்த படங்கள். லீனா மணிமேகலை வந்த போது, அவரை தவற விட்டிருந்தேன். அதன் பின் இப்பொழுதான் இந்தப் படம் Aசாலைப் பணியாளர்கள் வேலை நீக்கத்தைப் பற்றி பேசும் இந்தக் குறும்படத்தில் , சில மனிதர்களின் நேரடிச் சோகத்தை அவர்கள் மொழியிலே, அவர்களது நிஜமான உணர்சிகளிலேயே பார்க்க உணர்வுக் கொந்தளிப்பாக இருந்தது. சிறுவர்களின் முகபாவனைகள், அந்தக்

கண்களின் பின்னே தெரியும் சோகத்தையும் பயத்தையும் பிடித்திருந்தது ஆச்சர்யமாகவும் சோகமாகவும்

இருந்தது. சில விஷயங்களை இந்தப் படம் இன்னமும் தெளிவாக விளக்கியிருக்கலாமோ என்று பட்டது.
இந்தப் படம் இரண்டு விடயங்களை தொட எத்தனித்தது என நினைக்கின்றேன் - ஒன்று பிரச்ச்னையின் விளைவான தனிமனித சோகம். மற்றொன்று இந்தப் பிரச்சனையின் ஆணிவேரான அடிப்படைச் சட்டமீறல் அதுவும் அரசாங்கத்தினாலேயே. தனிமனித சோகத்தைக் காட்டிய அளவு, இந்த சட்டமீறைலைப் பற்றிய ஆழமான விவாதம் இல்லாமல் இருந்ததாகப் பட்டது. அரசாங்கம் பொய்யான தகவலைத் தெரிவிதிருந்தது அதாவது வேலைநீக்கம் செலவினக் குறைக்க எனச் சொன்னாலும், அரசாங்கம் அதே வேலைக்கு இன்னம் அதிகம் செலவழைக்கப் போகின்றது என கணக்கு காட்டிச் சொன்ன சங்கத்து இளைஞர் கருத்தை , ஒரு பேட்டி என்ற அளவில் இல்லாமல் , மேலும் ஆராய்ந்து அந்தக் கணக்கு பிழையை இன்னமும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம். அதே சமயம் அதே வேலைக்கு தனியார் நிறுவணங்கள் மிகக் குறந்த்த கூலி கொடுத்து வாங்கும் கொடுமையையும் வெளிச்சம் போட்டிருக்கலாம். இருந்தாலும் இந்தப் படம் அது செய்ய முனைந்ததை/ வெளிக்கொனர வந்ததை நன்றாகவே செய்தது எனலாம்.
இந்தப் படம் என்னுள் தூண்டியவைகளை சுருக்கமாக சொன்னால்

1. இந்தியாவின் சாலைப் பணியாளர்கள், இந்த வெளிநாட்டு சாலைப் பணியாளர்களை ஒப்பிட்டுப்பார்த்தால், கொடுமைப்படுத்தி வேலை வாங்கப் படுகின்றவர்கள் எனக் கொள்ளலாம். எந்தவித பாதுகாப்பு ஆபரணங்களும் இல்லாமல், தொழிலுக்கு வேண்டிய சரியான கருவிகளும் இல்லாமல், அவர்களது வெறும் உடல் உழைப்பை உறின்சி செய்யப்படிகின்ற வேலையிலும் நடந்த இந்த சட்டமீறலான வேலை நீக்கம் கொடுமையானது
2. எந்தவித அரசு கண்காணிப்பும் இல்லா / இருக்கும் கொஞ்ச நஞ்ச கண்காணிப்பும் லஞ்ச லாவண்யத்திற்கு விற்கப்படும் சூழலில் நடக்கும் தனியார் மயமாக்கம் மிகத் தீங்கானது
3. இந்திய அரசாங்கம் ஒரு நேர்மையான முறையில் பகிர்ந்து அளிக்கப் படவில்லை. வெள்ளைக்காரன் ஒரு அடிமை நாட்டை ஆளவேண்டியதன் பொருட்டு ஏற்படுத்திய வலுவான மத்திய அரசு / மிச்சம் மீதியை கொண்டு அமைக்கப்பட்ட அடிமை மனப்பான்மை கொண்ட மாநில அரசு என மேல் நோக்கி செல்லப்படும் அரசமைப்பை, சுதந்திர இந்தியாவும் சுவீகரித்தது தான் பிரச்சனை. ஒரு நேர்மையான, பொது மக்கள் தங்களைத் தானே ஆள வைக்க வேண்டிய வலுவான முக்கிய அதிகாரம் ( தானே வரி வசூலிக்கக் கூடிய) கொண்ட உள்ளுர் அரசாங்கம் , உள்ளூர் அரசாங்கங்களை வழிப்படித்துகின்ற மாநில அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் ஒரு பொது நிதி கொள்கையைக் கொடுக்கக் கூடிய, மாநிலங்கள் சமபங்கு உரிமை கொண்ட மத்திய அரசு என்னும் பகிர்ந்தளிக்கப்பட்ட அரசு இயந்திரங்கள், மக்களுடன் நெருக்கமாக இருந்தால் இந்த வகை சட்ட மீறல்கள் குறையவும், சாலைப் பணியாளர்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் வாய்புகள் அதிகரிக்கலாம் என்று ஒரு எண்ணம்.

இந்தவகைப் படங்கள் மேலும் எடுக்கப்பட்டு அவைகள் விவாதப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். எடுத்த டைரக்டர் மாதவராஜிர்க்கு நன்றியும் வாழ்த்துகளும்.

படத்தை இங்கேயும் பதிக்கின்றேன்.




சரியாக வரவில்லையென்றால் இங்கேயும் பார்க்கலாம்



மேலும் படிக்க

Saturday, February 14, 2009

அமெரிக்க வணிகக் கட்டுப்பாடுகள்

அமெரிக்க தளையற்ற பொருளுடமை பற்றி பேசப்படும் அளவிற்கு, அமெரிக்க வணிக கட்டுப்பாடுகள் பற்றி பேசப்படுவதில்லை. அமெரிக்க சுதந்திரம் வாங்கிய சமயத்திலேயே இந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றி விவாதங்கள் நடந்து வந்து, சில கட்டுப்பாடுகள் அடிப்படைச் சட்டத்தில் ஏற்றப்பட்டிருந்தது. ஆனாலும் 19890;ல் வணிக கட்டுப்பாடுகளைப் பற்றிய சட்டம் அமலுக்கு வந்து, வணிக கட்டுப்பாடுகளின் மீதான மறுவிசாரணையும்/ தீர்வையும் அளிக்கும் உரிமை அமெரிக்க உச்சநீதி மன்றத்திடம் வந்தது. அமெரிக்க உச்சநீதி மன்றம், அடிப்படை சட்டங்களிடையேயான மிக முக்கிய தீர்வுகளை தந்துபோல் வணிக கட்டுப்பாடுகள் மீதான சில முக்கிய தீர்வுகளையும் தந்தன. அந்த தீர்வுகள் அமெரிக்க வணிகத்தின் போக்கினை தீர்மானிப்பதாக இருந்தன. உலகளாவிய பொருளாதாரம் மற்றும் இணைய வழி வணிகம் கூடவே சிக்காகோ வழி சிந்தனை என்பவைகள் இந்தக் கட்டுப்பாடுகள் மீது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழப்பங்கள், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்புகளில் தெரிந்தாலும், கூடவே நிறுவணங்களின் அரசாக செயல்பட்ட புஷ் அரசாங்கம் நியமித்த அமெரிக்க உச்ச நீதிபதிகள், நிறுவணங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை செய்கின்றன என்றும் ஒரு விவாதம் உள்ளது. ஆனால் என்னுடைய விருப்பம், இந்த அமெரிக்க அரசு உருவான சமயம் அல்லது முக்கியமாக போன நூற்றாண்டு இடை வரை, இந்த நாட்டின் அடிப்படை எவ்வாறு ஒரு தனிமனித சுதந்திரத்தை உண்மையான நோக்குடன் பேணுவதாக இருந்தது என ஆராயும் நோக்கு. தனிமனித சுதந்திரத்தின் அளவே எந்த ஒரு சமுதாயத்தின் வெற்றியின் அளவாகும் என்பதாக என் தனிப்பட்ட விருப்பம். பீயள்ளுவது தான் ஒருத்தனின் சுதந்திரம் என்றால் அந்தப் பீய்ள்ளும் வெற்றிதான் அந்த சமுதாயத்திற்கு, அது சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட்டாலும். சிரித்துக் கொண்டே பீயள்ளுகிறார்கள் அதை எப்படி மேற்கத்திய கண் கொண்டு பார்க்கலாம் என தேவிடியாகுடி ஞானகுருக்கள் கேட்கும் முன்னே நாம் நம் விடயத்திற்கு திரும்பலாம்.எந்த ஒரு பொருளாதாரமானாலும் அது எந்த பொருள் எப்படி எவ்வளவு தேவைப்படும், எங்கிருந்து வரவழிக்கப் படும் அல்லது எப்படி தயாரிக்கப் படும் கூடவே முக்கியமாக யார் இதனை செய்யலாம் யார் இதனை உபயோகிக்கலாம் என்றெல்லாம் முடிவு எடுக்க வேண்டும்.

அந்த முடிவுகளை மூன்று வழிப்படுத்தலாம். முதலாம் வழி மரபு ரீதியானது. ஐரோப்பிய நாடுகளில் மேல்வட்டதினரால் வழிநடத்தப்பட்ட பொருளாதார நிறுவணங்களிடம் இந்த முடிவு செய்யும் அதிகாரம் இருந்தது. அரசனுக்கு ஒரு கமிஷன் கொடுத்துவிட்டு, பின் இந்த நிறுவணங்கள் நிர்ணயம் செய்வது அந்தக் காலத்தில். இதையே தேவடியாகுடியில் சாதி மற்றும் வர்ணம் நிர்ண்யம் செய்யும். சந்திரோயான் விடும் தேவடியாகுடியில் இன்னமும் சில பல முடிவுகள் சில சாதிக்கூட்டங்களின் கையில் இருப்பதும் சிலசமயம் சில இடங்களில் மதக் கூட்டதின் கையில் இருப்பதும் நடக்கும். இந்தப் பொருளாதார முடிவுகளின் முரணே பல நேரங்களில் தேவடியாகுடியில் நடக்கும் மதக் கலவரங்களுக்கு பின்புலனாகவும் இருக்கும்.

இரண்டாம் வழி ஒரு வானளாவிய அதிகாரம் கொண்ட மத்திய அமைப்பு மேலே கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் முடிவு எடுக்கும். உதாரணமாக சோவியத் யூனினில் செய்யப்பட்ட அல்லது சைனாவில் செய்யப்படுகின்ற முறை.

மூன்றாவது வழி இந்த முடிவுகளை எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற சந்தை தீர்மானிப்பது. சந்தை என்றால் எவன் வேண்டுமானாலும் விற்கலாம் எவன் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்னும் அர்த்ததில். . இதன் சாதக பாதகங்களுக்கு செல்லும் முன்னே இந்தச் சந்தை, "எவன்", விற்பவன், வாங்குபவன் என்னும் ஆட்களை அறிந்து கொள்வது முக்கியம். இந்தச் சந்தை எப்பொழுது தொடந்து ஓட்டம் கொள்ளும்? விற்கின்றவன் கூட்டு சேர்ந்து வாங்குகிறவனை மொங்கா போட்டாலும் வாங்குகிறவன்கள் கூட்டம் சேர்ந்து விற்கின்றவனை மொங்கா போட்டாலும் இந்தச் சந்தை படுத்துக் கொள்ளும். அது இல்லாமல் விற்கின்றவன்கள் தனித்தனியே போட்டி போட்டு, விற்கின்ற பொருள்களை விலையிலும் தரத்திலும் புதுமையிலும் மெருகு ஏற்றி ஏற்றி, வாங்குகிறவனை வாங்க வைக்க வேண்டும். அப்படி வாங்க வைக்கும் போட்டி இருந்தால் தான் சந்தை தொடர்ந்து ஓட்டம் கொள்ளும் என்பது இந்த வகை. ஒரு வகையில் பார்த்தால் முதல் இரண்டு வகைகளும் இந்த வகையின் முழு எதிரிகள். முதல் இரண்டு வழிகளுமே இந்தப் "போட்டா போட்டியை" விலக்கி விடுகின்றன.

இந்த மூன்றாவது வழிதான் அமெரிக்கா தேர்ந்த்தெடுத்தது அமெரிக்கன்களுக்கு இந்தப் "போட்டா போட்டி" மேல் ஒரு நம்பிக்கை. அது தான் மனித சக்தியை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றது என்று ஒரு அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே மோனோபோலி எனப்படும் ஒரு தனிகுழுவோ, நிறுவணமோ அல்லது அரசாங்கமோ இந்தச் சந்தையை கை கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர் ( இப்பொழுது அந்தத் தீவிரம் குறைந்து வருகின்றது ). இந்த போட்ட போட்டியை தற்காத்துக் கொள்ள 1890 ஷெர்மன் அக்ட்(sherman act) என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்த ஷெர்மன் சட்டம் மிக முக்கியமான நோக்கை நோக்கி இருந்தது. அவைகளை நான்கு வகைப்படுத்தலாம். முதலாவது - நுகர்வோர் நலன் மற்றும் சந்தையில் முக்கிய பங்கு வகிப்போரிடம் அந்தப் பங்கு பெருகவிடக்கூடிய சொத்து மாற்றங்கள் மீதான தடைகள். இரண்டாவது சந்தையில் புதுமைக்கும், அறிவுப் பெருக்கத்திற்கும் வகைமை செய்வது. மூன்றாவது சந்தையில் இருக்கும் தனியார் நிறுவனங்களை சமசீராக காப்பது . நான்காவதாக பொருளாதார பலத்தை பரவலாக்குவது.

இந்த ஷெர்மன் சட்டத்தின் இரண்டு பகுதிகளின் தமிழாக்கம் இங்கே - இது இந்தச் சட்டதின் பின் உள்ள குறிக்கோளை காட்டலாம்

1. எந்த ஒரு நிறுவனங்களுக்கிடையேயான ( ஒரு பகுதி அரசு நிர்வாகமாகவும் இருக்கலாம்) ஒப்பந்தம், நேரடியாகவோ அல்லது சூழ்ச்சியின் மூலமாகவோ, எந்த ஒரு வணிகத்தையும் தடை செய்யும் வகையில் இருந்தால் அது சட்டமீறலாகும். எந்த தனிமனிதனோ அல்லது நிறுவனமோ இந்த சட்டமீறை செய்திருந்தால் அவர்களுள் குற்றம் செய்தவர்களாகின்றனர் அவர்களுக்கு சிறை தண்டனையோ , பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்
2. எந்த ஒரு தனி மனிதன் சந்தையை கையகப் படுத்தினாலோ அல்லது திட்டம் போட்டிருந்தாலோ அவர்களுக்கு சிறை தண்டனையோ பொருள் தண்டனையோ இரண்டுமோ தரப்படும்.

பல ஷெர்மன் சட்டத்தின் விதிகள் தற்போதைய நீதிமன்றங்களால் வேறு வகைகளில் பார்க்கப் பட்டாலும் , இந்த சட்டங்களுக்குப் பின்னாலுள்ள நோக்கு கவனத்திற்கு உரியது. சில பல உச்சநீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் போது, இந்த ஷெர்மன் சட்டத்தில் அடிவாங்கிய, தப்பிய வழக்குகளை, பார்க்கும் போது, இந்த நோக்கு ஒரு புரியலையும் , அமெரிக்க வணிகக் கட்டுப்பாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது எனவும் கணிக்க உதவலாம்.

மேலும் படிக்க

Saturday, February 07, 2009

பராக் ஒபாமாவின் பொருளாதார ஊக்கி திட்டம் கீழ் மன்றத்தில் தேர்வாகி, இப்போது மேல் மன்றத்தில் தேர்வாக கூடிய நிலையில், பழமைவாதிகளின் கடும் தாக்குதலுக்கு இடையே நிற்கின்றது, மூன்றே மூன்று யானைக் கட்சியினரின் ஆதரவில். பழமைவாதிகளின் மீது நுனி முதல் அடி வரை வெறுப்பிருந்தாலும், அவர்களிடம் காணும் ஒரு நல்ல (?) குணம், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் தான் எனும் பிடிவாதம். மற்றும் அவர்களிடையே இருக்கும், தன் ஆள் ஒரு திருட்டு விபச்சார (கவனிக்க ரி இல்லை) மகனாக இருந்தாலும், தன் ஆள் என்றால், அவன் பின்னே நிற்கும் அசட்டுத் துணிவு. அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள், தன் ஆளுக்கு ஒரு வாதம் , அடுத்த ஆளுக்கு ஒரு வாதம் என்ற வித்தியாசம் கூட வெளியே தெரியாது வைப்பார்கள். இந்தப் பொருளாதர ஊக்கியை மையம் வைத்து தாக்கி, இதன் செலவுத் திட்டங்கள், ஏழ்மை வகுப்பினர் பலன் பெரும் வகையில் அமைந்திருப்பதும், நிறுவணங்களுக்கான வரி விலக்கு இல்லாமல் இருப்பதும் அவர்களை முழு முடுக்கி வைத்திருப்பது ஒரு காரணம் என்றாலும், மற்றுமொரு காரணம், அவர்களது மூணுகால் பிடிவாதம் தான். அவர்கள் இப்படி ஒரு மித்த எதிர்ப்பைக் காட்டுவதிலிருந்து, கழுதைக் கட்சியினர் கத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது. புஷ்ஷின் பொருளாதார, ராணுவ கொள்கைகளுக்கு ஒத்துப் போன கழுதைக் கட்சியினரின் அளவில் பாதி அளவிற்குக் கூட யானை கட்சியின்ரால் ஒபாமாவிற்கு இனைந்து போக மாட்டார்கள்.

[மன்னிக்க நான் பாட்டுக்கு யானைக் கட்சி / கழுதைக் கட்சி என வார்த்தை சுருக்கத்திற்கு எழுதுகிறேன். கழுதைக் கட்சியினர் என்றால் அது ஒபாமா கட்சியையும் யானைக் கட்சியென்றால் அது புஷ் கட்சியையும் குறிக்கும். "ஜாக் அஸ்" என தேர்தலில் நின்ற, மிக முன்னால் அமெரிக்க அதிபரான அண்ட்ரு ஜாக்ஸனை, தாக்கிய சமயத்தில், டெமாகரடிக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரு, அதையே தன் சின்னமாக கொண்டதால், டெமாகரெடிக் கட்சியினர் சின்னமாக கழுதை ஆனது. ரிபளிகனுக்கு யானை சின்னம் வந்தது ஒரு அரசியல் கார்டூன் மூலமாக. சரி நம்ம கதைக்கு போவோம்.] Aஇப்படி தாராளமயத்தினரும் ( லிபரலுக்கு என்னுடைய தமிழாக்கம்) பழைமைவாதிகள் போல், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்றால் அவர்களும் பழைமைவாதிகள் போல ஆக மாட்டார்களா என்றால் என்னிடம் "நேர்மையான" பதில் இல்லை. இந்த பழமைவாதிகள்/தாராளமயத்தினர் போராட்டம், சுர/அசுர போராட்டம் போல் தான். இனைந்து போக வழியில்லை. இனைந்து போனால் அங்கே அதன் பின் குழப்பம் தான். முழு தாராளமய அதிபருக்கு, அமெரிக்கா அதனுடைய அடிப்படை சுயத்தில், நீண்ட நாட்களுக்கு ஆதரவு தராது. இந்த முதல் இரண்டு வருடங்கலுக்கு எந்தளவிற்கு தாரளமய திட்டங்களை புகுத்த வேண்டுமோ, அந்தளவிற்கு புகுத்தி, அடுத்த இரண்டு வருடங்களுக்கு பழமைவாதிகளின் "வேடம்" போட்டால், மீண்டும் நான்கு வருடங்கள் உறுதி. ஜார்ஜ் புஸ் செய்ததும் அது தான் அவரது முதல் இரண்டு வருடங்கள் எந்தளவிற்கு பழமைவாதிகளின் பொருளாதார/ராணுவ திட்டங்களை புகுத்தமுடியுமோ அப்படி புகுத்தி, பின் அடுத்த இரண்டு வருட தாரளமய வேடம் போட்டு திரும்ப தேர்தலை கையாண்டார். அவரது இறுதி இரண்டு வருடங்களும் அவரை தாராளமய (முக்கியமாக பொருளாதார) அதிபர் என்றே பழைமைவாதிகள் திட்டி வந்தனர்.

இன்றைய வால்ஸ்டிரீட் பத்திரிக்கையில் இந்தப் பொருளாதார ஊக்கியைத் தாக்கி கடுமையான கருத்து வந்துள்ளது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனை பொருளாதாரச் சந்தையில் பணச் சுற்று இல்லாமைதான். வங்கிகளுக்கிடையேயான பணச்சுற்று நின்று அதன்பின் வங்கிகள் அதற்கு அடுத்த தரப்பிற்கு பணச்சுற்றை விட முடியா நிலைமையில் எல்லா பொருளாதார இயக்கங்களும் கரகர வென்று ஆகிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பணச்சுற்று உராய்வு எண்ணையைப் போன்றது என்றே கருதப்படும். இந்தப் பணச்சுற்றை முடுக்கிவிடுவது எப்படி என்பதில் பழமைவாதிகளுக்கும் தாராளமயத்தினருக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. பழமைவாதிகள் பொருளாதார நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதன் மூலம் பணச்சுற்றை இயக்கமுடியும் என்னும் நம்பிக்கை உடையவர்கள் மேலும் அவர்களது அரசியல் பின்புலமும் பொருளாதார நிறுவனங்கள்(சிறிது/பெரிது) சார்ந்தது. தாராளமயத்தினர் காப்பாள அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களது அரசியல் பின்புலமும் காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோர் மூலமே வருவது. அதுவும் ஒபாமா இந்த தேர்தலில் ஒருங்கினைத்தது அப்படி காப்பாள அரசாங்கத்தினைச் சார்ந்துள்ளோரையே . ஆகவே ஒபாமாவின் இந்த பொருளாதார ஊக்கித் திட்டத்தில் பணச் சுற்று ஏழ்மை/இயலாமையிலிருந்து காப்பதற்கான திட்டங்களுடன் உள்ளது என்பது ஆச்சர்யப் படத்தக்கதல்ல. மேலும் அந்தப் பணச்சுற்று "நிச்சயமாக" செலவிடப்படும் என்னும் அடிப்படையில், அப்படி செலவிடப் படும்போது அது ஒரு பொருளாதார ஊக்கத்தைத் தரும். அந்த ஊக்கம் மேலும் வேகமெடுத்து பொருளாதாரத்தை முன்னெடுக்கும் என்பது அவர்கள் கருத்து. நீயுயார்க் டைம்ஸ்ஸில் பத்தி எழுதும், சமீபத்தில் நோபல் பரிசினைப் பெற்ற, பால் குரூக்மன் போன்றார், இதைவிட பெரிதான பொருளாதார ஊக்கித் திட்டத்தினை முன்வக்கின்றனர். குரூக்மேன் ஒபாமா செய்வது பத்தாது என்று வேறு சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். வால்ஸ்டீரீட் போன்ற பழமைவாத எண்ணத் தொட்டிகள் (இது திங் டாங்ககிற்கான கிண்டலான தமிழாக்கம்), இதற்கு நேர் எதிராக அமெரிக்க நிறுவணங்க்ளுக்கு வரிவிலக்கு தருவதல் மூலம், அவர்கள் அந்த வரிவிலக்கான பணத்தை திரும்ப நேரடி கடனாகவோ, கமெபெனி ஸ்டாக் வாங்குவதன் மூலம், பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த முடியும் என்கின்றனர். உண்மையில் வெறும் பொருளாதார அதுவும் மனிதாபிமானமற்ற, முரட்டுப் பொருளாதாரப் பெருக்கம், இந்த இரண்டு குழு சண்டைக்கு வெளியில் எங்கோ இருக்கின்றது. ஆனால் அந்த மனிதாபிமானமற்ற, முரட்டு பொருளாதாரப் பெருக்கம், முடிவில் எந்த மயிரைத் தரும் என எனக்குத் தெரியாது. தற்போதைய பழமைவாத பொருளாதாரவாதிகளும், முரட்டுப் பொருளாதாரவாதிகள் போல் போலி மயக்கம் கொடுத்தாலும், அவர்களும் ஒருவித காப்பாள நோக்கினை ,அதாவது "தற்போதைய" நிறுவனப் பின்புலங்கள் அழிந்துவிடக் கூடாது என்னும் திட்டத்துடனே செயல் படுவர். மனிதாபிமானமற்ற, முழு முரட்டுப் பொருளாதாரம் இயங்கினால் அது விலங்குகள் அரசு. வலிமை மட்டுமே ஜெயிக்கும் இடமாக இருந்தாலும். வலிமையின் அர்த்தங்களும் அங்கே தொடர்ந்து மாறிக் கொண்டு இருக்கும். அதைப் போலவே நிறுவனம் என்பதான அர்த்தங்களும் அதன் பின்புலங்களும் மாறிக் கொண்டு இருக்கும். அந்த நிலமை பழமைவாதிகளுக்கு தாராளமயத்தினரை விட அதிகம் ஆப்பு வைக்கும் ஒன்று

என்னைப் பொருத்தவரையில், எனது ஆதரவு ஒபாமா வழி பொருளாதார ஊக்கிகுத் தான். இது பத்தாது இன்னமும் அதிகம் வேண்டும் என்னும் குருக்மேன் போன்றார் கருத்திலும் என் நம்பிக்கை. புஸ் (புஷ்சைவிட இது நன்றாக இருக்கின்றது) வழி செய்து பார்த்தாகிவிட்டாயிற்று. வரிவிலக்கு பெற்ற நிறுவணங்களும் அதன் அதிகாரிகளும் எந்த மயிரையும் புடுங்கவில்லை ஐந்து ரூபாய் பொருமான உடைய ஒன்றை ஐநூறு ரூபாய் பொருமானம் உள்ளதாக போலி விளையாட்டு காட்டி ஐநூறு ரூபாய்க்கான இடைக்கூலி பெற்றதைத் தவிர. பொது மக்களால் தேர்ந்து எடுக்கப்படும், கூடவே கவிழ்க்கப்படும், அரசியல்வாதிகள் மேல் (எவ்வளவு மோசமானவன் என்றாலும்) நம்பிக்கை வைப்பது, கோல்ஃப் கிளப் கனெக்ச்சன்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவன அதிபர்களை நம்புவதைவிட நிச்சயமாக மேலானது. என்ன பொதுமக்கள் சற்று சுரனையுடனும், குறைந்த பட்ச அறிவுடனும், தன்னைச் சுற்றியிருக்கின்றவன் நலத்தில் அக்கறை(அவன் நிறம்/குணம்/நீளம்/அகலம் சார்ந்து அல்ல)யுடனும் இருந்தால் அரசியலை சுத்தப் படுத்தமுடியும். அதே சமயம் அப்படி இருந்தாலும், கோல்ஃப் கனெக்சன் நிறுவன அதிபர்களை எந்த மயிரும் பிடுங்கமுடியாது

மேலும் படிக்க

Saturday, January 31, 2009

மிகக் கொடுமையாக இருக்கின்றது, எவ்வளவோ முயற்சித்தும், ஈழத்தினைப் பற்றி நினைக்கக் கூடாது என இயலாமையின் உச்சத்திலிருந்து முயன்றாலும் முடியவில்லை. தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுவதுடன் , ஒரு தனிமனிதனாக எப்படி இந்த இயலாமையிருந்தும் வெட்கக் கேடிலிருந்தும் விலகுவது எனத் தெரியாமல் புலம்புவது? குணா படத்தில் தேவடியாகுடியில் பிறந்ததால் வரும் வெட்க்கேடிலிருந்து விலக எண்ணி தன் முகத்தை எப்படி பிய்த்து எறிவது என்பது போல் புலம்பத்தான் வேண்டியிருக்கின்றது. சிறுவயதில் இந்தியா என்றால் எவ்வளவு உன்னதமான விடயம் என நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், 83ல் வந்த பிரச்சனை/காவிரி பிரச்சனையில் காட்டிய மாற்றந்தாய் மனப்பான்மை, சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழகம் மேல் காட்டிய துவேசம், மற்ற தேசிய இனங்களை துச்சமாக மதித்ததைப் பற்றி படித்து அறிந்து, இந்தியா என்பது உன்னதமல்ல அது ஒரு மிகப் பெரிய தேவடியாகுடி, அங்கே ஆள் புடித்து வரும் மாமாக்களுக்கும், விளக்கென்னை ஊற்றி விளக்கு பிடிக்கும் தேமகன்களுக்கும், எவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் தாங்கும், எவ்வளவு துளையிருக்குமோ அவ்வளவு துளையும் காட்டும் மாசாகிஸ்ட் தேவடியாள்களுக்குமே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பது தெரிய சில காலம் ஆனது. இருந்தாலும் தமிழகத் தமிழன் அவனுக்கொரு தனி அறிவு உண்டு, அவன் தூங்குவான் ஆனால் தட்டி எழுப்பிவிட்டால், ஒக்காளி ஊரை ரெண்டாக்கிவிடுவான் என்னும் படியான ஒரு கனவுலக நம்பிக்கையுடன் சில காலம். ஆனால் உண்மையில் தமிழகத் தமிழன் ஒரு கரப்பான்பூச்சியை விடக் கேவலமான ஜந்து என்பதும் தேவடியாகுடி மாமாக்களுக்கே மாமா வேலைப் பார்பவன் என்பதும் புரிய பல காலம் செலவிட்டதுதான் மிச்சம். கடந்த சிலபல வருடங்களாக ஒரு "பாரம்பரிய" மாமாவும், ஒரு தொழில்முறை தேவடியாளும் தான் மயிராண்டித்தானைத்தலைபுடிங்கிபுரட்சிவீங்கிதலைவர்கள் என்னும் பொழுது, வேறு எதையாவது எதிர்பார்த்தால் தலையை ஆராயவேண்டும். ஈழத்தமிழர்களே மன்னிக்க தயவுசெய்து. தமிழகம் என்பது தொப்புள்கொடியெல்லாம் கிடையாது அது ஒரு சாக்கடை அதுவும் மலச்சாக்கடை. நல்லகாலம் பல காலம் முன்னே பிரிந்து விட்டீர்கள் அதானால் தான் உங்களால் போராட முடிகின்றது. போராட்டகுணம் ஒரு வரம் அது உங்களுக்கு இருக்கின்றது. போராடுபவனுக்கு சில தோல்வி வரும் சில வெற்றி வரும் ஆனால் நீங்கள் தொடருவீர்கள். எதைச் செய்தாலும் அது சிங்களனை எதிர்த்தாலும், இணங்கினாலும் ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். தமிழகத் தமிழனைப் போல் ஆகிவிடாதீர்கள் அதைப் போலக் கேவலம் இந்தப் பிறவில் சிங்களனுக்குக் கூட வேண்டாம்.

நன்றி

மேலும் படிக்க

Saturday, January 24, 2009

உச்ச நீதிமன்றக் கதை .....

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆயுட்கால நியமனம் என்பதால் அவர்களது பாதிப்பு அமெரிக்க அரசியலில் அதிகம் ஆனால் அமெரிக்க அதிபர்கள் போல் பூமாலையோ , கல்லடியோ பெறுவதில்லை. அமெரிக்க அரசியல் வழிமுறைகளில் என்னால் ஆழ்மனதளவில் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று இந்த ஆயுட்கால நியமனம். ஜான் ஆடம்ஸ் நியமனம் செய்த ஜான் மார்ஷல், அமெரிக்க நீதித்துறையிலும் அதன் பின் விளைவாக அமெரிக்க அரசியல் அரங்கில் விளைந்த மாற்றங்கள், ஜான் ஆடம்ஸ் மற்றும் அவரது அரசியல் எதிர் தாமஸ் ஜ்ஃபர்சன் அரசியல் அரங்கில் செய்ய முனைந்த மாற்றங்களை விட பாதித்தவைகள். ஆனால் உலகுக்கு ஆடம்ஸையும் ஜ்ஃபர்சனையும் தெரிந்த அளவுக்கு ஜான் மார்ஷலை தெரியாது. ஜான் மார்ஷல் மிகக் குறைந்த வயதில் நியமனம் ஆனாதால் மிக நீண்ட நாட்கள் பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்து குறைந்த வயதில் நியமனம் ஆனவர், தற்போதய முதன்மை உச்ச நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். அவரை நியமித்தது ஜார்ஜ் புஷ். ஜார்ஜ் புஷ் செய்த பல முட்டாள்தனங்களை, பராக் ஒபாமா மாற்றி எழுதிவிட முடியும் , ஆனால் ஜான் ராபர்ட்ஸ்சை ஒன்றும் செய்ய முடியாது. அவர் குறைந்த அளவில் 2030 வரை இதே பதவில் இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. பொதுவாக சுப்ரீம் கோர்ட் அதனது முதன்மை நீதிபதியின் பெயரினாலே குறிக்கப்படும். மார்ஷல் கோர்ட், டானரி கோர்ட், வாரன் கோர்ட், ராபர்ட்ஸ் கோர்ட் என்று. அமெரிக்க அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்தது , சில குறிப்பிட்டு சொல்லக் கூடிய கோர்ட்களினால் தான். கோர்ட்களின் உட்கோட்டமைப்ப்பை அமைப்பது அதிபர்களின் பங்கு. ரீகனும், புஷ்சும்(இரண்டும்) தற்போதைய கோர்ட்டின் உள்மைப்பை பழமைவாதிகள் கை ஓங்குமாறு செய்திருந்தார்கள். ரீகன் நியமனங்கள் முக்கியமாக சாண்ட்ரா ஒ கானர், 2000 தேர்தலை மக்கள் ஓட்டை எதிராளியை விட குறைவாக பெற்றிருந்தாலும் புஷ்ஷை அதிபராக நியமிக்க உதவியாக இருந்தது என ஒரு அரசியல் விவாதம் சொல்லும்.

நாம் அடுத்து பார்க்கப் போவது டானரி கோர்ட். மார்ஷலுக்கு அடுத்து முதன்மை நீதிபதியாக வந்தவர் தான் டானரி. மார்ஷலைப் போலவே, டானரி , அதிபர் அண்ட்ரூ ஜாக்சன் அமைச்சகத்தில் இருந்தவர். நீதித்துறை செயலராக இருந்தவர். அண்ட்ரூ ஜாக்சனின் கொள்கைகளை தொல்லையின்றி கொண்டு செல்ல முதன்மை நீதிபதியாக நியமிக்கப் பட்டவர். அண்ட்ரூ ஜாக்சன் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் படிக்க அறிந்து கொள்ள சுவாரசியமான ஒன்று

டானரி கோர்ட் காலகட்டத்தில் அமெரிக்க பலத்த மாற்றங்களை அடைந்து கொண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும் வளர்ந்து கொண்டிருந்தது. அதே சமயம் அடிமை மறுப்பு விவாதம், அனைவருக்குமான உரிமை என்ன்னும் கொள்கை வடபகுதி மக்களின் ஆதார பிரச்சனையாக வளர்ந்து கோண்டிருந்தது. பூகோள அளவிலும், பொருளாதாரத்திலும், தென்பகுதி அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. அந்த வளர்ச்சிக்கு அடிமை முறை மிகுந்த ஆதாரவாக இருந்ததை யாரும் உணரலாம் அந்த வகையில் அடிமை முறை வேண்டும் என்பது தென்பகுதி அமெரிக்க மக்களைன் வாழ்வாதரவான பிரச்சனையாக இருந்தது.

ஆண்ட்ரூ ஜாக்சனும், டானரியும், பொருளாதார விடயங்களில் தலையிடாமை (அது எந்தளவிற்கு பொது அறத்திற்கு பாதகமாக இருந்தாலும் அதே சமயம் அமெரிக்க அடிப்படைச் சட்டங்களை மீறாமல் இருக்கும் வரை) எனக் கொண்டிருந்தனர். அமெரிக்க சட்டங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உரிமை என கொடுத்து இருந்தாலும், அடிமைகள் மனிதனே இல்லை ஆகவே உரிமை ஏதும் இல்லை என்னும் நீதி ஓடிக் கொண்டிருந்து. இந்தக் கொள்கைப் போராட்டங்கள் தான் பின்னால் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தன.

இந்த அடிமைகள் முழு மனிதனே இல்லை என பார்க்க எப்படி அமெரிக்க சட்டம் வழிதருகிறது என்பது கொடுமைதான் என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்க கூட்டாட்சியினை நிலை நாட்ட வடக்கு மற்றும் தென் மாநிலங்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்கியிருந்தன். அடிமைகளை எப்படி கணக்கிடுவது என ஒரு முக்கியமான பிரச்சனை. அடிமைகளை பொருளாக கணித்தால், தென் மாநிலங்களின் மக்கள் விகிதார அளவு பாதிக்கும், முழு ஆளாக கணித்தால், வரி கணக்கிடுவதில் பாதிப்பு. ஆகவே அடிமைகள் 3 ல் 5 அளவுக்கு மனிதர்கள் என முடிவு செய்து அதை அடிப்படை சட்ட ஆதாரங்களில் எழுதி விட்டனர், அடிமை மறுப்பாளர்களின் எவ்வளவோ எதிர்ப்பையும் மீறி. அந்த விதியைக் காரணம் காட்டியே அடிமைகளுக்கான தனிமனித உரிமைகளை தடுத்து வந்தனர். அந்தக் காலகட்டங்களில் வடக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றாக அடிமை வைத்துக் கொள்வதை தடை செய்ய ஆரம்பித்து இருந்தனர். அமெரிக்க அடிப்படைச் சட்டங்களில், தப்பித்துப் போகும் அடிமையினை, திரும்ப முதலாளி எடுத்துக் கொள்ளும் உரிமையும் இருந்தது. ஆனாலும் அடிமை மறுப்பைச் சட்டமாக எடுத்திருந்த வட மாநிலங்கள், அந்த உரிமையை நிலை நாட்டவில்லை. பென்சில்வேனியா மாநிலம் அந்த வகையில் எட்வர்ட் ப்ரிக்ஸ் என்பவனை அவன் அடிமையை திரும்ப பிடிக்கமுயன்றதற்காக கைது செய்து இருந்தது. அந்த வழக்கு உச்சநீதி மன்றத்துக்கு சென்ற போது டானரி கோர்ட் அவனை விடுதலை செய்தது. இது நடந்தது 1840 களில்.

இதற்கு முன்னதாக 1820ல் வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கும் அடிமை நிலையை முன்வைத்து மக்கள் மன்றத்தில் மேலும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது மிசௌரி மாநிலத்திற்கு வடக்கு மற்றும் கிழக்காக இருக்கும் பிரதேசங்களில் அடிமைகள் வைத்துக் கொள்வதற்கு முழுத் தடையும் அதற்கு கீழ் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களில் எடுக்கும் முடிவும் இருக்கும் என்பது தான் அந்த மக்கள் மன்றத்தின் ஒப்பந்தம். அது மன்றத்தின் சட்டபிரயோகமாக வந்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தை சோதிக்கும் வகையில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. டிரெட் ஸ்காட் என்னும் அடிமை மிசௌரி மாநிலத்தில் இருந்தார். அவரை அவரது முதலாளி, இலியனாய்ஸ் மாநிலத்திற்கும் அதன் பிறகு மினசோட்டா மாநிலத்திற்கும் "எடுத்து"ச் சென்றிருந்தான். அந்த இரண்டு மாநிலங்களும் அடிமை மறுப்பு மாநிலங்கள். பின் அவர்கள் மிசௌரி மாநிலத்திற்கு திரும்பினர். ட்ரெட் ஸ்காட் இப்பொழுது தனது விடுதலைக்காக 1857ல் ஒரு வழக்கு தொடுத்தார். அதற்கு இலியனாய்ஸ் மாநிலத்து அடிப்படைச் சட்டத்தையும், 1820 வந்திருந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகத்தையும் ஆதரவாக வைத்திருந்தார். மிசௌரியில் இழந்து, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது உச்ச நீதிமன்றத்தில் 4 அடிமைமறுப்பு சார்பு இருந்த நீதிபதிகளும், 5 அடிமை வைப்பு சார்பு (டானரியையும் சேர்த்து). பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து நீதியுடன் கருத்தினையும் சொல்வார்கள். அதில் ஒத்துக் கொள்ளாதவர்கள் எதிர்வாதமாக தங்களது கருத்தினையும் வைப்பார்கள். இந்த வழக்கில் அனைத்து 9 நீதிபதிகளிம் கருத்து சொல்லியிருந்தார்கள். டானரியையும் சேர்த்து. டானரியின் கருத்து பெரும்பான்மையினரின் கருத்தாக கருதப்பட்டது. கிழடாகியிருந்த டானரி, அடிமை விடயத்தில் முற்றுப் புள்ளி வைத்து விடுவது என முடிவு எடுப்பது போல் அவரது கருத்து இருந்தது இவ்வாறாக ,

1820ல் வந்த மக்கள் மன்ற சட்ட பிரயோகம் அடிப்படைச் சட்டத்தை மீறியது ஆதலால் செல்லாது. அடிமைகள், அடிப்படைச் சட்டமியற்றிய காலத்தில் "வென்ற" வெள்ளை இனத்திற்கு கீழ் இருக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்தவித உரிமையும், விடுதலை பெறும் உரிமையும் சேர்த்து, கிடையாது. தனிமனித உரிமைகளில் பொருளுடைமையையும் காக்க அடிப்படைச் சட்டம் இருப்பதால், அடிமைகள் பொருளுடமைக்குள் வருவதால், அவர்களை விடுவிக்க எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது

இந்தச் சட்டம் வெளிவந்த பிறகு அடிமை மறுப்பாளர்கள் எதிர்ப்பு அதிகமாக, அடிப்படைச் சட்டங்களைப் பற்றிய நம்பிக்கை கிழே இறங்கியது. வடக்கு தெற்கு பிரிவினை உச்சத்திற்கு வந்தது. இன்னமும் இந்த வழக்கும், இந்த வழக்கின் முடிவும் அமெரிக்காவிற்கு அவமானம் தரக்கூடிய வழக்காக இருந்து வருகின்றது. அதனாலேயே கீழ் வரும் படத்தின் பின் இருக்கும் உணர்வு (symbolism) பலமாக பேசப்பட்டது. கீழே இருக்கும் படம் மிசௌரியில் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் எடுக்கப் பட்டது. பின்னால் தெரியும் கட்டடத்தில் தான் முதலில் டிரெட் ஸ்காட்டின் வழக்கு நிராகரிக்கப் பட்டது.






தொடரலாம்

மேலும் படிக்க

Saturday, January 17, 2009

உச்சநீதிமன்றக் கதை...


அமெரிக்க தேர்தல்களுக்கு முன் இந்தக் கட்டுரை முடிந்தால் நல்லது என நினைத்தது தப்பிப் போய் விட்டது. ஆனால் பராக் வெற்றி, உச்ச நீதிமன்றம் வலது பக்கமாக பலமாக சாய்ந்து விடும் என்ற பயமும் இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு என்பிஆர் ரேடியோவில் மெக்கெயின் அல்லது பழமைவாதிகள் ஆட்சிக்கு வந்தால், உச்ச நீதிபதிகளின் சமன் எவ்வாறு கெடும் , அந்த கேடு எந்தளவிற்கு பாதிக்கும் என்று கேட்டு, உண்மையிலே பயந்து அதை பதிவு செய்ய நினத்ததின் விளவு தான் அந்த கட்டுரையின் ஆரம்பம். இன்று இந்தச் செய்திக் குறிப்பில் கண்ட மார்பரி - மாடிசன் வழக்கைப் பற்றிய பின் குறிப்பு என்னைத் தூசி தட்ட வைத்து விட்டது.

அமெரிக்க ஆரம்பகால வரலாற்றில் கூட்டாட்சியாளர் (Fedaralists) எதிர் கூட்டாட்சியாளர் என வலுவான இரு பிரிவு இருந்தன. ஜான் ஆடம்ஸ் போன்றோர் கூட்டாட்சியாளர்களாகவும், தாமஸ் ஜெஃபர்சன் போன்றார் எதிர் பக்கமும் இருந்தனர். இந்த இரு பிரிவினர் இடையேயான வாதங்கள் தான் அமெரிக்க கூட்டாட்சியின் அடிப்படைச் சட்டங்களை எழுத உதவியது. பரந்த, முற்போக்கான, அரசாங்க கனவைக் கொண்ட, இள ரத்த கூட்டாட்சியாளர்களும், பரந்த அரசாங்கமாக இருந்த பிரிடனிடம் இருந்து சற்றுமுன் தான் விடுதலை பெற போராடிய மாநில மற்றும் மாநில அரசாங்களின் வலிமைக்காக நின்ற அதே சமயம் வயதாகிக் கொண்டிருந்த எதிர் கூட்டாட்சியாளர்களும் நடந்த விவாதங்கள் தான் பின்பு ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ் என்னும் பெயர் பெற்றது. உருவாகி வரும் அமெரிக்க அடிப்படை சட்டங்கள், மாநிலங்களின் சட்டங்களை விட பெரிது என எல்லோரும் ஏற்றுக் கொள்ள அப்பொழுது நடந்த விவாதம் இன்றும் மாறுபட்ட வகைகளில் தொடர்வது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகத் தான் நான் கருதுகின்றேன். இந்த பிரசித்தி பெற்ற தனிமனித உரிமை சாசனமே, எதிர் கூட்டாட்சியாளர்களைச் சமாதானப்படுத்த ஏற்படுத்திய ஒன்று தான். அதே சமயம் இப்படி சமாதானப் படுத்த நடந்த விடயங்களில், கை விடப்பட்ட ஒன்று தான் அடிமை மறுப்பு. தெற்கு மாநிலங்களின் உணர்ச்சிபூர்வமான ஒன்றாக அடிமை வைத்துக் கொள்ளும் உரிமை இருந்த சமயம். பென்சமின் ஃபிராங்களின் போன்ற தீவிர அடிமை மறுப்பாளர்கள், அடிமை மறுப்பை , அமெரிக்க சட்டமாக இணைக்கப் போராடிய சமயம். கூட்டாட்சியாளர்கள் அந்த விடயத்தை கூட்டாட்சியை நிலை நாட்ட, தென் மாநிலங்களில் விலைக்கு வித்து விட்டனர், 70-80 ஆண்டுகளில், அதுவே கூட்டாட்சியையே குலைக்க வைக்க திரும்ப வரும் எனத் தெரியாமல்.

கூட்டாட்சியாளர்களைப் பற்றி இரு வேறு வகைகளில் வரலாற்றாளர்கள் பார்கின்றார்கள், ஒரு வகை, கூட்டாட்சியாளர்கள், மற்றும் எதிர் கூட்டாட்சியாளர்கள் பிரிவினை, கொள்கை கோட்பாடு சார்ந்தது கூடவே அதில் பொருளாதார நோக்கு இல்லை என்றும், மற்றொரு வகை (முக்கியமாக சார்ல்ஸ் பேர்ட்) இந்தக் கூட்டாட்சி கோட்பாடே, பொருளீட்டாளர் நலன்களுக்காகவும், அவர்களுக்கிடையே சட்ட ஒழுங்கினை ஏற்படுத்தவும், மேலும் வலுமையான மத்திய அரசாங்கம் இருந்தால், அவர்களது கடல்வழி வணிகத்துற்கு பாதுகாப்பாக இருக்க வந்ததே எனவும் பார்க்கின்ற்னர். இந்தக் கூட்டாட்சியினர் மற்றும் எதிர் கூட்டாட்சியினர் தான் தற்போது திரிந்து வழிந்து குழம்பி டெமாகிரேட்ஸ் எனவும் ரிபப்ளிகன் எனவும் நிற்கின்றனர்.

முதல் பத்து வருடங்கள் , ஜார்ஜ் வாஷிங்டனின் அரசாங்கத்தில், இரு குழூவினருமே பங்கேற்றிருந்தலில், அமெரிக்க ஆதார சட்டங்கள் பற்றிய விவாதங்கள், மக்கள் மன்றம், மாநில அரசு மற்றும் அதிபர் அரசாங்கத்தினடமே நடந்தது. உச்சநீதிமன்றம் எந்தளவு அதிகாரம் கொண்டது எனத் தெரியாமலே இருந்தது எனலாம்.

அடுத்த அதிபர் ஜான் ஆடம்ஸ் காலத்தில் தான் கூட்டாட்சியாளர்கள் ஆதரவு இழக்கத் தொடங்கியிருந்தனர். டெமாகிரேட்-ரிபப்ளிகன் என்னும் கட்சி வளரத் தொடங்கியது.
அடுத்த அதிபரான ஜான் ஆடம்ஸ் தனது ஆட்சி அதிகாரத்தின் கடை நாட்களில் இருந்த சமயம் அது 1800. அந்த தேர்தலில் தனது ஆட்சியை ஜெஃபர்சனிடம் இழந்திருந்தார். சொல்லப் போனால் மூன்றாவதாக வந்திருந்தார். அடுத்த அதிபர் பதிவியேற்கவில்லை இன்னும். அப்பொழுது உச்ச நீதிபதியாக இருந்தவர் ராஜினாம செய்து விட்டார். உச்ச நீதிபதியாக ஒரு கூட்டாட்சி சார்பாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், தன்னுடைய அரசு நிர்வாகியாக இருந்த ஜான் மார்ஷலையே நியமனம் செய்தார். மேலும் ஆடம்ஸ் தனது ஆட்சியின் கடைசி நாளன்று, நூற்றுக்கனக்கான மத்திய நீதிபதிகளை ( உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல) நியமனம் செய்தார். கடைசி நாளில் அரசு நிர்வாகி ஜான் மார்ஷலும் ஆடம்ஸ்சுடன் இனைந்து நியமதிற்கான காசோலையை கையெழுத்திட்டு அவசர அவசரமாக அனுப்ப வேண்டியதாகியது. சில பேருக்கு காசலை அனுப்பக் கூட நேரமில்லை. நியமனங்கள் தங்கிப் போனன.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜ்ஃபர்சனும், அவரது நிர்வாகியான ஜேம்ஸ் மாடிசனும் தங்கிப் போன நியமனங்களை / காசோலைகளை அனுப்ப மறுத்தனர். அப்படி கிடைக்க இருந்த வில்லியம் மார்பரி என்பர் சுப்ரீ,ம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கோர்டில் உச்ச நீதிபதியாக ஜான் மர்ஷல்.

உச்ச நீதிமன்றத்துக்கு சோதனை. காசோலை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டு அதை ஜ்ஃபர்சன் உதாசீனப் படுத்தக் கூடும். விளைவுகள் கோளாறாக இருந்தன

மார்ஷலின் பரிபாலனை இவ்வாறாக இருந்தது

மார்பரி பக்கம் நீதி இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி பெறவேண்டியது சரியான வழி இல்லை. உச்ச நீதிமன்றம் அரசு இயந்திரங்களுக்கு இடையேயான விவகாரத்தில் நீதி வழங்கும் முழு உரிமையும், மற்ற வ்ழக்குகளில், வழக்கின் முடிவினை "மறுபரிசீலினை" செய்து அந்த வழக்கு முடிவு ஆதார சட்டதின் வழி இருக்கின்றதா அல்லது எதிராக இருக்கின்றதா என முடிவு செய்யும் "அதிகாரம் மட்டும்" இருக்கின்றது.

இதில் மூன்று குழுவினருக்கும் இழப்பு போல், "நீதி இருந்தாலும்" என்று புது நிர்வாகத்துக்கு ஒரு குட்டு, "சரியான வழி இல்லை" என மார்பரிக்கு ஒரு குட்டு, "மறு பரீசீலினை அதிகாரம் மட்டும்" என உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு குட்டு என்பது போல் காட்டி, மறுபரிசீலினை செய்யும் அதிகாரம் என்று ஒன்றை புதிதாக உருவாக்கி, அமெரிக்க நிர்வாகத்தில் தலையை நீட்டி கால்களை அகட்டி உட்கார்ந்து கொள்ள வைத்து விட்டார் மார்ஷல்.

பின்குறிப்பு
இந்த வழக்கில் மார்ஷலுக்கு conflict of interest இருக்குமா?

தொடரலாம்...

மேலும் படிக்க