Sunday, June 12, 2005

இலங்ைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும் என்ற
அந்த எழவை ஏன் படித்தேன் எனத் தெரியவில்லை. அது இந்தியிலோ அல்லது சமஸ்கிரதத்திலோ அல்லது பெங்காலியிலோ அவ்வளவு ஏன் மலையாளத்திலோ எழுதப்பட்டிருந்தால் நான் ஏன் சீந்தப் போகின்றேன்? கருமாந்திர தமிழில் எழுதியதால் படித்து தொலைத்து இந்த ஞாயிற்றுக் கிழமையை புண்ணாக்கிக் கொண்டது தான் மிச்சம். மூன்று பிளாக்குள் படித்தேன். மிக எதேச்சயாக. ஆனால் மூன்றிலும் தொடர்புடைய எதோ ஒரு பொது இணைப்பு சிக்கிக் கொண்டது. முதலில் சாரு நிவேதிதா பிரென்சும் அல்ஜீரியப் போரும் பற்றி பிரெஞ்சுக்காரர்களைப் பற்றிச் சொன்ன ஒரு கருத்து. அந்தக் கருத்தை ஒரு குறையாகச் சொன்னாலும் பொதுவாக ஒரு இனத்தின் போக்கைச் சொன்னதாக எனக்குப் பட்டது. அதுமட்டுமல்ல ஆதிக்கம் நடத்தும் சமயம் போலில்லாமல், தன் இனத்தவர் மற்றோர் தேசத்தில்
சிறுபான்மையினராக இருந்து ஆதிக்கத்தின் கொடுமைக்கு உள்ளாகும் போதெல்லாம் வேறு தேசத்தில் இருப்போர் கொதிப்பாவது மிகவும் ஒரு சாதாரண விடயம் தான உலகளவிலாக. இந்த லெபனாலில் நடக்கும் இன்றையத் தேர்தலாக இருக்கட்டும் அந்த வகை கொதிப்பு வெளிப்படவில்லை? அதற்குப்பின் இந்தப் பதிவு கதை முன்னமே படித்திருந்ததால் தலைப்பு இழுத்துவிட்டது.

சரி நாம் தான் "இந்தியத்" தமிழர்கள் தனிக் குணம் உண்டு என்றாலும் குமறி எழவேண்டாம், கை கொடுக்க வேண்டாம், ச்ச்ச் கொட்ட வேண்டாம், அட அடுத்தவன் துன்பத்தில் சிரிக்கனுமா ஆத்துக்குள்ளாகப் போய் பின் கட்டிலிலாவது சிரிசுண்டு வந்த்ட்டு ஒன்னுமே தெரியாதது போல் வேலை மயிரையாவது பாத்துண்டு போகலாமில்லையா. அதெல்லாம் இல்லாமல் எந்த ஆயுதத்தை ஆதிக்க இனத்திற்குக் கொடுத்து தன் இனத்தைச் சேர்ந்த சிறுபாண்மையினர் அழித்தொழிப்பை விரைவுபடுத்தலாம் என்னும் என்ணம் எப்படி இங்கே வரமுடியும்? இங்கே தான் வருகின்றது அந்தத் "தேவடியாகுடி" என்னும் சொல்லாக்கம்.
பல மாநில பெண்களைக் கூட்டித் தொழில் நடத்திவரும் ஒரு தேவடியாக்குடியில் பிறந்து வளரும் ஒருவனுக்கு அவன் தாய்க்கே ஆள் பிடித்து வரும்போது ஏதேனும் வலியோ குறுகுறுத்தல்களோ இருக்க வாய்ப்பிருக்கின்றதா? அந்தத் தேவடியாக்குடியில் இருக்கும் மற்ற பெண்களாக இருக்கட்டும் அல்லது அவனது தாயாகவே இருக்கட்டும் அவர்கள் மீது பரிவு இரக்கம், காயம் மற்றும் வலியைப் பற்றின அவனது உணர்வுகள், நம்பிக்கை இழப்பு இவை மீதான அவனது உணர்தல்கள், இந்தத் தேவடியாகுடிக்கு வெளியே இருப்பவர்களின் உணர்தல்களொடு இயந்து வருமா? இயந்து வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லை? இந்த என் முட்டாள்தனத்தை நொந்ததாலே இந்தச் சிறு பதிவு.

உண்மையில் இந்தப் படிமம் எனக்கு பலவற்றை அர்த்தப்படுத்தியுள்ளது. இந்த இந்தியத் தேவடியாக்குடியிலும் நடப்பது இது தானே? இங்கே தானே தாய் மொழியைப் பற்றி பேசினவன் நாயாகின்றான்? "அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுத்து விளக்கெண்ணை தடவி கூடவே வாழையிலை பீயள்ளும் மகன்களுக்குத் தானே இங்கே ஞானபீடம்? ஒருத்தன் பின்னால் ஒருவன் ஏறுவதும் அவன் பின்னால் இன்னொருவன் ஏறுவதும் தானே இங்கே சுவாரசியம் தரும் வாழ்க்கை அனுபவம்? இந்தச் சமுதாயம் ஆயுதம் தர யோசிக்காமல் வேற எந்த எழவை யோசிக்கும்?

6 comments:

Vaa.Manikandan said...

ஆனந்தன்,
நான் இந்தியத்தமிழன் எல்லாம் இல்லை.தமிழன்.மற்றவர்களின் அவதானிப்பை பெற வேண்டும் என இப்படி எல்லாம் எழுதுகிறார்கள இல்லை உண்மையாக எழுதுகிறார்களா என புரியவில்லை.நான் அந்த வலைப்பதிவுக்கு மறுமொழி தர விரும்பவில்லை.எப்படியோ ஒரு "காட்டு காட்டி" விட்டீர்கள்.என் வலைப்பதிவு உங்களுக்கு உதவியதில் சந்தோஷம்.

Anonymous said...

all i can say you dont know about the real srilankan tamils...they are number one frudulent people...
on particularly Jaffna tamils...
dont think that you are the one has big concern about tamils in the world.

as far as my UK experience...plz dont support srilankan jaffna people at any cost...they not at all quality people to help at any form.

Anonymous said...

சம்பந்தப்பட்டவர்கள் இப்பதிவைப் படிப்பார்களா? நல்ல ஹிருதயமில்லா அவர்கள் இதனைப் படிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

Thangamani said...

நன்றிகள் ஆனந்தன். எருது புண் காக்கைக்குத் தெரியுமா? வலைப்பதிவு அப்படீங்கற குட்டிக் குளத்துலேயே இத்தனை பாம்புகள் இருந்தா, வெளியில எத்தனை இருக்காது...

இதுல பச்சாதாபம் வேற. கொஞ்சம் கூட அருவருப்பாய் இருக்காதோ?

மு. சுந்தரமூர்த்தி said...

அனாதை ஆனந்தன்,
நீங்கள் குறிப்பிட்ட பதிவை எழுதியவர் முதலில் அரசியல் பகிடிகள் எழுதி ஓரளவு ரசிகர்கள் சேர்ந்தவுடன் இதை எடுத்துவிட்டிருக்கிறார். இதை எத்தனை தடவை தான் சுட்டிக்காட்டவோ தட்டிக்கேட்கவோ முடியும்? செய்யாவிட்டாலும் இன்னும் நாலு பேர் இதே மாதிரி எழுத ஆரம்பித்துவிடுவார்கள். என்ன பண்ணித் தொலைக்கிறது?

ROSAVASANTH said...

do you check your yahoo mail account, otherwise pl do.