Sunday, January 30, 2005

இன்று வலைப்பதிவுகளில் உலா வந்த போது உள்ளத்தில் பட்டென்று பட்டது. ஆஹா. சில மாதங்களுக்கு முன் இந்தப்பதிவுகளில் ஒரே புளித்த தயிர் சாதமும் நார்த்தங்கை ஊறுகாய் வாடையும் அடித்துக் குமட்டியது. இப்போது சற்று மாறுதலுடன் அங்கங்கே மதுரை முனியாண்டி விலாஸ்களும் கண்ணில் படுகின்றது. பிரதிநிதித்துவம் என்பதில் எனக்கு அதிக ஈடுபாடு. பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய ஜ்னநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் வலைப்பதிவுகளில் சற்று முன்னேற்றம். இன்னமும் இது பல அனுபவங்களை கொண்டு வரவேண்டும். இப்பொழுதைய சுனாமி விடயத்தையே எடுத்துக் கொண்டாலும்சுனாமியை அடுத்த நாள் பேப்பரில் சந்தித்தவர்களும், புரளிக்கு பயந்து ஓடியவர்களின் காமெடிச் சோகப் புராணங்களும் இல்லாவிட்டால் சுற்றுலா போய் மாட்டியவர்களின்குரல்களும் தான் உள்ளனவே ஒழிய நேரடியாக சுனாமியை தன்னுடை வாழ்வில் சூறையாட விட்டவர்களின் குரலைக் காணமுடியவில்லை. அதற்குஇன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ.


இரண்டு சங்கராச்சாரி கைது ஆனது இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என முதல் முதலில் கைது விடயம் பட்ட போது புலப்படவில்லை. விடயம்உள்ளே இறங்கச் சற்று நாள் பிடித்தது. பேரம் முடிந்த வுடன் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். சுந்தரேசனும் ரகுவும் குண்டர் சட்டத்தில் அடைபட்ட பிறகு தான்சரி இது பேர எல்லைகளை தாண்டி விட்டது எனப் புலப்பட்டது. முன்னெல்லாம் (மு)நண்பர் ரோசாவசந்த் சொல்வது போன்ற குட்டி பூர்ஷ்வாக ரத்த அழுத்தத்தையெல்லாம் சமன்படுத்தி உலாவும் போது கையில் தட்டுப்படும் துக்ளக் அழுத்தத்தை எகிறி மேலே அடிக்கும். இப்பொழுதெல்லாம் மனது குதூகலிக்க http://groups.yahoo.com/group/Thuglak/ மற்றும் http://www.kanchiforum.org/ இங்கே செல்லுகின்றேன். உண்மையிலேயே மனது லேசாகிறது. முன்னே வரும் கடும் கோபம் , "இந்த சமயத்தில்" வருவதில்லை. அந்த யாகு குழுமத்தில் இரண்டு வலைப்பதிவாளர்கள் உறுப்பினர்கள் இருப்பதைப் பார்த்தேன். ஒருவர் முன்னாள் காப்பிகடை ஓனர். காஞ்சி மடத்து சீடர். காஞ்சி மடம்+ ஜெண்டில்மேன் டைரக்டர் + ஜீன்ஸ் + இவர் + பணம் என ஒரு கோட்டோவியம் போடலாம். சரி பெரிய இடத்து விவகாரம். இன்னொருவர் ஓ******ப் பொருளை ஓ*****ப் போகிறேன் சவடால் பார்ட்டி. இவர்கள் சோகத்தில் மனது குதூகலிக்க சங்கடமாக உள்ளது.மனதார வெறுக்கும் ஒரு விடயத்தைப் போல மனதின் ஒரு பகுதி ஆகிவிடும் என்பதை உணர அதிர்ச்சியாக இருக்கின்றது. தன் உறவு இல்லாத மற்றோரின் இறக்கங்களில்/துன்பங்களில் சந்தோசம் அடைவது பார்ப்பனாதிகளின் அடிப்படைக் குணம். ரிக் வேதத்தில் இருந்து ஊறக் கூடிய ஒரு அடிப்படைக் குணம் இது. அந்த அடிப்படைக் குணத்தை என்னிடம் காண்பது என்னைப் பொறுத்தளவில் பேரடியாக இருக்கின்றது. அந்தளவுக்கு ஒரு புளகாங்கிதத்தை இந்தக் கைது தருகின்றது. நான் மட்டுமல்ல இன்னமும் சமுதாயத் தளங்களில் நான் நிற்கக்கூடிய பக்கங்களில் நிற்கக்கூடியவர்களிடம் இந்தப் புளகாங்கிதம் ஊறுவதை உணர முடிகின்றது. இந்தப் புளகாங்கிதம் இரண்டு வகைகளில் துன்பம் தரக் கூடியது. ஒன்று முதலில் இந்தக் கைது கீழிறப்பட வேண்டிய அல்லது சரியாகச் சொன்னால்சமனடிக்கப்பட வேண்டிய நிலையின் மட்டம் அல்ல என்பது. அடுத்து எந்தளவுக்கு தனிப்பட அளவில் போராடி உள்ளே ஊறுத் தொடங்கும் பார்ப்பனீயத்தை அறுத்தெறிய வேண்டி இருக்கும் என்பதைப் பற்றியது. இது இப்படி என்றாலும் இன்னொரு சாத்தான் மனதுசொல்லுகின்றது. மீசை அறும்பத் தொடங்கிய 83ல் சங்கடப்பட ஆரம்பித்த மனது ஒவ்வொன்றாக மற்ற எல்லா ஓட்டை ஒடிசல்களையும் பார்க்கும் திறன் வந்து சங்கடத்திலே இருந்ததற்கு இந்த மாதிரி மனது குதூகலிக்க(போலித் தனமாகவே இருந்தாலும்) சான்ஸ் கிடைப்பதே கொஞ்சம். கிடைச்சதை எந்தவித சங்கடமும் இல்லாமல் அனுபவித்து விடனும். பின்விளைவுகளை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறது. என்ன செய்வதென்று புரியவில்லை.


சில நாட்கள் முன் டீசே தமிழனிடம் அவர் அவரது நண்பரிடம் கேட்ட கேள்விகள் என்ன என ஏதோ விவாதத்தில் கலந்து கொள்ள போகிறவன் போலக் கேட்டேன். அவரும் பொறுமையாக அடித்துக் கொடுத்தார். பதிலே சொல்லவில்லை.அது குறுகுறு என, இப்போழுது தெரிந்ததை அடிப்போமே என ஒரு எண்ணம்.


1. திராவிட எழுச்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலையென்ன?
திராவிட எழுச்சி என்பது நடந்தாக வேண்டிய ஒரு கட்டாயம். அந்த எழுச்சியை இலகுவாக்கியது, அறிவு சார் இயக்கமாக மாற்ற முயன்ற ஈவெராவின்தொண்டு. ஈவெராவின் கடும் உழைப்பை, தள்ளாத வயதான கால்த்தில் நீரிழிவு நோயுக்கு உள்ளான போதும் கூட குறையாத உழைப்பை,அண்ணாத்துரை கோஷ்டியினர் சுலபமாக அறுவடை செய்தனர். அதிகாரத்தில் பங்கீடு புக இது நேரமல்ல என கடுமையாக உணர்ந்து எதிர்த்த போதும், அதிகார மோகம் திராவிட எழுச்சியை நடுத்தர சாதியினர் எழுச்சியாக மாற்றியது. அதுவே கடை சாதியினர் மேல் எழுந்து வர பெரும் தடையாக இப்பொழுது உள்ளது. 1850-1920 வரை தலித்துகளின் குரல் தனிப்பட்டு இருந்தது. ஆனால் அதுவே 80களில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும்வரும் வரை காத்திரக்க வேண்டியிருந்தது. இந்த அளவு தடை இருந்தது எதனால் என்பது ஆராயப்படவேண்டும். 62ல் திமுகா எதிர்கட்சி அந்தஸ்தைபிடிக்கும் வரை இருந்த முக்கியமான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் இயக்கம் இவர்களை வளைத்து பிடித்து தனித்து வளரவிடாமல் ஆக்கியதா அல்லது திமுகாவின்வளர்ச்சி ஏற்படுத்திய நடுத்தர சாதியினரின் திடீர் எழுச்சி கொடுத்த அச்சத்தில் காங்கிரஸ் இயக்கம் இவர்களை பாதுகாக்கிற போர்வையில் தனித்து வளரமுடியா நிலை ஏற்பட்டதா? பார்பனியதின் ஆணிவேர் சுதந்திர இந்தியாவில் செழிக்கக் காரணமான காந்தியுடனாவது தலித் இயக்கக் குரல் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்தில் ஈவெராவுடன் அவர் இயக்கத்தின் உச்சத்தில் இருந்த போது அவருடன் தலித்திய குரல் ஏதேனும் டயலாக் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. ஈவெராவுடன்நெருங்கிய தளத்தில் இருந்தவர்கள் எல்லாம் மற்ற மேல்சாதிக் கூட்டம் தானே ஒழிய தலித்திய சாதிகளின் வாசனை இருந்ததாகவேத் தெரியவில்லை. அண்ணாத்துரையைவளர்த்தது போல் இணையான ஒரு தலித்திய ஆளுமையையும் ஈவெரா வளர்த்திருந்தால் நல்ல வளர்ச்சி இருந்திருக்கலாம். "லாம்" தான். கருணாநிதியை அருகில் வைத்திருந்ததிலேயே ஈவெராவிற்கு ஒரு தலித்திய நபரை அருகில் வைத்திருந்ததற்கான மனசாந்தி கிடைத்திருக்கும் என ஊகிக்கலாம், கருணாநிதி முதல் அமைச்சரானவுடன் பேசிய வார்த்தையிலிருந்து.அது கருணாநிதியை பலகாலம் உறுத்தியது என்று எங்கோ படித்திருந்தேன். ஆனால் கருணாநிதியின் சாதியோ உண்மையான தலித்திய சாதி அல்ல. மேல் ஜாதியினருடன் நேரடியான மற்ற நடுத்தர சாதியினருக்கு கூட கிடைக்காத ஒரு தளத்தில் தொடர்பு இருந்தது. மேல் ஜாதியினருக்கு கிடைத்தபணம் அறுவடை செய்ய எளிதான புதிதாகத் தோண்றிய சினிமாத் துறையில், இசை நடனம் போன்ற அந்த காலகட்டத்தின் முக்கிய அம்சத்தை கைக்குள் வைத்திருந்த சாதி. சுருக்கமாகச்சொன்னால்திராவிட எழுச்சி நடுத்தர வர்கம் மற்றும் பார்பனர் இல்லாத மற்ற மேல்சாதியினரில் எழுச்சி மட்டுமே.


2. சாதீய ஒதுக்கீட்டில் கல்வி, வேலை போன்றவை யாரால் கிடைத்தது? அல்லது பத்துவீத பிராமணருக்கே அதை முழுதும் தாரை வார்த்துக்கொடுப்பதா உங்களது நிலைப்பாடுபத்து சதவிகித பார்பனர் அல்ல தமிழ்நாட்டில் அந்த அளவு இன்னமும் குறைவு. 1917ல் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பிறப்புக்கு முன் இருந்த பார்பனரல்லாதோர்சங்கத்தின் முயற்சியால் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு சட்டமானது.


3. அரசியலில் யாரும் பங்குபெறலாம் என்ற ஓர் நிலைப்பாடு எங்கிருந்து முளைத்தது?
வெள்ளைக்காரன் புண்ணியத்தில். அன்னிபெசண்ட் என்பவரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள், முக்கியமாக கடைசியாக செத்துப் போன சங்கராச்சாரியும் குழுவும்வருணாஸ்ரமத்தை காரணம் காட்டி நாலாம் வருணத்தினரை முற்றாக அரசியலில் பங்கு பெற விடாமல் செய்ய முனைந்ததை தீவிர மாக எதிர்க்க தோன்றிய பார்பனரல்லாதோர்சங்கம் வைத்த கோரிக்கைகளை வெள்ளைக்காரன் ஒத்துக் கொண்டதால். இது கூட வெள்ளைக்காரன் ஆஷைக் கொள்ள ஒரு ஆழ்மன தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.


4. சா¢. சினிமாவில் சீரழிவை விடுவோம்,, அங்கும் திராவிட பாதிப்பு இல்லாவிட்டால் யாருடைய கைஓங்கியிருக்கும்?
திராவிட பாதிப்பு இல்லாவிட்டிருந்தால் ஹிந்திப் படங்கள் கோலேச்சியிருக்கும். ஹிந்தி முதலாளிகள் அறுவடை செய்து கொண்டு இருப்பார்கள். இணையத்தில்பார்பான்கள் எல்லாம் உங்களிடமும் என்னிடமும் ஹிந்தியில் பதில் சொல்லுவார்கள் , தமிழ் பதிவென்று போட்டுக் கொண்டு. வேறென்ன?


5. திராவிடக்கட்சிகளின் போதாமையால்தான் தலித் அரசியல் தோன்றியது எனலாம். திராவிட எழுச்சி என்ற ஒரு சின்ன ஏணியில்லாமல் எவ்வாறு அடித்தளமக்கள் இந்தளவு (மிகச்சிறிதளவெனினும்) எழுச்சியுறமுடிந்திருக்கும்?
திராவிட என்னும் போர்வையில் எழுந்த இந்த நடுத்தர சாதியினரின் எழுச்சி எந்தவகையிலும் தலித்திய எழுச்சிக்கான ஏணி அல்ல. சொல்லப்போனால்பெரும் தடை. நடுத்தர எழுச்சியும் தலித்திய எழுச்சியும் ஒன்றாக் ஒரே தளத்தில் நடந்திருக்க வேண்டும்.


6. திராவிட இலக்கியங்கள் குறித்து எனக்கும் கிட்டத்தட்ட உங்களின் பார்வையே. அவர்களின் பலரே சொல்லியிருக்கிறார்கள். தங்களுக்கு எழுத்து பிரச்சாரமாக§வு இருந்ததென்று பாரதிதாசன்கூட கம்பராமாயணத்தை நிராகா¢க்கவில்லையென எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைவு. பாரதியின் சுதந்திரக்கவிதைகள் உங்களால் விரும்பப்படுமெனின் பாரதிதாசனின் தமிழ்த்தேசிய எழுச்சி.
சாகா இலக்கியங்கள் என்பதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது. வெற்றிபெற்ற இனத்தின் வரலாறே பொது வரலாறாவது போல் வெற்றி பெற்றஇனத்தின் இலக்கியங்களே சாகா இலக்கியங்களாகக் காட்டப்படுகின்றது. எனக்கு ஆதியும் அந்தமும் அழிந்த போன, எவருடயது எனத் தெரியாமல்கிடைக்கும் இலக்கியத்தில் சற்று ஆவல் உண்டு.பாரதி பாரதிதாசனெல்லாம் அந்த அந்த காலகட்டத்தின் தெறிபுகளே ஒழிய வேறொன்றுமில்லை.பாரதி ஒரு சிலருக்கு ஒரு அடையாளம் , பாரதிதாசனும் வேறு சிலருக்கு ஒரு அடையாளம் அவ்வளவே.

9 comments:

இளங்கோ-டிசே said...

அன்பின் ஆனந்தன்,
வலைப்பதிவுகளில் உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாகவிருக்கிறது. எனது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளையும் ஒருபொருட்டாய் நினைத்து பதிலளித்ததற்கு நன்றி. இன்றைய பொழுதில், திராவிட இயக்கம்/ஏணி என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமாட்டேன் என்று நம்புகிறேன். நாலைந்து வருடத்திற்கு முன் எழுதப்பட்ட இந்தக்கேள்விகளைப்பார்க்கும்போது ஒருவித கூச்சமாயும் இருக்கிறது.
நிற்க.
இங்கே வலைப்பதிவுகளிலும், இன்னும் வேறிடங்களிலும், திருமாவளவனின் கட்சியை ஒரு சாதிக்கட்சியாக எழுதப்படும் எழுதுக்களைப் பார்க்கும்போது கோபந்தான் வருகிறது (கோபத்தை அந்தந்த வலைப்பதிவுகளில் பின்னூட்டமாய் காட்ட விருப்பமிருப்பினும், ஏற்கனவே பட்ட சில அனுபவங்கள் தடுக்கிறது). தமிழ்ப்பெயர் சூட்டல்/தமிழ்ச்சினிமாவிற்கு தமிழில் பெயர் சூட்டல் என்பவற்றில் சில அபத்தங்கள் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அதுகுறித்து எதிர்விமர்சனம் எதுவும் என்னிடமில்லை. இவ்வளவு காலமும் எத்தனையோ 'நல்ல விடயங்கள்' நடந்துவிட்டது, சத்தம் போடாமல்தானே இருந்தோம். கொஞ்சம் பொறுத்திருந்துதான் மிதைப் பார்ப்பதால் குடியன்றும் முழுகிப்போகாது.
ஆனால் எழுதுபவர்களில் எல்லாம் இந்த சாதிக்கட்சிக்காரர்கள் இதில் தலையிட என்னவேண்டிக்கிடக்கிறது என்று எழுதும்போது என்னவென்று சொல்வது? ஏதோ திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகளை தொடங்கமுன்னர் தமிழகத்தில் சாதி இல்லாதமாதிரியும், இப்போதுதான் திருமாவளவனால் சாதி வந்துவிட்டதென்றும் என்பதுமாதிரியும் எழுதுகின்றார்கள். சினிமாவில் அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு அழுதழுது எல்லாம் எழுதுகின்றவர்கள், இன்றும் கர்நாடகத்தில் புதுப்படங்கள் வெளியிடமுடியாத நிலைபற்றி எந்தக்குறிப்பையும் எழுதியதாய் நினைவினில்லை.

ROSAVASANTH said...

அநாதை,

உங்களுக்கு என்னுடன் பேச விருப்பமிருக்கிறதா என்று தெரியாது. எப்படியிருப்பினும் பொதுவாய் எத்தனையோ வலைபதிவுகளுக்கு பின்னூட்டமளிப்பது போல் அளிக்கிறேன். நான் கொஞ்சம் கூட ஒத்துபோகாத பதிவுகளுக்கு கூட ஒரு சமரச சமன்பாட்டுடன் பின்னூட்டமிடும்போது, பெருமளவு ஒத்துபோகும், உங்கள் பதிவின் இருப்பை இங்கே முக்கிய தேவையாய் கருதும்போது, இங்கே எழுத எனக்கு பிரச்சனையில்லை.

இன்று இப்போதுதான் தமிழ் மணம் பக்கம் வருகிறேன். வந்தவுடன் இந்த பதிவைத்தான் முதலில் படிக்கிறேன். டீஜேயின் பதிவில் போட்ட பின்னூட்டம், ஒரு திரித்தல் வேலையை முன்வைத்த்து திராவிட இயக்கத்தை நிராகரிப்பதை எதிர்கவே! மற்றபடி நீங்கள் முன்வைத்தது போல் விமர்சனங்கள் வரவேண்டும். எனக்கு இந்த பதிவுடன் முரண்பாடு உண்டு. தெளிவாய் வேறுபடுவதை சொல்லமுடியும், என்றாலும் அது அத்தனை முக்கியமில்லை. என் போக்கில் அதை ஒரு நாள் எழுத உத்தேசம் உண்டு.

நமக்குள் ஏற்பட்ட சண்டைக்கு அற்பமான பல காரணங்கள் இருப்பினும், திராவிட இயக்கத்திற்கு குறிப்பாய் பெரியாருக்கு எஃபெக்டே இல்லை என்பதை எதிர்பதிலேயே தொடங்கியது. இப்போது உள்ள தொனியில் எழுதியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது என்று நினைக்கிறேன். (இது என் பக்கம் தவறில்லை என்று நியாயபடுத்த அல்ல. கருத்துரீதியாய் எனக்கு என்ன பிரச்சனை என்று சுட்டிகாட்டவே!)

நீங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதவும்! (வார்த்தைகள் சிலதை விட்டது தவறுதான். மீண்டும் எதையும் கிளர விரும்பவில்லை.) நல்ல பசியில் அவசரமாய் தட்டிகிறேன். மீதி இருந்தால் பிறகு!

ROSAVASANTH said...

இந்த ஈவேரா ஈவேராங்கறத கொஞ்சம் வேறு பெயரை முயற்சி பண்ணகூடாதா? புரியுது, பெரியார்னு சொல்ல விரும்பலைன்னு. ஆனா ஈவேரான்னு படிச்சா எரிச்சலா இருக்கு. இந்த ராமசாமி, ஈரா,அல்லது வேரா இப்படி எதாவது, ஒரு வித்தியாசத்துக்குத்தான்! இது குசும்பா நினைச்சா சொல்ல ஒண்ணும் இல்லை.

மற்றபடி இது வொயிட்மெயிலோ, அல்லது வேண்டுகோள் கூட இல்லை. எல்லா பின்னூட்டம் போல சொல்லப்படும் ஒரு கருத்து. நன்றி!

அனாதை ஆனந்தன் said...

ã÷ò¾¢,

ÌØÅ¢ø §ºÕŦ¾øÄ¡õ ´Õ À¢Ãîº¨É þø¨Ä óñÀ§Ã. ஸ்பெசல் கேட்டகிரி நபர்கள் இருவரை அங்கு பார்த்ததில் ஒரு கிண்டல் அவ்வளவே.

褼,

¾¢ÕÁ¡ÅÇÅý 1940¸Ç¢ø þÕó¾¢Õ츧ÅñÎõ என்பது என் ஆசை. þó¾¢Â¡Å¢§Ä§Â §Á¡ºÁ¡É º¡¾¢ ¬¾¢ì¸õ ¯ûÇ Á¡¿¢Äõ ¾Á¢ú¿¡Î ±ýÀÐ என் எண்ணம். அதே போல இந்த விடத்தில் விழிப்புணர்வும் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான்.

ரோசாவசந்த்,

உங்களுடன் உரையாடுவதில் எனக்கென்ன கஷ்டம் இருக்கமுடியும்? தமிழ் பதிவுகளில் நீங்கள் வந்தபிறகு தான் ஒரு வெளிப்படையான போக்கு நிலவுகிறது. அத்ற்கு முதலில் ஒரு நன்றி. பழைய சண்டைகளில் எனக்கும் ஆகப்போவது என்ன?முதல் நாள் ஆத்திரம் வந்தது. பிறகு சிறிது வருத்தம் இருந்தது. பின் அதுவும் போய்விட்டது. அந்த (மு) போட்டது கூட ஒரு தற்காப்புக்குத் தான். மற்றபடி தெளிவாய் வேறுபடுகின்றேன் என்று சொல்வதை இங்கேயோ உங்கள் பதிவிலோ போட்டால் படிக்க ஆவலாய் உள்ளேன்.

பெரியார் என மாற்றிக் கொள்ளுவதில் ஒரு ஆட்சேபனையும் இல்லை. சிறுபிள்ளைத்தனம் இருந்தாலும் வறட்டுப்பிடிவாதம் எல்லாம் கிடையாது.

நட்புடன்,
அனாதை

ROSAVASANTH said...

நன்றி அநாதை. மேலே அது குறித்து பேசுவது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பெரியார் என்று மாற்றிகொள்ளவெல்லாம் தேவையில்லை. வேண்டுமென்றே 'ஈவேரா' என்று வலிந்து சொல்வதில் உள்ள வெறியை வேறு பல இடங்களில் பலரிடம் பார்பதால், சொல்ல தோன்றியது.

வேறுபடும் இடங்கள் குறித்து நிச்சயம் பேசுவேன். அது அத்தனை முக்கியமில்லை. இப்போது இந்த 'சாதி பேசாமலிருக்க விரும்புபவர்களின்' சாதி வெறி குறித்து எழுத தோன்றியது. அதாவது திருமாவளவன்(ராமதாஸை கூட விட்டு விட்டு திருமாவின் மீது மட்டும் பாய்வதை கவனிக்கவேண்டும்) கிளப்பிய பிரச்சனையை வைத்து வரும் பதிவுகளை பார்த்தால் கோபம் தாங்கமுடியவில்லை. கோபத்தில் ஏதாவது சொன்னால் அதை பிடித்து எளிதில் தொங்கிகொண்டு, தாங்கள் சொன்னதை நிறுவிவிட்டதாய் நினைத்துகொள்ளகூடும்.

தெளிவாய் கருத்துக்கள் என்னிடம் இல்லை, அதாவது வார்த்தைகள் வடிவத்தில் இல்லை. ஆனால் இப்போது திருமாவை கலாய்பது சாதிவெறி என்பது மட்டும் தெரிகிறது. எழுத முடிகிறதா என்று பார்க்கலாம்.

அன்புடன்...

Anonymous said...

அனாதை அவர்களே,

பின்னூட்ட எழுத்தளவை கொஞ்சம் உயர்த்த முடியுமா? உங்கள் பதிவிருந்து வேறுபடுத்தக் காட்ட வேண்டுமென்றால் பதிவின் எழுத்தளவையும் ஒரு நூலிழை உயர்த்துங்கள்.

மு. சுந்தரமூர்த்தி

Narain Rajagopalan said...

சிலநாட்கள் கழித்து இன்றுதான் இந்த பதிவினைப் பார்த்தேன். உங்களோடு பல தளங்களில் ஒத்துப்போகிறேன். நிற்க. இங்கு, சினிமாபிரச்சனைப் பற்றி பேசுதல் உகந்தது இல்லையெனினும், அதனைப் பற்றிய ஒரு பதிவினை பதிந்திருக்கிறேன் என்ற முறையில் அதற்கு அவசியமிருக்கிறது என்று நினைக்கிறேன். மேலும், என்னுடைய பதிவு எவ்வித சாதியரீதியிலான தாக்குதலில்லை என்பதை விளக்கவும் இதனை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறேன்.

திருமாவளவனின் கருத்துகள் மீது எனக்கு தனிப்பட்ட கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், இன்றைய சூழ்நிலையில் திருமாவின் இருப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வசந்த் சொல்வதில் எனக்கும் உடன்பாடே. திருமாவை முன்னிருத்தி, ஒரு தனிநபர் தாக்குதலாய் துவங்கி, அதனை தலித்திய அடக்குமுறையாக, எதிர்ப்பாக மாற்றுவது எல்லா தளங்களிலும் நடைபெறுகிறது. என் பதிவில் நான் கூறியிருப்பது அனைத்துமே அங்கத ரீதியிலானது மட்டுமே, அதுவும் என் கோவம் ராமதாஸின் மீதே அதிகமாய் இருக்கிறது.

ROSAVASANTH said...

Narain, eventhough I think your post was not needed, I was not pointing at your post. I was only talking abt other views, which came out, by putting forward Thiruma. I will make my points clear. I started writing something. But it is difficult to continue and finish now. It will happen in few weeks.

அனாதை ஆனந்தன் said...

சுந்தரமூர்த்தி,

கமெண்ட்ஸ் அளவைச் சற்றுக் கூட்டியிருக்கின்றேன். தற்போதைய அளவு சரியாக இருக்குமென்று ஒரு நம்பிக்கை.

நாராயன்/ரோசாவசந்த்,

திருமா தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து போராடுவற்கு என்ன தவறு எனத் தெரியவில்லை. அதையே தமிழக அரசு சட்டமாகச் செய்தால் அதைப் பாசிச சட்டமாகத்தான் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் பலத்த வித்தியாசம் உண்டு. இந்தப் போராட்டத்தை விமர்சிப்பவன்கள் எவனுக்கும் பலகாலமாக கர்நாடகத்தில் தமிழ்ப்படங்கள் முதல் மூன்று மாதத்திற்கு வெளியிடக்கூடாது என்று சட்டமாக உள்ளதின் பாசிசம் தெரியவில்லை என்றால் அதை விட இரட்டை வேடமும் குள்ளநரித்தனமும் திருட்டு கிகாலோத்தனமும் இருக்கமுடியாது.